Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
Page 1 of 1
இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
கடந்த சில ஆண்டுகளாக பூகம்பம், புயல், சுனாமி, சூறாவளிகள் போன்ற இயற்கை பேரழிவுகளால் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால், இந்த இயற்கைப் பேரழிவில் இருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளீர்கள். இந்தப் பாதிப்புகளைச் சமாளிக்க உதவும் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி அலசுவோம்.
1.ஆயுள் காப்பீடு என்பது ஒருவருக்கு திடீரென உயிரிழப்பு ஏற்படும்போது, அவரது குடும்பத்துக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்கிறது. டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, ஒரு பேராபத்தினால் ஒருவர் உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகையானது அவரது குடும்பத்தைச் சென்றடை யும். டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் இயற்கை உயிரிழப்பு (நெருப்பு, புயல், சூறாவளி, பூகம்பம்), அல்லது விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும்போது காப்பீட்டுத் தொகை குடும்பத்துக்குச் சென்று சேரும்.
மேலும், டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்கும்போது, விபத்துக் காப்பீட்டை ரைடர் பாலிசியாக எடுக்கும்பட்சத்தில், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், டேர்ம் இன்ஷூரன்ஸின் காப்பீட்டுத் தொகையுடன் ரைடர் காப்பீடும் சேர்த்து வழங்கப்படும்.
உதாரணத்துக்கு, 35 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு 25 வருடத்துக்குக் காப்பீடு எடுக்க சுமாராக ஆண்டுக்கு ரூ.16,000 பிரீமியம் செலுத்த வேண்டும். இதுவே, ரூ.50 லட்சம் விபத்துக் காப்பீட்டை ரைடராகச் சேர்த்துக் கொண்டால், அதற்கு சுமார் ரூ.3,000 கூடுதலாக பிரீமியம் கட்டினால் போதும். இவ்வாறு செய்யும்போது, விபத்தினால் ஒரு நபருக்கு உயிரிழப்பு நேர்ந்தால், அவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 கோடியைக் காப்பீட்டுத் தொகையாக இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.
2. பொதுவாக, இயற்கைச் சீற்றங்கள், தீப்பிடித்தல் போன்றவற்றால் ஒருவர் வீட்டை இழக்க நேரிடும். மீண்டும் அந்த வீட்டைச் சரி செய்ய பெரும் தொகை தேவைப்படும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வீட்டுக் காப்பீடு அமைந்துள்ளது. மேலும், வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருள்கள் திருடு போனாலும், வீட்டுக் காப்பீட்டின் மூலம் திரும்பிப் பெற முடியும்.
பேரழிவுகளிலிருந்து தங்கள் வீட்டைப் பாதுகாக்க சிறிய முன்னுரிமை தந்து, வீட்டுக் காப்பீடு செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு வீட்டுக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். தீ விபத்தினால் ரூ.6 லட்சம் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த மொத்தத் தொகையான ரூ.6 லட்சத்தையும் வீட்டுக் காப்பீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கொள்ளை, மின் செயலிழப்பினால் ஏற்படும் சேதத்துக்கும் இந்த பாலிசியில் கவரேஜ் இருக்கிறது. நீங்கள் உங்களது வீட்டுக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது, எந்தெந்த மாதிரியான அடக்கங்களும் விலக்குகளும் (Inclusions and Exclusions) உள்ளன என்று ஆராய்ந்து, அனைத்து விதமான பாதிப்புகளையும் கவர் செய்யும் பாலிசியாக இருப்பின் சிறிது பிரீமியம் அதிகமாக இருந்தாலும், அத்தகைய பாலிசியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
வீட்டுக் காப்பீட்டைப் பொறுத்தவரை, பிரீமியம் கொஞ்சம் அதிகமானாலும் அது நிச்சயமாக உங்களுக்கு மன அமைதியைத் தரும். உதாரணமாக, நீங்கள் ரூ.50 லட்சத்துக்கு வீட்டுக் காப்பீடு எடுப்பதற்கு சுமாராக ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டும். இது கொள்ளை, நெருப்பு, புயல், சூறாவளி, பூகம்பம் ஆகிய இயற்கை அழிவுகளினால் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் பாலிசியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். விபத்து காப்பீடு இயற்கைப் பேரழிவில், இறக்கும் தருவாயை விடக் காயம்படும் வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய விபத்து மற்றும் பேரழிவினால் துரதிருஷ்டவசமாக ஒருவரது உடம்பின் ஒருபாகமோ, உடம்பின் ஒரு பகுதியோ செயலிழந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ, தனிநபர் விபத்துக் காப்பீட்டின் மூலம் அவரது நிதி நிலைமையைச் சீர்செய்து கொள்ளலாம்.
ஒருவர் விபத்தினால் உயிரிழந்தால், தனி நபர் விபத்துக் காப்பீட்டின் மூலம் அவரின் மொத்தக் காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரரின் குடும்பத்துக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும். இதுவே, விபத்தினால் பாதிக்கப்பட்டு, ஊனமுற்றாலோ அல்லது உடம்பின் ஒரு பாகத்தை இழந்தாலோ, பாலிசியின் காப்பீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரருக்கு வழங்கும். இது, காப்பீட்டுத் தொகையில் 25% - 50% வரை விபத்தினால் உண்டாகும் இழப்பைப் பொறுத்து வேறுபடும்.
தனிநபர் விபத்து பாலிசியின் பிரீமியம், பாலிசிதாரரின் தொழில் செய்யும் துறை மற்றும் தொழில் சார்ந்த ரிஸ்க்கை வைத்து நிர்ணயிக்கப் படும். உதாரணத்துக்கு, கணக்காளருக்குண்டான பிரீமியம், கட்டடம் கட்டும் தொழிலாளிக்கான உள்ள பிரீமியத்தைவிட சற்றுக் குறைவாக இருக்கும். உதாரணமாக, தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.50 லட்சத்துக்கு பாலிசி எடுப்பதற்கு சுமாராக ரூ.6,000 வரை பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். இதன் கீழ், விபத்தினால் உண்டாகும் மரணம், உடலின் ஏதாவது ஒரு பகுதி நிரந்தரமாகவோ, மொத்தமாகவோ செயலிழத்தல், மேலும் உடலின் ஒரு பகுதி செயலிழந்ததால் மருத்துவமனையில் சேர்த்தல் முதலியன இந்த பாலிசியால் கவர் செய்யப்படும்.
இயற்கையால் உண்டாக்கப்படும் செயல்கள் எந்த எச்சரிக்கையுடனும் வருவதில்லை. ஆனால், அவற்றால் வரும் இழப்பு மிகவும் பெரிதாகும். ஆகவே, நாம் மிகவும் விழிப்பு உணர்வுடனும் எப்போதும் தயார் நிலையிலும் அவற்றைக் கையாள்வது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம். இழப்பு ஏற்பட்டபின், அது பற்றி வருந்துவதைவிட, இழப்பு வருவதற்கு முன்பே அதனை வராமல் தடுக்கும் நடவடிக்கையை எடுப்பது புத்திசாலித்தனம்!
ந.விகடன் 1.ஆயுள் காப்பீடு என்பது ஒருவருக்கு திடீரென உயிரிழப்பு ஏற்படும்போது, அவரது குடும்பத்துக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்கிறது. டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, ஒரு பேராபத்தினால் ஒருவர் உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகையானது அவரது குடும்பத்தைச் சென்றடை யும். டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் இயற்கை உயிரிழப்பு (நெருப்பு, புயல், சூறாவளி, பூகம்பம்), அல்லது விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும்போது காப்பீட்டுத் தொகை குடும்பத்துக்குச் சென்று சேரும்.
மேலும், டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்கும்போது, விபத்துக் காப்பீட்டை ரைடர் பாலிசியாக எடுக்கும்பட்சத்தில், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், டேர்ம் இன்ஷூரன்ஸின் காப்பீட்டுத் தொகையுடன் ரைடர் காப்பீடும் சேர்த்து வழங்கப்படும்.
உதாரணத்துக்கு, 35 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு 25 வருடத்துக்குக் காப்பீடு எடுக்க சுமாராக ஆண்டுக்கு ரூ.16,000 பிரீமியம் செலுத்த வேண்டும். இதுவே, ரூ.50 லட்சம் விபத்துக் காப்பீட்டை ரைடராகச் சேர்த்துக் கொண்டால், அதற்கு சுமார் ரூ.3,000 கூடுதலாக பிரீமியம் கட்டினால் போதும். இவ்வாறு செய்யும்போது, விபத்தினால் ஒரு நபருக்கு உயிரிழப்பு நேர்ந்தால், அவரின் குடும்பத்துக்கு ரூ.1.5 கோடியைக் காப்பீட்டுத் தொகையாக இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.
2. பொதுவாக, இயற்கைச் சீற்றங்கள், தீப்பிடித்தல் போன்றவற்றால் ஒருவர் வீட்டை இழக்க நேரிடும். மீண்டும் அந்த வீட்டைச் சரி செய்ய பெரும் தொகை தேவைப்படும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வீட்டுக் காப்பீடு அமைந்துள்ளது. மேலும், வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருள்கள் திருடு போனாலும், வீட்டுக் காப்பீட்டின் மூலம் திரும்பிப் பெற முடியும்.
பேரழிவுகளிலிருந்து தங்கள் வீட்டைப் பாதுகாக்க சிறிய முன்னுரிமை தந்து, வீட்டுக் காப்பீடு செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஒருவர் ரூ.10 லட்சத்துக்கு வீட்டுக் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். தீ விபத்தினால் ரூ.6 லட்சம் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த மொத்தத் தொகையான ரூ.6 லட்சத்தையும் வீட்டுக் காப்பீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கொள்ளை, மின் செயலிழப்பினால் ஏற்படும் சேதத்துக்கும் இந்த பாலிசியில் கவரேஜ் இருக்கிறது. நீங்கள் உங்களது வீட்டுக் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது, எந்தெந்த மாதிரியான அடக்கங்களும் விலக்குகளும் (Inclusions and Exclusions) உள்ளன என்று ஆராய்ந்து, அனைத்து விதமான பாதிப்புகளையும் கவர் செய்யும் பாலிசியாக இருப்பின் சிறிது பிரீமியம் அதிகமாக இருந்தாலும், அத்தகைய பாலிசியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
வீட்டுக் காப்பீட்டைப் பொறுத்தவரை, பிரீமியம் கொஞ்சம் அதிகமானாலும் அது நிச்சயமாக உங்களுக்கு மன அமைதியைத் தரும். உதாரணமாக, நீங்கள் ரூ.50 லட்சத்துக்கு வீட்டுக் காப்பீடு எடுப்பதற்கு சுமாராக ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டும். இது கொள்ளை, நெருப்பு, புயல், சூறாவளி, பூகம்பம் ஆகிய இயற்கை அழிவுகளினால் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் பாலிசியாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். விபத்து காப்பீடு இயற்கைப் பேரழிவில், இறக்கும் தருவாயை விடக் காயம்படும் வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய விபத்து மற்றும் பேரழிவினால் துரதிருஷ்டவசமாக ஒருவரது உடம்பின் ஒருபாகமோ, உடம்பின் ஒரு பகுதியோ செயலிழந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ, தனிநபர் விபத்துக் காப்பீட்டின் மூலம் அவரது நிதி நிலைமையைச் சீர்செய்து கொள்ளலாம்.
ஒருவர் விபத்தினால் உயிரிழந்தால், தனி நபர் விபத்துக் காப்பீட்டின் மூலம் அவரின் மொத்தக் காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரரின் குடும்பத்துக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும். இதுவே, விபத்தினால் பாதிக்கப்பட்டு, ஊனமுற்றாலோ அல்லது உடம்பின் ஒரு பாகத்தை இழந்தாலோ, பாலிசியின் காப்பீட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரருக்கு வழங்கும். இது, காப்பீட்டுத் தொகையில் 25% - 50% வரை விபத்தினால் உண்டாகும் இழப்பைப் பொறுத்து வேறுபடும்.
தனிநபர் விபத்து பாலிசியின் பிரீமியம், பாலிசிதாரரின் தொழில் செய்யும் துறை மற்றும் தொழில் சார்ந்த ரிஸ்க்கை வைத்து நிர்ணயிக்கப் படும். உதாரணத்துக்கு, கணக்காளருக்குண்டான பிரீமியம், கட்டடம் கட்டும் தொழிலாளிக்கான உள்ள பிரீமியத்தைவிட சற்றுக் குறைவாக இருக்கும். உதாரணமாக, தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.50 லட்சத்துக்கு பாலிசி எடுப்பதற்கு சுமாராக ரூ.6,000 வரை பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும். இதன் கீழ், விபத்தினால் உண்டாகும் மரணம், உடலின் ஏதாவது ஒரு பகுதி நிரந்தரமாகவோ, மொத்தமாகவோ செயலிழத்தல், மேலும் உடலின் ஒரு பகுதி செயலிழந்ததால் மருத்துவமனையில் சேர்த்தல் முதலியன இந்த பாலிசியால் கவர் செய்யப்படும்.
இயற்கையால் உண்டாக்கப்படும் செயல்கள் எந்த எச்சரிக்கையுடனும் வருவதில்லை. ஆனால், அவற்றால் வரும் இழப்பு மிகவும் பெரிதாகும். ஆகவே, நாம் மிகவும் விழிப்பு உணர்வுடனும் எப்போதும் தயார் நிலையிலும் அவற்றைக் கையாள்வது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம். இழப்பு ஏற்பட்டபின், அது பற்றி வருந்துவதைவிட, இழப்பு வருவதற்கு முன்பே அதனை வராமல் தடுக்கும் நடவடிக்கையை எடுப்பது புத்திசாலித்தனம்!
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|