வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் !

Go down

கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் ! Empty கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் !

Post by தருண் Sun Jul 05, 2015 6:34 pm

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்கி, தனது நிறுவனத்துடன் இணைக்கும்போது பல விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது. இப்படியொரு இணைப்பு நடக்கும்போது, கையகப்படுத்தும் நிறுவனத்தின் (வாங்கும் நிறுவனத்தின்) முதலீட்டாளர்கள், இணைக்கப்படும் நிறுவனத்தின் (விற்கப்படும் நிறுவனத்தின்) முதலீட்டாளர்களுடன் சேர்க்கப்படுகிறார்கள். இந்தச் சமயத்தில் முதலீட்டாளர் களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் ! P64b

இணைப்புக்குப்பின் ‘சினர்ஜி’ (Synergy)!

நிறுவனங்களின் இணைப்புக்குப் பிறகு அந்த நிறுவனம் எப்படிச் செயல்படும் என்று முன்கூட்டியே ஆராய்வது அவசியம். மேலும், அந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறன், நிறுவனத்தின் அளவு, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, தயாரிக்கப்படும் பொருளுக்கான சந்தைப் பங்களிப்பு ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

நியாயமான விலை!

இணைக்கப்படும் நிறுவனத்துக்குக் கொடுக்கும் விலையானது நியாயமாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், அதிக விலை அல்லது குறைந்த விலையில் நிறுவனத்தை வாங்கும்போது சிக்கல் வர வாய்ப்புள்ளது. நிறுவனத்தின் உண்மையான மதிப்பைவிடக் கூடுதலாக 10% வரை பிரீமியமாகக் கொடுக்கலாம். பிரீமியம் அதிகமாகும்போது பின்விளைவுகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

பரிவர்த்தனை எப்படி?

நிறுவனத்தை வாங்கும்போது அது எந்த வகையில் நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, பணம் தந்து வாங்குகிறார்களா அல்லது பங்குகளை தந்து பரிவர்த்தனை செய்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பங்கு மூலம் பரிவர்த்தனைச் செய்யப்படுகிறது என்றால், பணம் வெளியே போக வாய்ப்பில்லை. பணப்பரிமாற்றம் மூலமாக நிறுவனத்தை வாங்கும்போது அந்தப் பணம் எந்த வழியில் கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். அதாவது, நிறுவனம் தனது கையிருப்பில் உள்ள பணத்தின் மூலமாக அல்லது நிதி திரட்டுதல் மூலமாக நிறுவனத்தை வாங்குகிறதா என்பதை ஆராய வேண்டும். அதிகக் கடன்கள் வாங்கி நிறுவனத்தை வாங்கினால், அந்தப் பங்கைவிட்டு ஒதுங்குவது நல்லது.

கடன் உண்டா?

இணைக்கப்படும் நிறுவனத்துக்குக் கடன்கள் மற்றும் செலுத்தப்பட வேண்டிய கடன் எவ்வளவு (வரி பாக்கி, ஊழியர்களின் சம்பள பாக்கி போன்றவை) என்று பார்க்க வேண்டும். இதைத் தவிர்த்து, வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதையும், அந்தப் பிரச்னைகளைச் சமாளிக்கும் திறன் நிறுவனத்தின் நிர்வாகத்தை நடத்தும் மேலாண்மைக் குழுவிடம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இனி, இணைக்கப்படும் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை.

பணமா, பங்கா?

ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் இணைக்கப்படும் போது எழும் பொதுவான குற்றச்சாட்டு, ஒரு பங்குக்கு அளிக்கப்படும் தொகை அல்லது பங்கு பரிவர்த்தனை என்றால் மாற்று விகிதங்கள் சிறு முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இல்லை என்று அர்த்தம். அதுமாதிரி நடக்கும்போது முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எதிர்காலம் எப்படி?

நிறுவனங்களின் இணைப்புக்குப் பின், கையகப்படுத்தும் நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த நிறுவனத்தில் முதலீட்டைத் தொடரலாம். மேலும், அந்த நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் திறனையும் கவனிக்க வேண்டும்.

பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதா?

முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குக்குத் தரும் விலை அல்லது அதற்கு ஈடாகத் தரும் பங்கு விகிதம் திருப்தியாக இல்லையெனில், அந்தப் பங்கை விற்றுவிடுவது நல்லது. ஏனெனில், கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, 10% மேல் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் தான், பங்கின் விலை மற்றும் பங்குப் பரிவர்த்தனைக்கு எதிராகக் கருத்து தெரிவிக்க முடியும். இந்தச் சமயத்தில், முதலீட்டாளர்கள் ஷேர் ஹோல்டிங் பேட்டனைக் கவனிக்க வேண்டும். பெரிய நிறுவனங்களின் முதலீடு அந்த நிறுவனத்தில் இருந்தால் மட்டுமே, பங்கின் விலை மற்றும் பங்குப் பரிவர்த்தனைக் குறித்த கருத்துக்களை நிறுவனங்கள், முதலீடு செய்த நிறுவனங்களிடம் கேட்கும்.

காலதாமதமாகுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை, இணைப்புக்கு இரு நிறுவனங்களில் உள்ள பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல் லாமல் பல ஒழுங்குமுறை ஆணையங் களிடமிருந்தும் அரசின் பல்வேறு துறை களிடமிருந்தும் ஒப்புதல் பெற வேண்டும். இதனால் காலதாமதம் ஆகும். இதற்குள் சந்தையின் போக்கு மற்றும் பங்கின் விலையில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்தவிதமான நிறுவனங்கள்?

எந்தவிதமான நிறுவனங்கள் இணைக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஒரேயொரு பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தைப் பல பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் இணைக்கும்போது ரிஸ்க் குறையும் என்ற பொதுவான கருத்து உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

கிடைக்கும் நன்மைகள்!

நிறுவனங்கள் இணைப்புக்குப் பிறகு முதலீட்டாளருக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது ரான்பாக்ஸி, சன்பார்மா நிறுவனங்கள் இணைப்பு நடந்தது. இதில் ரான்பாக்ஸி பங்கை நீண்ட காலத்தில் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் இணைப்புக்குப் பிறகு, அந்தப் பங்கை விற்கும்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி இருக்காது.
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum