வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா?

Go down

இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா? Empty இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா?

Post by தருண் Wed Aug 26, 2015 3:00 pm

பங்குச் சந்தையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகமாகின்றன. இதில் இண்டெக்ஸில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அனைத்து துறை சார்ந்த பங்குகளும் வர்த்தகமாகக்கூடிய இண்டெக்ஸ்கள் இரண்டு. அவை, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி.

இந்த இண்டெக்ஸில் வங்கிப் பங்குகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதாவது, கடந்த 2014 டிசம்பர் மாதத்தில் 25 சதவிகிதமாக இருந்த பங்களிப்பு, ஜூன் மாத இறுதியில் 31.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா? P19a

இதில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வெயிட்டேஜ் 7.08 சத விகிதமாக உள்ளது. இண்டெக்ஸ் வெயிட்டேஜில் முதல் பத்து இடங்களில் உள்ள பங்குகளில் நான்கு பங்குகள் நிதி நிறுவனப் பங்குகள் ஆகும். ஒரு இண்டெக்ஸில் நிதி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பது நல்லதா அல்லது கெட்டதா என்று கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

“நிஃப்டி இண்டெக்ஸில் உள்ள பங்குகள் அனைத்தும் ‘ஏ ‘குரூப் பங்குகள் ஆகும். இதில் இடம் பெறும் பங்குகள் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் மாறுதலுக்கு உட்பட்டவை. அதாவது, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் துறையின் பங்குகள் இந்த இண்டெக்ஸில் இருக்கும்.

அதாவது, 2000-வது ஆண்டு நிஃப்டி இண்டெக்ஸில் ஐ.டி துறை சார்ந்த பங்குகள் அதிக அளவு இடம்பெற்றிருந்தன. ஏனெனில், அந்தச் சமயத்தில் ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருந்தது. அதன் மூலமாக இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுக்க ஆரம்பித்தது. அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவானது.

ஆனால், 2005 - 2009 காலகட்டத்தில் ரியாலிட்டி துறை பங்குகள் அதிக அளவில் இடம் பெற ஆரம்பித்தன. ஏனெனில், அந்தச் சமயத்தில் இன்ஃப்ரா துறை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. மேலும் அப்போதுள்ள அரசு, சாலைகள் அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வந்தது.

இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா? P20a

இப்போது அந்த இடத்தை நிதி நிறுவனப் பங்குகள் பூர்த்தி செய்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இது மாற வாய்ப்புள்ளது’’ என்றார்.

நிஃப்டி இண்டெக்ஸில் வங்கிப் பங்குகள் அதிகம் இருப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்று கேட்டோம். ‘‘இண்டெக்ஸில் உள்ள பங்குகள் அனைத்தும் ஏ குரூப் பங்குகள். இந்த குரூப்பில் 300 பங்குகள் உள்ளன. ஏ குரூப் பங்குகள் கடந்த மூன்று மாதத்தில் 98 சதவிகித நாட்கள் வர்த்தகமாகி இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறை.

அடுத்ததாக, மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப் படையில்தான் இந்தப் பங்குகள் இண்டெக்ஸில் பெறும். இந்தப் பங்குகளைத் தேர்வு செய்வதற்கு ஸ்டாண்ட் அண்ட் புவர் நிறுவனம் இந்த வேலையைச் செய்கிறது.

நிஃப்டி இண்டெக்ஸில் 30 சத விகிதத்துக்கு மேல் வங்கிப் பங்குகள் இருக்கும்போது, அந்தத் துறையில் வீழ்ச்சி ஏற்படும்போது இண்டெக்ஸ் வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ஆனால், வங்கிப் பங்குகள் வீழ்ச்சி அடைவதற்கான காரணங்கள் மிகவும் குறைவுதான். வங்கிப் பங்குகள் விலைகள் வீழ்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணமாக தற்போது இருப்பது வாராக் கடன்கள்தான்.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, வாராக் கடனின் அளவு தற்போது அதிகமாக இருக்கிறது. ஆனால், இவற்றின் பங்களிப்பு இண்டெக்ஸில் குறைவு. எனவே, வங்கிப் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன்.
பங்குச் சந்தை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 4 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பேங்கிங் இண்டெக்ஸ் 0.2 சத விகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி இண்டெக்ஸின் வளர்ச்சியில் வங்கிப் பங்குகளின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், இந்த இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ள வங்கிப் பங்குகளில் பெரும்பாலானவை தனியார் வங்கிகளின் பங்குகள் ஆகும்.

இதில் மூன்று பொதுத்துறை வங்கிகள்தான் இடம் பெற்றிருக் கின்றன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ போன்றவை தனியார் வங்கிகளே. சமீபத்தில் யெஸ் பேங்க் பங்கும் இண்டெக்ஸில் சேர்க்கப்பட் டுள்ளது. இது இண்டெக்ஸுக்கு கூடுதல் வலிமை சேர்க்கக்கூடிய விஷயம்.

இண்டெக்ஸில் அதிக வங்கிப் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு நல்லதா? P21a

எஸ்பிஐ வங்கியின் வெயிட்டேஜ் 3.2 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதேபோல, பேங்க் ஆஃப் பரோடா 0.61-லிருந்து 0.46 சத விகிதமாகவும், பஞ்சாப் நேஷனல் பேங்க் 0.47 சதவிகிதத்திலிருந்து 0.35 சதவிகிதமாகவும் கடந்த ஆறு மாதத்தில் (ஜனவரி - ஜூன்) குறைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கியாக இருந்த ஐசிஐசிஐ பேங்க் தற்போது இண்டெக்ஸில் நான்காவது இடத்தில் உள்ளது. இண்டெக்ஸில் மூன்றாவது இடத்தில் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளன.

வங்கித் துறை பங்குகள் இனிவரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியில் இருக்கும். ஏனெனில், இந்தியாவில்தான் சேமிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. சேமிக்கும் பணம் முழுவதும் வங்கியின் மூலமாகவே சேமிக்கப்படுகிறது. அரசின் மானியம் வங்கிகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளும் வங்கிகள் மூலமா கவே வழங்கப்படுவது வங்கி களின் வளர்ச்சிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.

நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக நடைபெறும்போது கறுப்புப் பணம் புழங்குவது ஏறக்குறைய இல்லாமலே போவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் துறை களுக்குத் தேவையான கடன் வங்கிகள் மூலமாகவே வழங்கப் படுகிறது. இதன் விளைவாக, தொழில்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் வங்கியின் மூலமாக நடைபெறுகிறது.

புதிதாக அதிக வங்கிகளுக்கு அனுமதி வழங்கும்போது இந்த வங்கிகளின் வளர்ச்சி குறைய வாய்ப்பில்லை. அதாவது, இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும் அதே சமயத்தில், வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை யும் அதிகமாகவே உள்ளது. மேலும், புதிய தொழில் துவங்கும் வளர்ச்சி விகிதமும் அதிகமாகவே உள்ளது.

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் தொழில்துறை இன்னும் அதிக அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இதற்குத் தேவையான நிதி உதவி அனைத் தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வாய்ப்புள்ளது.

இந்தக் காரணங்களினால் இண்டெக்ஸில் வங்கிப் பங்குகளில் அதிக அளவில் இடம்பெற்றிருப்பது ஒரு குறையாக கருதத் தேவை யில்லை” என்று முடித்தார் ரெஜி தாமஸ்.

பொருளாதார முன்னேற்றத் தில் முக்கிய பங்கெடுக்கும் வங்கிப் பங்குகள் வீழ்ச்சி அடைவ தற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். இனிவரும் காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால், வங்கிப் பங்குகளின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்
என்று எதிர்பார்க்கலாம்!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum