வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!

Go down

வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்! Empty வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!

Post by தருண் Thu Jul 20, 2017 9:35 am

வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்கிறோம். அதில், நமக்கு ரீஃபண்ட் வர வேண்டியிருக்கிறது. அந்தத் தொகையைத் திரும்பத் தரவேண்டும் என விண்ணப்பித்தும் நமக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என்றால், வருமான வரித்துறை அலுவலகம் சென்று, நம்முடைய விவரங்களைத் தெரிவித்து மனு அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும் உடனடியாக நம்முடைய பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடாது. அது தொடர்பான அதிகாரியைத் தொடர்ந்து சந்தித்து முறையிட வேண்டியிருக்கிறது.

இதற்கு ஆடிட்டரை அணுகினால், அவருக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் பெரும்பாலானவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் திரும்பக் கேட்காமலே விட்டுவிடு கிறார்கள்.

நாம் அளிக்கும் விண்ணப்பம் மற்றும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேசையில் நாள் கணக்கில், மாதக்கணக்கில் குவிந்திருக்கும். அதிகாரிகளுக்கு இருக்கும் வேலைப்பளு மற்றும் இதர காரணங்களால் இந்த மனுக்களை அவர்களால் வேகமாக பைசல் செய்ய முடிவதில்லை. இதனால், வருமான வரித் துறை என்றாலே பலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்! 24p1

மக்களின் இந்த மனநிலையை மாற்ற, வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதை எளிமையாக்க வேண்டும்; புகார்கள், விண்ணப்பங்கள்மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதன் அடிப்படையில், ஆன்லைனில் புகார் அளிக்கும் வகையில் ‘இ-நிவாரண்’ (E-Nivaran) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்துச் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் பிரபாகரனிடம் கேட்டோம்.

“வருமான வரி ரீஃபண்ட் உள்ளிட்ட நம்முடைய புகார்களை அளிக்கும்போது, அதைக் கண்காணிக்க எந்தவொரு நடைமுறையும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரி எப்போது ஒப்புதல் அளிக்கிறாரோ, அதுவரை நாம் காத்திருக்க வேண்டியதுதான். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வருமான வரித்துறை தயாராகியுள்ளது.

வருமான வரி தொடர்பான நம்முடைய குறைகளையும், புகார்களையும் இதுவரை சிபிசி எனப்படும் சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர், சிபிசி - டிடிஎஸ், ஆய்க்கர் சம்பர்க் கேந்திரா, என்எஸ்டிஎல் (NSDL), யுடிஐஐடிஎஸ்எல் (UTIITSL) போன்ற இ-ஃபைலிங் போர்ட்டல்கள் மூலம் தெரிவிப்போம். ஆனால், இவை அனைத்தையும் ஒரே தளத்தில் செய்யும் வகையில் வந்திருப்பதுதான் இ-நிவாரண்.

இ-நிவாரணில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல், ரீஃபண்ட் விண்ணப்பத்தைச் சரிசெய்யும் மனு, அவுட்ஸ்டாண்டிங் டாக்ஸ் டிமாண்ட் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதியாகப் பதிவு செய்தல், பாஸ்வேர்டு தொடர்பான பிரச்னைகள் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். தவிர, என்எஸ்டிஎல், யுடிஐஐடிஎஸ்எல் தொடர்பான பிரச்னைகள், பான் கார்டு தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கே தீர்வு காணலாம்.

அதேநேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்ந்த, நீதிமன்றம் தொடர்பான, மதம் தொடர்பான, வெளிநாட்டு விவகாரங்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, சேவை தொடர்பான பிரச்னைகள் பற்றி எல்லாம் இதில் சந்தேகங்களை எழுப்ப முடியாது.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம், வரி செலுத்தியவர் விண்ணப்பிக்கவும், தன்னுடைய விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவும் முடியும். வரி செலுத்தியவர் விண்ணப்பித்ததும், அது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நேரடியாகச் சென்றுவிடும். அவர் சரிபார்க்க வேண்டிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை அவரின் உயரதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

வரி செலுத்தியவர், தன்னுடைய பிரச்னைக்கு விண்ணப்பிக்கும்போது வருமான வரித்துறை இணையதளத்தில், இ-நிவாரண் (
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/eNivaranHomePrelogin.html
) என்றிருக்கும் டேப்-ஐ (tab) கிளிக் செய்தாலே போதும். அது அடுத்த பக்கத்துக்குக் கொண்டு சென்றுவிடும். அங்கு வரி செலுத்தியவர் தன்னுடைய குறையை விண்ணப்பிக்க, ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால் அதன் நிலையைத் தெரிந்து கொள்ள என இரண்டு ஆப்ஷன்கள் தரப்பட்டு இருக்கும்.

விண்ணப்பிக்க வேண்டும் என்றால், முதலில் உள்ள டேப்-ஐ கிளிக் செய்ய வேண்டும். அது உங்கள் பான் அல்லது டின் (TIN) எண்ணைக் கேட்கும். பான் எண் கொடுத்ததும், லாக்-இன் பக்கத்துக்குச் செல்லும். அங்கே, உங்கள் பான் எண், பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும். அங்கே, உங்கள் குறைகள் மற்றும் அவை தொடர்பான ஆவணங் களை அப்லோட் செய்ய வேண்டும்.

நீங்கள் விண்ணப்பித்ததும் உங்களுக்கான ஒப்புதல் (Acknowlegement) எண் ஒன்று வரும். அதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணை வைத்துத்தான் தொடர்ந்து நம் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க முடியும்.

இந்த மிக எளிமையான மின்னணு தளமானது வரி செலுத்துபவருக்கு அதிகப் பயனை அளிப்பதாக இருக்கிறது. இதன் மூலம், வரி செலுத்துவோரின் நேரம் மிச்சமாகிறது. மீண்டும், மீண்டும் வருமான வரித்துறை அலுவலகம் சென்று அதிகாரி அல்லது அலுவலரைச் சந்திக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விடுகிறது. நினைத்தநேரத்தில் நம்முடைய விண்ணப்பம் பற்றிய தகவலைப் பெற முடிகிறது.

அனைத்துக்கும் மேலாக, நம் புகாரைப் பதிவு செய்ததற்கான ஆதாரம் நம் கையில் இருக்கிறது. ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பித்தும் சரியான நடவடிக்கை இல்லையென்றால், அடுத்த கட்ட அளவில் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

இதன்மூலம் வருமான வரி செலுத்துபவருக்கு நம்முடைய புகார்கள்மீது உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். ஆனால், போதுமான விழிப்பு உணர்வு இன்மை காரணமாகப் பலருக்கும் இந்த இணையதளம் பற்றித் தெரியாமலே இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வருமான வரித்துறையால் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங் களால் இந்த இ-நிவாரண் பற்றிப் பொது மக்களுக்கு ஏன், வருமான வரித் துறையைச் சார்ந்த அதிகாரி களுக்கேகூட தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த ‘இ-நிவாரண்’ பற்றி வருமான வரித்துறை மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அனைத்துத் தரப்பினரும் பயன்பெற முடியும்’’.

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டால், வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வது உங்களுக்கு இனி ஈஸிதான்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum