வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?

Go down

பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா? Empty பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?

Post by தருண் Thu Jul 20, 2017 9:37 am

பைசா பங்குகள் (பென்னி ஸ்டாக்குகள்) என்று சொல்லப்படும் 10 ரூபாய்க்குக் கீழ் மதிப்புக்கொண்ட பங்குகளில் முதலீடு செய்பவர்கள் மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது பங்குச் சந்தை நிபுணர்கள் சொல்லும் ஆலோசனை.

ஏனெனில், பைசா பங்குகளின் நிறுவனங்கள் பெரும்பாலும் ரூ.100-200 கோடி மார்க்கெட் கேபிட்டலைசேஷன் கொண்ட சிறு நிறுவனங்களே. இவற்றில் நடக்கும் வர்த்தகங்கள் சில நேரங்களில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியாக இருக்கலாம். இந்தச் சிறு நிறுவனங்கள் குறித்த செய்திகள் எளிதில் எல்லோருக்கும் கிடைக்காது என்பதால் அதிக ரிஸ்க் நிறைந்தவை. மேலும், இந்தப் பங்குகளை எளிதில் விற்கவும் முடியாது.

விலை குறைவாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக முதலீட்டாளர்கள் பலர் பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா, இவற்றில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற கேள்விகளைப் பங்குச் சந்தை நிபுணர் எஸ். லெட்சுமணராமனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா? 44p1

முன்பெல்லாம் ரூ.10-க்கு கீழ் இருந்தால் அவற்றை பைசா பங்குகள் என்று சொல்வார்கள். ஆனால், தற்போது இந்தக் கருத்து மாறிவிட்டது. ஏனெனில் இப்போது பெரும்பாலான பங்குகளின் முகமதிப்பு பெரும்பாலும் ரூ.1, ரூ.2 என மாற்றப்பட்டு இருக்கிறது. எனவே, இப்போது முகமதிப்புக்குக் கீழே வர்த்தகமாகக்கூடிய பங்குகளை நாம் பைசா பங்குகள் என்கிறோம்.

இந்த பைசா பங்குகளுக்கென சில பண்புகள் உள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டால், பைசா பங்குகள் குறித்து ஒரு தெளிவுக்கு வர முடியும்.

1. இந்தப் பங்குகளில் அதிக வர்த்தகம் நடைபெறாது. சில சமயம், வர்த்தகமே நடைபெறாமலும்கூட இருக்கலாம்.

2. இந்தப் பங்குகளை ஒருவர் வாங்கும்போது இருக்கும் விலைக்கும், மற்றொருவர் விற்கும்போது இருக்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அதாவது, ஒருவர் 40 பைசாவுக்கு வாங்கும் பங்கை மற்றொருவர் 60 பைசாவுக்கு விற்பார்.

3. இந்தப் பைசா பங்கு நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய நிறுனங்களாகவே இருக்கும். இவை சிறிய நிறுவனங்களாக இருப்பதால், இவற்றைப் பற்றிய தகவல்கள், செயல்பாடுகள் போன்றவை வெளியில் தெரியாமலேயே இருக்கும். பெரிய நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் செய்திகளில், விளம்பரங்களில் நமக்குக் கிடைப்பது போல், இந்தப் பைசா பங்கு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியில் வராது.

இந்தப் பங்குகளைப் பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில்தான் வர்த்தகம் செய்ய வேண்டி வரும். யூகத்தின் பேரில் வர்த்தகம் செய்யப்படுவதால் இதில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். மேலும், இவற்றின் வர்த்தகத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் புரோக்கரேஜ் கட்டணங்கள் பங்கு மதிப்பில் பாதியளவுக்கு வந்துவிடும்.

சரி, இவற்றில் முதலீடு செய்யவே கூடாதா என்றால், கூடவே கூடாது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. சந்தையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள், அதிக ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள் இந்தப் பங்குகளைத் தாராளமாக வாங்கலாம். ஆனால், இவற்றின் நிதிச் செயல்பாடு உள்ளிட்ட ஃபண்ட்மென்டல்களில் கவனம் தேவை. ஏனெனில், நிறுவனங்களின் நிர்வாகச் செயல்பாடுகளில் பிரச்னைகள் இருந்தாலோ, அரசின் கொள்கைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருந்தாலோகூட முகமதிப்புக் கீழ் வர்த்தகமாகலாம்.

எனவே, இந்தப் பங்கு நிறுவனங்களின் நிதி செயல்பாடு, எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும், நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறதா மற்றும் அரசின் கொள்கைகள் நிறுவனத்துக்குச் சாதகமாக மாறுகிறதா என்பவற்றை யெல்லாம் கவனிக்கவும். இவை நிறுவனத்துக்குச் சாதகமாக மாறினால், பங்குகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பங்குகளில் யூகத்தில் வர்த்தகம் செய்யும்போது சில சமயங்களில்தான் சரியாக வரும்; பல நேரங்களில் தவறாகலாம்.

இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தால் நீண்ட காலத்துக்கு வைத்திருக்க வேண்டும். ஏனெனில், 50 பைசா பங்குகளை வாங்கி, 75 பைசா ஆகியிருக்கும்போது விற்க நினைத்தால், புரோக்கரேஜ் கட்டணம் 25 பைசா எனில் வாங்கிய விலைக்குத்தான் விற்கிற மாதிரி இருக்கும். லாபமே இருக்காது. எனவே, வர்த்தகம் லாபகரமானதாக இருக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்றார்.

நிறைய எண்ணிக்கையில் பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காமல், ஒன்றிரண்டு நிறுவனங்களாக இருந்தாலும் நல்ல நிறுவனத்தின் பங்குகளை மட்டும் வைத்திருக்க நினைத்தால், பைசா பங்குகள் மீது கவனம் செலுத்த மாட்டோம்!
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum