வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!

Go down

லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்! Empty லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்!

Post by தருண் Sun May 03, 2015 6:30 pm

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த சில வருடங்களாக முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த முதலீட்டு வழிமுறையாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் சமீப காலமாக முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. பங்குச் சந்தை எப்போதெல்லாம் ஏற்றம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்வது கடந்த காலங்களில் மட்டுமல்ல, இப்போதும் நடந்து வருகிறது. கூடவே கடன் மற்றும் பங்குச் சந்தை முதலீடு கலந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடும் கடந்த ஓராண்டில் பல திட்டங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள் பற்றி இனி விளக்கமாகப் பார்ப்போம்.

லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்! P30a

இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள் பெயருக்கு ஏற்றாற்போல் முதலீட்டாளர்களின் பணத்தில் ஒருபகுதியை பங்குகளிலும் மற்றொரு பகுதியை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் வழிமுறையை கையாளுகின்றன.

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பலவகைகள் இருக்கின்றன. ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களின் முதலீட்டு அளவு மாறும்போது வெவ்வேறு வகையாக மாறும். கடன் பத்திரங்களைவிட ஈக்விட்டியில் அதிகம் முதலீடு செய்யப்படும் திட்டங்களைப் பொதுவாகப் பங்கு சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் என வழங்கப்பட்டு வருகின்றன. இதுவே, பங்குச் சந்தையைவிடக் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யப்படும் திட்டங்களைப் பொதுவாகக் கடன் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்ட் என வழங்கப்பட்டு வருகின்றன.

ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகை நூறு சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப் படுவதால் ரிஸ்க் அதிகம். கடன் (Debt) ஃபண்டுகளில் நூறு சதவிகிதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவு. பேலன்ஸ்டு ஃபண்ட் என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் முதலீட்டுக் கலவையாக இருப்பதால், ரிஸ்க்கை பேலன்ஸ் செய்யக்கூடியதாக அமையும்.

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் தொகையில் ஈக்விட்டியில் எவ்வளவு, கடன் பத்திரங்களில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்படும் என்பது ஒவ்வொரு திட்டத்துக்கும் மாறுபடும் என்றாலும் பொதுவாக 60:40 என்ற அளவில் இருப்பதுதான் வழக்கத்தில் உள்ளது. சில ஃபண்டுகளில் 70:30 அல்லது 65:35 போன்ற அளவுகளும் இருப்பதுண்டு.

என்ன ஸ்பெஷல்?

சரி, இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பொதுவாக, பங்குச் சந்தை மூன்று விதமான நிகழ்வுகளைச் சந்திக்கும். ஏற்ற இறக்கம், ஏறுமுகம் மற்றும் இறங்குமுகம். ஏற்ற இறக்கமான காலகட்டங்களில் பங்குச் சந்தையின் போக்குத் தெளிவற்றதாக இருக்கும். அந்தச் சூழலுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டின் ஈக்விட்டி சதவிகிதம் குறைக்கப்பட்டு டெட் சதவிகிதம் அதிகரிக்கப்படும். அதனால் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை வெகுவாகச் சமாளிக்க உதவும்.

பங்குச் சந்தை இறங்குமுகமாக இருக்கும் காலகட்டத்தில் பேலன்ஸ்டு ஃபண்டில் உள்ள ஈக்விட்டியின் அளவு நிர்ணயிக்கப் பட்ட குறைந்த அளவுக்குக் கொண்டு வரப்படும். டெட்டின் சதவிகிதம் உயர்த்தப்படும். அப்போது, பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாக ஏற்படு்ம் தாக்கம் குறைவாக இருக்கும்.

பங்குச் சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது ஈக்விட்டியின் அளவு அதிகபட்ச நிர்ணயத்தைத் தொட்டுவிடும். அதனால் பங்குச் சந்தையில் ஏற்படும் வளர்ச்சியைப் பெறுவதற்கு உதவும்.

இப்படிப் பங்குச் சந்தையில் ஏற்படும் மாறுபட்ட சூழல்களில் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் யுக்தியும் மாறுபடும்.

லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்! P32a

என்ன நன்மை?

இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் பெரும்பாலோனர் களுக்குப் பங்குச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கணிக்கவோ, முன்கூட்டி அறியவோ தெரிந்திருக்காது. முக்கியமாக, ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டம் சிறு முதலீட்டாளர் களுக்குச் சவாலானது. ஆனால், பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்யும்போது சாதாரண முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தையைக் கணிக்கும் வேலை பெரிதாக இருக்காது.

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது அஸெட் அலோகேஷன் (Asset Allocation) முறையில் முதலீடு செய்யும்போதுதான் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். நமது தேவைகள், லட்சியங்கள் மற்றும் ரிஸ்க்கை மனதில்கொண்டு சரியான அளவில் ஈக்விட்டி மற்றும் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யச் சரியான வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் பேலன்ஸ்டு ஃபண்டு களில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் பேலன்ஸ்டு ஃபண்டுகள் எல்லாக் காலகட்டத்திலும் சூழலுக்கேற்ப அஸெட்் அலோகேஷன் யுக்தியைப் பின்பற்றுகின்றன. பங்குச் சந்தையில் ஏற்படும் மாறுபட்ட சூழலுக்கேற்ப ஃபண்ட் மேனேஜர்கள் சரியான ஈக்விட்டி - டெட் அளவைக் கடைப் பிடிப்பார்கள்.

அதேபோல், பங்குச் சந்தையின் சிறப்பையும் கடன் பத்திர சந்தையின் சிறப்பையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் திட்டமாகப் பேலன்ஸ்டு ஃபண்ட் உள்ளது. மேலும், குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் பேலன்ஸ்டு ஃபண்டில் தாக்கம் குறைவாக இருக்கும்.

பேலன்ஸ் ஃபண்டுகளின் வளர்ச்சி!

கடந்த காலத்தில் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் வளர்ச்சி எப்படி இருந்தது என்று பார்ப்போம். இந்திய பங்குச் சந்தை 2013 பிற்பகுதியிலிருந்து படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன.

அதே காலகட்டத்தில் கடனுக்கான வட்டி உயர்ந்து கொண்டே இருந்ததனால், கடன் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடு பெரிய வளர்ச்சியை எட்டவில்லை. மேலும்,கடந்த எப்போதெல்லாம் பங்குச் சந்தை அபார வளர்ச்சி பெறுகிறதோ, அப்போதெல்லாம் முதலீட்டா ளர்களின் கவனம் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் இருக்கும். அந்தச் சூழலில் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் வளர்ச்சி முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெறுவது சற்றே கடினம்தான். மாறாக, கடந்த இரண்டு வருடங்களில் பேலன்ஸ்டு ஃபண்டுகளின் வளர்ச்சி நல்ல முறையில் இருந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் கடன் பத்திரம் சார்ந்த முதலீடுகள் போதுமான வளர்ச்சியைக் கண்டிருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்றாலும், 2004-க்குப் பிறகு இந்த ஆண்டு (2105) ஜனவரியில்தான் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீட்டாளர்களின் முதலீடு ரூ.27,000 கோடியைத் தாண்டி நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

லாபம் தரும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள்! P33a

எப்படி அணுகவேண்டும்?

முதலீட்டாளர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளை எப்படி அணுகவேண்டும்?

நடப்பில் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அடுத்த மூன்று - ஐந்து ஆண்டுகளில் பங்குச் சந்தை நல்ல வளர்ச்சியைக் காணும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், கடன் பத்திர முதலீடுகளும் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கிறது. ஏனென்றால், இந்த ஆண்டு ஆர்பிஐ இரண்டு முறை கடன் வட்டியை குறைத்திருக்கிறது. மேலும், கடன் வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது. கடன் வட்டி குறையும்போது, டெட் ஃபண்டுகள் நல்ல வளர்ச்சியைக் காணும்.

முதலீட்டாளர்கள் தனித்தனியே ஈக்விட்டி மற்றும் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் இரண்டும் ஒருங்கிணைந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்தால், நல்ல வளர்ச்சி காணலாம். கூடவே ரிஸ்க்-க்கும் குறைவாக இருக்கும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்கவும் பேலன்ஸ்டு ஃபண்டில் முதலீடு செய்வது நல்ல யுக்தியாக அமையும். அஸெட் அலோகேஷேன் பார்வையிலும் பேலன்ஸ்டு ஃபண்டின் பங்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

பேலன்ஸ்டு ஃபண்ட்: வருமான வரி எப்படி?

இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் நிறுவனப் பங்குகளின் முதலீடு 65%க்கு மேல் இருக்கும்பட்சத்தில் அது ஈக்விட்டி ஃபண்ட் ஆக கருதப்படும். அப்போது ஓராண்டுக்குள் யூனிட்களை விற்று லாபம் பார்த்தால் குறுகிய கால மூலதன ஆதாயவரி 15% கட்ட வேண்டி வரும். இதுவே ஓராண்டுக்கு மேற்பட்டு யூனிட்களை விற்றால் லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்டத் தேவை இல்லை.

இந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளில், பங்குகளில் முதலீடு 65%க்கு கீழ் இருக்கும்போது, அது கடன் ஃபண்டாக கருதப்படும். அப்போது மூன்றாண்டுகளுக்குள் விற்றால் குறுகிய கால லாபம் வருமானத்துடன் சேர்க்கப்படும். அப்போது அவரவர் அடிப்படை வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும். மூன்றாண்டுக்கு மேல் யூனிட்களை விற்று லாபம் பார்த்தால், பணவீக்க விகித சரிகட்டலுக்கு (Indexation) பிறகு 20% வரி கட்ட வேண்டி வரும்.

வி.கோபாலகிருஷ்ணன்,

நிறுவனர், மணி அவென்யூஸ்


(Money Avenues)

-- விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum