வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம்

Go down

ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம் Empty ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம்

Post by தருண் Mon Aug 29, 2016 2:36 pm

ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம் P14a

இந்தியப்  பொதுத் துறை   வங்கிகளில்  பெரிய  வங்கியான  பாரத  ஸ்டேட்  வங்கி   (SBI),  தனது துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்பிடி), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்பிஎம்),        ஸ்டேட்  பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜெ) மற்றும்  மகளிருக்கு என தொடங்கப்பட்ட மகிளா     வங்கி ஆகியவற்றை இணைக்க ஒப்புதல் தெரிவித்து, அதற்காகத் தயாராகத் தொடங்கி இருக்கிறது.  

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு    ரூ. 37 லட்சம் கோடியாக உயரும் என்றும், உலகின் டாப் 50 வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு வங்கிகள் இணைப்புக்குத் தேவையான சொத்து மதிப்பிடல், நிதிநிலை அறிக்கை, தகவல் தொழில்நுட்பம், மனித வளம், பங்குப் பிரிப்பு உள்ளிட்ட பல நடைமுறை விஷயங்களில் நிபுணர் குழுக்கள் அமைக்கப் பட்டு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த  18-ம் தேதி பிற வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் முடிவினை முறைப்படி அறிவித்தது. இந்திய வங்கித் துறையில் இது மிகப் பெரிய இணைப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஸ்டேட் வங்கியுடன் அதன் அனைத்து துணை வங்கிகளும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் தற்போதைய திட்டத்தில் இடம்பெறவில்லை. இந்த இரண்டு வங்கிகளும் பங்குச் சந்தையில் பட்டியலிடப் படாதவை என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம் P16a

ஏன் இந்த இணைப்பு?

வங்கிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவை. வங்கித் துறை சிறப்பாக செயல்படும் ஒரு நாடு நிச்சயம் பொருளதார அளவில் மேம்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகளுக்குப் போதாத காலம் போல. வாராக் கடன் அதிகரித்து,  வைப்பு நிதி, கடன் வளர்ச்சி  குறைந்து, இந்திய வங்கித் துறையே சீரமைப்பை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் முதற்கட்டம் தான் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை.

எஸ்ஐபி-ன் இந்த இணைப்பு நடவடிக்கை  சரியானதுதானா? இதனால் யாருக்கு என்ன சாதகம் என இக்ரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசனிடம் கேட்டோம்.  
 
“ஸ்டேட் வங்கிகள் இணைப்பு பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து ஏராளமான விவாதங்கள் நடந்திருந்தாலும், அறிக்கைகள், விளக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் இதனால் என்ன பயன் உண்டாகும் என்பது இதுவரை தெளிவாக இல்லை.  

தற்போது எஸ்பிஐ வங்கி தனது துணை வங்கிகளை இணைப்பது அந்த வங்கியைப் பொறுத்தவரையில் சாதகமான விஷயம்தான். இந்தத் துணை வங்கிகளின் பெரும்பான்மை சதவிகிதப் பங்குகளை எஸ்பிஐ தான் வைத்துள்ளது. அதனால் அவற்றை இணைப்பதன் மூலம் பல நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

வங்கியின் சேவைகள் பொது வானவையாக மாறும்போது அது வாடிக்கையாளர்களுக்கும் சாதகமாகவே அமையும். மேலும், வாடிக்கையாளர் களுக்கு அருகாமையில் இவற்றில் ஏதோ ஒரு கிளை நிச்சயம் இருக்கும்.  

இந்த இணைப்புக்குப் பின் எஸ்பிஐ கிளைகளையோ, பணியாளர்களையோ குறைக்கப்போவதில்லை.  வங்கிச் சேவைகள் பெரும் பான்மை மக்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் வங்கியின் நோக்கமாக இருக்கும். அதனால் பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்றவை அதிகளவில் இருக்குமே தவிர, ஊதியக் குறைவோ, வேலை பறிப்போ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் பணியாளர்களைப் பொறுத்தவரை, சில சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்த இணைப்பினால் எஸ்பிஐ வங்கியின் கீழ் கூடுதலாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு பென்ஷன் திட்டமிடுவது, உயர் பதவிகளில் யாரை நியமிப்பது போன்ற சிக்கல்கள் வரலாம். ஆனால், இவை எல்லாம் தீர்க்க முடியாத பிரச்னைகள் அல்ல.  

அதேபோல, இந்த வங்கி களின் பங்குதாரர்களைக் கருத்தில்கொண்டு நிர்ணயிக்கப் பட்டுள்ள பங்குப் பிரிப்பு விகிதமும்(Swap Ratio) நேர்மையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் வங்கியின்    10 பங்குகளுக்கு (ரூ.10 முக மதிப்பு) எஸ்பிஐ 28 பங்குகளை (ரூ.1 முக மதிப்பு) அளிக்கும். ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் 10 பங்குகளுக்கு எஸ்பிஐ-ன் 22 பங்குகள் கிடைக்கும். இதனால் பங்குதாரர்களுக்கு சாதகம்தான்.

சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த இணைப்பு நடவடிக்கை சாதகமாகவே இருக்கும். இதனை எஸ்பிஐ வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த போதே துணை வங்கிகளின் பங்குகள் 52 வார அதிகபட்ச விலையை எட்டி, அதே நிலையில் தொடர்வதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

மேலும், இணைப்பு மற்றும் பங்குப் பகிர்வு விகிதம் குறித்த அறிவிப்பு வெளியான பின்  ஸ்டேட் பேங்க் மைசூர் தவிர, பிற இரண்டு வங்கிகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

இந்திய வங்கித் துறையில் இடையில் நுழைந்த தனியார் மயம், பொதுத் துறை வங்கிகளை பின்னுக்கு தள்ளியது. காரணம், பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் காட்டிவந்த மெத்தனப் போக்கு. தனியார் வங்கிகள் வீடு தேடி வந்து சேவை அளிக்கும்போது எப்படி பொதுத் துறை வங்கி களுக்கு மக்கள் போவார்கள்?

ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம் P17a

ஆனால், இந்த இணைப்புக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உள்ள ஐசிஐசிஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு சொத்தை எஸ்பிஐ நிர்வகிக்கப் போகிறது. இதன் மூலம் மக்களிடம் புதிய மதிப்பை பொதுத் துறை வங்கிகள் பெறப் போகின்றன. இந்த இணைப்பு வெற்றியடையும் பட்சத்தில், பிற பொதுத் துறை வங்கிகளிலும் படிப்படியாக இணைப்பு நடைபெற வாய்ப்புள்ளது.

வாராக் கடன் அடிப்படையில் பார்க்கும் போது, பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிக சுமையில் உள்ளன. அவற்றைத் தீர்க்க வேண்டுமெனில் தீர்க்கமான முடிவுகள் அவசியம்.

எஸ்பிஐ துணை வங்கிகளை இணைப்பதன் மூலம் நிர்வாக அடிப்படையில் மேலும் வலுவடையும். செலவுகள் பெருமளவில் குறைக்கப்படும். சொத்து நிர்வகிப்பு, ஆடிட்டிங் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளும் குறையும். இதனால் வங்கிகளின் நிதிநிலையையும் சீர்செய்ய முடியும்.

நீண்ட காலத்தில் வங்கிகளின் நிதி நிலையும் உயரும். வங்கி நிர்வகிக்கும் சொத்துகளின் தரமும் மேம்படும். வங்கிகள் மேம்பட்டால், பொருளா தாரமும் மேம்பட்டதாகவே அர்த்தம்” என்று கூறி முடித்தார்.

இவர் கூறுவதுபோல பொதுத் துறை வங்கிகள் சீரமைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றுதான். அதற்கு எஸ்பிஐ ஒரு தொடக்கம் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது நடைமுறை சிக்கல்களைத் தாண்டி வெற்றியடைய வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum