வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஐபிஓ முதலீட்டில் அவசியம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Go down

ஐபிஓ முதலீட்டில் அவசியம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! Empty ஐபிஓ முதலீட்டில் அவசியம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

Post by தருண் Mon Jun 22, 2015 3:47 pm

1. ஆஃபர் டாக்குமென்ட்டை படியுங்கள்!

ஒரு ஐபிஓ வெளியாகும் போது அதுபற்றிய தகவல் கள் செய்தித்தாள்களிலும், டிவியிலும் வெளியாகும். தவிர, செபி, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றிலும் வெளியாகும். ஐபிஓ வெளியிடத் தயாராக இருக்கும் நிறுவனம், பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டும் தமது நோக்கத்தை இறுதிக்கட்ட வழங்கல் பத்திரங்களிலிருந்து முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக ஆஃபர் டாக்குமென்ட்டுகளை வழங்கும் (Offer Documents). இதை முதலீட்டாளர்கள் படிப்பது அவசியம்.

2. நிறுவனம் வெளியிடும் ப்ராஸ்பெக்டஸை படியுங்கள்!

ஐபிஓவை பற்றி அறிய ஒரு நிறுவனம் வெளியிடும் விஷயத் தொகுப்பினையும் (Prospectus) கட்டாயம் படிக்க வேண்டும்.

பொதுவாக, எந்தவொரு நிறுவனத்தின் ஐபிஓ குறித்த விஷயத் தொகுப்பாக இருந்தாலும், அவற்றில் ஏறத்தாழ இருபதிலிருந்து முப்பது வகையான பகுதிகள் இருக்கலாம். விஷயத் தொகுப்பின் முதல் பக்கத்தில் நிறுவனத்தின் அனைத்து தொடர்பு முகவரிகளும் தரப்பட்டிருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் புரமோட்டர் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். புரமோட்டர்களின் திறமை, படிப்பாற்றல் மற்றும் முன்அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.

தவிர, எவ்வளவு எண்ணிக்கையில் மற்றும் எந்த விலையில் பங்குகளை விற்று நிதி திரட்டப் போகின்றனர் என்பது குறித்த தகவல்களும் அதில் இருக்கும்.

3. ஐபிஓ கிரேடிங்!

ஐபிஓவில் வரும் பங்கு நிறுவனத்துக்குரிய கிரேடிங்கை முதலீட்டாளர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். செபியிடம் பதிவு செய்து கொண்ட கிரேடிங் ஏஜென்சியானது ஐபிஓ பற்றிய கிரேடிங்கை ஒன்று முதல் ஐந்து வரை வழங்குகிறது. இந்த கிரேடிங்குகள் எதை உணர்த்துகின்றன என்றால்,

கிரேடு 1: மிகவும் மோசமான அடிப்படைகளை (fundamentals) கொண்டது.

கிரேடு 2: சராசரிக்கும் கீழேயுள்ள அடிப்படை களைக் கொண்டது.

கிரேடு 3: சராசரியான அடிப்படைகளைக் கொண்டது.

கிரேடு 4: சராசரிக்கும் மேலேயுள்ள அடிப்படை களைக் கொண்டது.

கிரேடு 5: வலிமையான அடிப்படைகளைக் கொண்டது.

எந்தவொரு நிறுவனம் கிரேடு-4 அல்லது 5-ஐ பெறுகிறதோ, அந்த நிறுவனத்தின் ஐபிஓவில் முதலீடு செய்ய முடிவெடுக்கலாம்.

ஐபிஓ முதலீட்டில் அவசியம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! P44a

4. தொடங்கும் தேதியும், முடியும் தேதியும்!

ஐபிஓ வெளியாகும் தேதியும், முடியும் தேதியும் குறிப்பிட்டிருப்பார்கள். தவிர, எந்த தேதிகளிலிருந்து இந்த நிறுவனத்தின் பங்கானது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் வர்த்தகமாகத் தொடங்கும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அது மட்டுமின்றி, இந்த நிறுவனத்தின் ஐபிஓவை நிர்வாகம் செய்கின்ற மேலாளர்கள் மற்றும் பிரச்னை ஏதும் வந்தால் புகார் செய்ய வேண்டிய பதிவாளர்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

5. ஏதாவது சிக்கல் வருமா?

ஒரு நிறுவனத்தின் ஐபிஓவில் முதலீடு செய்யும் முன்பு அந்தத் தொழிலில் ஏதாவது சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, நிதி திரட்டும் நிறுவனத்தின் நோக்கத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா, முந்தைய காலத்தில் சந்தையிலிருந்து நிதி திரட்டுவதில் தோல்வி அடைந்திருக்கிறதா, நிறுவனத்தின் மீது ஏதாவது வழக்குகள் இருக்கின்றனவா, நிறுவனத்தின் இயக்குநர்களின் மீது ஏதாவது வழக்குகள் இருக்கின்றனவா, நிறுவனத்தின் தொழில் சார்ந்த இடர்பாடுகள் ஏதும் இருக்கின்றனவா என்பதை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

6. நிர்வாகம் எப்படி?

ஐபிஓவை வெளியிடும் ஒரு நிறுவனத்தின் திறன் எப்படி, அந்த நிறுவனத்தில் திறமையுள்ள பல மேலாளர்கள் இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பது அவசியம். தவிர, வெளிநாடுகளில் உள்ள வணிக விரிவாக்க சிக்கல்கள், புது நிர்வாக அலுவலகங்கள் நிறுவுவதி லுள்ள சிக்கல்கள், சட்டங் களினால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், இயற்கை சீற்றத்தி னால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வர்த்தகர்களிடம் ஒப்பந்தத்தைப் பராமரிப் பதில் தொழில்முறை சார்ந்த சிக்கல்கள் என்னென்ன என்பதை அறிவது அவசியம். இந்தச் சிக்கல்கள் பற்றி தெரியாமல் முதலீடு செய்துவிட்டால், பிறகு நம் முதலீடு நஷ்டத்தையே சந்திக்கும்.

7. தொழில் எப்படி?

தொழிற்சாலைக்கான சந்தைப் பிரிவையும் மற்றும் அதன் வளர்ச்சிக்கான பாதையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முதலீட்டுக்கான முடிவைத் தேர்ந்தெடுக்கவும். சந்தை அளவு மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சியை, முதலீடு செய்யும் தருணத்தில் கணக்கில் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி, பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

8. நிதியைப் பயன்படுத்துதல்!

பங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் நிதியை அந்த நிறுவனம் எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதும் முக்கியமே. ஏற்கெனவே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், நிறுவனங்கள் திவாலாகாமல் இருக்க, ஐபிஓ மூலம் நிதி திரட்டுகிறதா என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறுவனங்களைத் தவிர்த்துவிடுவதே நல்லது.

9. பங்காதாயம்/ ஈவுத்தொகை!

பொதுவாக, ஐபிஓ மூலம் நிதி திரட்டும் நிறுவனங்கள் பங்காதாயத்தை அறிவிப்பதில்லை. ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியை தங்களது எதிர்கால முதலீட்டு தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல் அவற்றின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்க உதவுகிறதா என்பதை அறிந்தபின் முதலீடு செய்வது சாலச் சிறந்தது.

10. சுருக்கமான நிதிநிலை அறிக்கை!

நிதிநிலை அறிக்கையை இரு பாகங்களாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒன்று, வருமான அறிக்கையைப் பிரித்து, வரவு மற்றும் செலவு கணக்கு களாக ஆய்வு செய்ய வேண்டும். இரண்டாவது, இருப்பு நிலை. இதில், சொத்து மற்றும் பொறுப்பு வகைகளாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டும்.
---விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum