Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
விலை குறைந்தும் உயராத தங்கம் விற்பனை!
Page 1 of 1
விலை குறைந்தும் உயராத தங்கம் விற்பனை!
தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கியது. அதாவது 100 கிலோ தங்கத்தை, இறக்குமதி செய்ய வேண்டுமானால் 20 கிலோ தங்கத்தை நகையாக செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும். இதை 80:20 இறக்குமதி கொள்கை என்பார்கள். இந்தக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கி உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மெட்ராஸ் ஜீவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜெலானி கூறுகையில், "மத்திய அரசிடம் தங்க இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாட்டையும், வரியையும் குறைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அந்த சமயத்தில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் இறக்குமதினால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிக அதிகமாக இருந்தது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அதிக வரியும், இறக்குமதி செய்யும் தங்கத்தில், 20 சதவிகிதத்தை கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் கட்டுபாடுகளை விதித்தது. இதன் விளைவாக தங்கத்தின் விலை அதிகரித்தது.
பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தங்கத்தின் இறக்குமதியில் இருக்கும் கட்டுபாடுகளை படிப்படியாக தளர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள். இதன் முதல் கட்டமாக தங்கத்தின் இறக்குமதியில் உள்ள 80:20 கட்டுபட்டை நீக்கியுள்ளது. இதன் அடுத்தக் கட்டமாக தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரியையும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.
மேலும் தங்கம் கடத்தப்படுவது வெகுவாக குறையும். முறையாக தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, அரசு இறக்குமதி வரியை வசூலிக்க முடியும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடு தங்கத்தை இருப்பு வைக்கும் கொள்கைக்கு எதிரான அந்த நாட்டின் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதும் தங்கத்தின் விலை குறைவதற்கான முக்கிய காரணம் ஆகும்" என்றார்.
தங்கம் கடத்துவது குறையும் என்றாலும், இதனால் தங்க நகை வியபாரிகளுக்கு என்ன பயன் என்பதுகுறித்து பிரின்ஸ் ஜீவல்லரியின் இயக்குநர் பிரின்ஸ் ஜோன்ஸியிடம் கேட்டோம்.
"80:20 இறக்குமதி கொள்கையின்படி, இறக்குமதி செய்யும் தங்கத்தின் 20 சதவிகித்தை கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் ஏற்றுமதி செய்வதற்கு வாடிக்கையாளர்களை தேட வேண்டும். அவர்களிடம் இருந்து பணம் எப்போது கிடைக்கும் என பல பிரச்னைகள் இருந்தன. இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் 20 சதவிகித தங்க நகையை ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். அப்போதுதான் மீதமுள்ள 80 சதவிகித தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும். இதன் விளைவாக உடனடியாக தங்கம் தேவை என்றால் அதிக பிரீமியம் கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.
அதாவது தங்கத்தை இறக்குமதி செய்யும்போது குறிப்பிட்ட அளவு பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும். இறக்குமதி செய்யப்படும் தங்கம் கையில் கிடைக்கும் காலம் மற்றும் தேவையின் அடிப்படையில் இந்த பிரீமியம் தொகை இருக்கும். அதிக கட்டுபாடுகள் இருக்கும்போது அதிக பிரீமியம் தொகை கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனிமேல் இது குறையும். இதனால் தங்கத்தின் விலை கணிசமாக குறையும்" என்றார்.
பங்குச் சந்தை வளர்ச்சியினால் தங்கத்தின் விலையானது ஏற்கனவே ஒருவிதமான மந்தநிலையில் உள்ளது. மேலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. இப்போது மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து, ஶ்ரீ கோல்டு ஜீவல்லரியின் நிர்வாக இயக்குநர் பவேஷ் கிரனிடம் பேசினோம்.
"தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்கவும் செய்கிறார்கள். ஆனால் 2013ஆம் ஆண்டு ஒரு தங்கத்தின் விலை (22 கரட்) ரூ.2400க்கு கீழே இறங்கிய போது இருந்த கூட்டம் இப்போது இல்லை. காரணம் அடுத்து மார்கழி மாதம் என்பதால் திருமணங்கள் இருக்காது. எனவே, தங்கம் வாங்குவதில் ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. மேலும் மக்கள் இன்னும் விலை குறையும் என எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
விலை குறைந்தும் தங்கத்தை வாங்குவதில் மக்கள் அதிகமாக ஆர்வம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்க நகைகளை அணிவது பெண்கள் படிப்படியாக குறைத்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே உள்ள பழைய நகையை மாற்றி, தேவையான புதிய நகைகளை வாங்கி கொள்கிறார்கள். மேலும் தங்கத்தையும் முதலீடாக பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் வருமானம் என்பது பெரிய அளவில் இல்லை. மேலும் தங்கத்தின் மூலமாக வருமானம் இருக்காது. ஆனால் அவசர தேவைகளுக்கு தங்கத்தை விற்று பணமாக்க முடியும் என்பதுதான் இதில் உள்ள ஒரே வசதி. இதனால் மக்கள் தங்களின் தேவைக்கு மட்டும் தங்கம் வாங்கும் மனநிலையில் இருக்கிறார்கள்.
தங்கம்தான் சிறந்த முதலீடு என்பதிலிருந்து விடுபட்டு, இதுவும் ஒரு முதலீடு என்ற நோக்கில் தங்கத்தை வாங்குகிறார்கள்.
--ந.விகடன் இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மெட்ராஸ் ஜீவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜெலானி கூறுகையில், "மத்திய அரசிடம் தங்க இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாட்டையும், வரியையும் குறைக்கும்படி கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், அந்த சமயத்தில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் இறக்குமதினால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிக அதிகமாக இருந்தது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அதிக வரியும், இறக்குமதி செய்யும் தங்கத்தில், 20 சதவிகிதத்தை கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் கட்டுபாடுகளை விதித்தது. இதன் விளைவாக தங்கத்தின் விலை அதிகரித்தது.
பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தங்கத்தின் இறக்குமதியில் இருக்கும் கட்டுபாடுகளை படிப்படியாக தளர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள். இதன் முதல் கட்டமாக தங்கத்தின் இறக்குமதியில் உள்ள 80:20 கட்டுபட்டை நீக்கியுள்ளது. இதன் அடுத்தக் கட்டமாக தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரியையும் குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.
மேலும் தங்கம் கடத்தப்படுவது வெகுவாக குறையும். முறையாக தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, அரசு இறக்குமதி வரியை வசூலிக்க முடியும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடு தங்கத்தை இருப்பு வைக்கும் கொள்கைக்கு எதிரான அந்த நாட்டின் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதும் தங்கத்தின் விலை குறைவதற்கான முக்கிய காரணம் ஆகும்" என்றார்.
தங்கம் கடத்துவது குறையும் என்றாலும், இதனால் தங்க நகை வியபாரிகளுக்கு என்ன பயன் என்பதுகுறித்து பிரின்ஸ் ஜீவல்லரியின் இயக்குநர் பிரின்ஸ் ஜோன்ஸியிடம் கேட்டோம்.
"80:20 இறக்குமதி கொள்கையின்படி, இறக்குமதி செய்யும் தங்கத்தின் 20 சதவிகித்தை கட்டாயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் ஏற்றுமதி செய்வதற்கு வாடிக்கையாளர்களை தேட வேண்டும். அவர்களிடம் இருந்து பணம் எப்போது கிடைக்கும் என பல பிரச்னைகள் இருந்தன. இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் 20 சதவிகித தங்க நகையை ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். அப்போதுதான் மீதமுள்ள 80 சதவிகித தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும். இதன் விளைவாக உடனடியாக தங்கம் தேவை என்றால் அதிக பிரீமியம் கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.
அதாவது தங்கத்தை இறக்குமதி செய்யும்போது குறிப்பிட்ட அளவு பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும். இறக்குமதி செய்யப்படும் தங்கம் கையில் கிடைக்கும் காலம் மற்றும் தேவையின் அடிப்படையில் இந்த பிரீமியம் தொகை இருக்கும். அதிக கட்டுபாடுகள் இருக்கும்போது அதிக பிரீமியம் தொகை கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனிமேல் இது குறையும். இதனால் தங்கத்தின் விலை கணிசமாக குறையும்" என்றார்.
பங்குச் சந்தை வளர்ச்சியினால் தங்கத்தின் விலையானது ஏற்கனவே ஒருவிதமான மந்தநிலையில் உள்ளது. மேலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. இப்போது மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது குறித்து, ஶ்ரீ கோல்டு ஜீவல்லரியின் நிர்வாக இயக்குநர் பவேஷ் கிரனிடம் பேசினோம்.
"தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முதலீடு நோக்கில் தங்கத்தை வாங்கவும் செய்கிறார்கள். ஆனால் 2013ஆம் ஆண்டு ஒரு தங்கத்தின் விலை (22 கரட்) ரூ.2400க்கு கீழே இறங்கிய போது இருந்த கூட்டம் இப்போது இல்லை. காரணம் அடுத்து மார்கழி மாதம் என்பதால் திருமணங்கள் இருக்காது. எனவே, தங்கம் வாங்குவதில் ஒருவிதமான மந்தநிலை நிலவுகிறது. மேலும் மக்கள் இன்னும் விலை குறையும் என எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
விலை குறைந்தும் தங்கத்தை வாங்குவதில் மக்கள் அதிகமாக ஆர்வம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்க நகைகளை அணிவது பெண்கள் படிப்படியாக குறைத்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே உள்ள பழைய நகையை மாற்றி, தேவையான புதிய நகைகளை வாங்கி கொள்கிறார்கள். மேலும் தங்கத்தையும் முதலீடாக பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் வருமானம் என்பது பெரிய அளவில் இல்லை. மேலும் தங்கத்தின் மூலமாக வருமானம் இருக்காது. ஆனால் அவசர தேவைகளுக்கு தங்கத்தை விற்று பணமாக்க முடியும் என்பதுதான் இதில் உள்ள ஒரே வசதி. இதனால் மக்கள் தங்களின் தேவைக்கு மட்டும் தங்கம் வாங்கும் மனநிலையில் இருக்கிறார்கள்.
தங்கம்தான் சிறந்த முதலீடு என்பதிலிருந்து விடுபட்டு, இதுவும் ஒரு முதலீடு என்ற நோக்கில் தங்கத்தை வாங்குகிறார்கள்.
முக நூல்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» தங்கம் விலை ரூ.128 குறைந்தது
» ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 அதிகரிப்பு
» தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!
» தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு
» ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
» ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 அதிகரிப்பு
» தங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்!
» தங்கம் விலை அதிரடியாக ரூ.296 உயர்வு
» ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|