Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
Page 1 of 1
ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
ஆவணங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்கிற காரணத்திலோ என்னவோ, சொத்துப் பத்திரம் முதல் பிறப்புச் சான்றிதழ் வரை எல்லா ஆவணங்களையும் லேமினேட் செய்து பத்திரப்படுத்துவது வழக்கம். அப்படி செய்துவிட்டால், புயல், வெள்ளம் வந்தாலும், ஆவணங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று நினைக்கின்றனர். ஆனால், இது சரியான அணுகுமுறை அல்ல என்பதே நிபுணர்கள் சொல்லும் உண்மை. ஆவணங்களை லேமினேஷன் செய்வதால், என்ன பிரச்னை ஏற்படும் என வழக்கறிஞர் சிவராமனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“ஆவணங்களைப் பொறுத்தவரை, முக்கியமான காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுபவை. அவற்றின் உண்மைத்தன்மை என்பது மிகவும் கவனமாகவும், கறாராகவும் பார்க்கப்படுகிறது. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை லேமினேஷன் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.
லேமினேஷன் செய்வதால், ஆவணங்கள் எந்தத் தருணத்திலும் எந்தவித சேதமும் ஆகாமல் இருக்கும் என்றாலும், அதனுடைய உண்மைத் தன்மை, அதாவது ஒரிஜினாலிட்டியைச் சரி பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஏற்கெனவே போலிப் பத்திரங்களும், போலி ஆவணங்களும் மிகுந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், லேமினேஷன் செய்வதால் போலியான ஆவணங்களையும், உண்மையான ஆவணங்களையும் பிரித்து அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இதனால் நாம் முயற்சி செய்யும் காரியம் நிறைவுபெறத் தாமதமாகும் சூழல் ஏற்படக்கூடும்.
இதனால் சில சமயங்களில் நம்முடைய காரியம் நடக்காமலேயே போய்விடலாம். முக்கியமாக, விசா வாங்கும்போது, ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கும் போது இந்தப் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேர்கிறது. எனவே, முடிந்தவரை ஆவணங்களை லேமினேஷன் செய்வதைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
இனிமேல் லேமினேஷன் செய்வதைத் தவிர்த்து விடலாம் என்றாலும், ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்களுக்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்களா?
‘‘முக்கியமான ஆவணங்களை ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்கள் அதனை நீக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், கொஞ்சம் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்’’ என்கிறார் ரேவதி அசோசியேட்ஸ் லேமினேஷன் ரிமூவல் சர்வீசஸ் கடையின் உரிமையாளர் சரவணக்குமார். என்ன காரணம் என்று நாம் கேட்டதற்கு அவர் விளக்கம் இனி: பத்திரங்கள், வாகன ரெஜிஸ்ட்ரேஷன் புத்தகம், சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் அனைத்தும் இங்கு சிறந்த முறையில் டிலேமினேஷன் (Delamination) செய்யப்படும் என்று பழகிப்போன பிசினஸ் மொழியில் சொன்னவரிடம் மேலும் பேசினோம்.
“இன்றைய தேதியில் 80 வகையான லேமினேஷன்கள் உள்ளன. அவற்றில் இரண்டு லேமினேஷன்களை ஒருமுறை செய்துவிட்டால், அதைத் திரும்ப நீக்கவே முடியாது. ஆனால், இன்றைக்கு நாம் செய்யும் பெரும்பாலான லேமினேஷன்கள் அந்த இரண்டையும் தவிர்த்த வேறு லேமினேன்களாகவே இருக்கும்.
லேமினேஷன் செய்யப்பட்ட பத்திரங்கள் எனில், அந்த லேமினேஷனை அகற்றுவதற்கு ரூ.500 ஆகும். பச்சை வண்ண பேப்பர் பக்கம் ஒன்றுக்கு ரூ.800 முதல் 1,000 வரை ஆகும். இந்தக் கட்டணம் டேமேஜ் ஆகாத புதிய பத்திரங்கள் என்றால் மட்டும்தான்.
பழைய ஆவணங்களையோ, கிழிந்த, தண்ணீரில் நனைந்த ஆவணங்களையோ நீங்கள் லேமினேட் செய்திருந்தால், அதனுடைய காகித நிலையைப் பொறுத்துக் கட்டணம் மாறும். நான்கைந்து இடங்களில் விசாரித்து விட்டுத் தருவது நல்லது” என்றார்.
இவர் சொல்கிற கணக்கைப் பார்த்தால் பத்திரப்பதிவு செலவை விட டிலேமினேஷன் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே! அப்படியானால் ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதற்கு இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா...
எத்தகைய முக்கியமான ஆவணமாக இருந்தாலும், அவற்றை லேமினேஷன் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே சரி. ஆவணங்களைப் பாதுகாக்க ஓப்பன் டைப் ஃபைல் ஃபோல்டர்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக இருக்கும். இந்த ஃபைல்களை பூச்சிகள் அண்டாமல், தண்ணீரில் நனையாமல் பாதுகாத்தாலே போதும். உங்கள் ஆவணங்கள் எப்போதும் பத்திரமாக இருக்கும்!
ந.விகடன் “ஆவணங்களைப் பொறுத்தவரை, முக்கியமான காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுபவை. அவற்றின் உண்மைத்தன்மை என்பது மிகவும் கவனமாகவும், கறாராகவும் பார்க்கப்படுகிறது. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை லேமினேஷன் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.
லேமினேஷன் செய்வதால், ஆவணங்கள் எந்தத் தருணத்திலும் எந்தவித சேதமும் ஆகாமல் இருக்கும் என்றாலும், அதனுடைய உண்மைத் தன்மை, அதாவது ஒரிஜினாலிட்டியைச் சரி பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஏற்கெனவே போலிப் பத்திரங்களும், போலி ஆவணங்களும் மிகுந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், லேமினேஷன் செய்வதால் போலியான ஆவணங்களையும், உண்மையான ஆவணங்களையும் பிரித்து அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இதனால் நாம் முயற்சி செய்யும் காரியம் நிறைவுபெறத் தாமதமாகும் சூழல் ஏற்படக்கூடும்.
இதனால் சில சமயங்களில் நம்முடைய காரியம் நடக்காமலேயே போய்விடலாம். முக்கியமாக, விசா வாங்கும்போது, ஆவணங்களை வங்கியில் வைத்துக் கடன் வாங்கும் போது இந்தப் பிரச்னைகளை அதிகம் சந்திக்க நேர்கிறது. எனவே, முடிந்தவரை ஆவணங்களை லேமினேஷன் செய்வதைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
இனிமேல் லேமினேஷன் செய்வதைத் தவிர்த்து விடலாம் என்றாலும், ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்களுக்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்களா?
‘‘முக்கியமான ஆவணங்களை ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்கள் அதனை நீக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், கொஞ்சம் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்’’ என்கிறார் ரேவதி அசோசியேட்ஸ் லேமினேஷன் ரிமூவல் சர்வீசஸ் கடையின் உரிமையாளர் சரவணக்குமார். என்ன காரணம் என்று நாம் கேட்டதற்கு அவர் விளக்கம் இனி: பத்திரங்கள், வாகன ரெஜிஸ்ட்ரேஷன் புத்தகம், சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் அனைத்தும் இங்கு சிறந்த முறையில் டிலேமினேஷன் (Delamination) செய்யப்படும் என்று பழகிப்போன பிசினஸ் மொழியில் சொன்னவரிடம் மேலும் பேசினோம்.
“இன்றைய தேதியில் 80 வகையான லேமினேஷன்கள் உள்ளன. அவற்றில் இரண்டு லேமினேஷன்களை ஒருமுறை செய்துவிட்டால், அதைத் திரும்ப நீக்கவே முடியாது. ஆனால், இன்றைக்கு நாம் செய்யும் பெரும்பாலான லேமினேஷன்கள் அந்த இரண்டையும் தவிர்த்த வேறு லேமினேன்களாகவே இருக்கும்.
லேமினேஷன் செய்யப்பட்ட பத்திரங்கள் எனில், அந்த லேமினேஷனை அகற்றுவதற்கு ரூ.500 ஆகும். பச்சை வண்ண பேப்பர் பக்கம் ஒன்றுக்கு ரூ.800 முதல் 1,000 வரை ஆகும். இந்தக் கட்டணம் டேமேஜ் ஆகாத புதிய பத்திரங்கள் என்றால் மட்டும்தான்.
பழைய ஆவணங்களையோ, கிழிந்த, தண்ணீரில் நனைந்த ஆவணங்களையோ நீங்கள் லேமினேட் செய்திருந்தால், அதனுடைய காகித நிலையைப் பொறுத்துக் கட்டணம் மாறும். நான்கைந்து இடங்களில் விசாரித்து விட்டுத் தருவது நல்லது” என்றார்.
இவர் சொல்கிற கணக்கைப் பார்த்தால் பத்திரப்பதிவு செலவை விட டிலேமினேஷன் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே! அப்படியானால் ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதற்கு இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா...
எத்தகைய முக்கியமான ஆவணமாக இருந்தாலும், அவற்றை லேமினேஷன் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே சரி. ஆவணங்களைப் பாதுகாக்க ஓப்பன் டைப் ஃபைல் ஃபோல்டர்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக இருக்கும். இந்த ஃபைல்களை பூச்சிகள் அண்டாமல், தண்ணீரில் நனையாமல் பாதுகாத்தாலே போதும். உங்கள் ஆவணங்கள் எப்போதும் பத்திரமாக இருக்கும்!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பங்குச்சந்தையில் இப்ப முதலீடு செய்வது சரியா??
» முதலீடு செய்வது எப்படி?
» பங்குகளை தேர்வு செய்வது எப்படி?
» டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி
» எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?
» முதலீடு செய்வது எப்படி?
» பங்குகளை தேர்வு செய்வது எப்படி?
» டூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி
» எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|