வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு... பங்குதாரர்களுக்கு லாபமா

Go down

கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு... பங்குதாரர்களுக்கு லாபமா Empty கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு... பங்குதாரர்களுக்கு லாபமா

Post by தருண் Sat Aug 13, 2016 10:17 am

கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு... பங்குதாரர்களுக்கு லாபமா P15a

அனில் அகர்வால்-ன் வேதாந்தா ரிசோர்சஸ் பி.எல்.சி குழுமத்தை சேர்ந்த வேதாந்தா, 2011-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியாவின் 58.5 சதவிகித பங்கை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து வாங்கியது. தற்போது வேதாந்தாவிடம் கெய்ர்ன் இந்தியாவின் 59.88 சதவிகித பங்குகள் இருக்கின்றன.

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வேதாந்தா நிறுவனத்துடன் முழுமையாக இணைக்க, மீதமுள்ள 40.12 சதவிகித பங்குகளையும் வாங்குவதற்கு, கடந்த ஜூன் 2015-ல் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, ஜூன் 2016-க்குள் கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு நடக்க வேண்டும்.

ஜூன் 2015 அறிவிப்பின்படி, கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்கு ஒன்றுக்கு இணையாக, ஒரு வேதாந்தா நிறுவனப் பங்கு மற்றும் ஒரு ரெடீமபிள் ப்ரிஃபரென்ஸ் பங்கையும் வழங்க இருந்தது. வேதாந்தாவின் இத்தகைய நடவடிக்கையானது கெய்ர்ன் இந்தியா நிறுவன பங்குதாரர்களுக்கு பாதகமாக இருக்கும் என அப்போதே பல பங்குச் சந்தை நிபுணர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்தனர்.

புதிய ஆஃபர்!

இதனை அடுத்து, கெய்ர்ன் இந்தியா மற்றும் வேதாந்தா ஆகிய இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் சேர்ந்து கெய்ர்ன் இந்தியாவின் பங்குதாரர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளி யிட்டிருக்கிறது.

அந்த புதிய அறிவிப்பின்படி, இந்த இரு நிறுவனங்களின் இணைப்பின் போது, கெய்ர்ன் இந்தியாவின் ஒரு பங்குக்கு, வேதாந்தா நிறுவனத்தின் ஒரு ஈக்விட்டி பங்கும், நான்கு ரெடீமபிள் ப்ரிஃபரென்ஸ் பங்குகளையும் (Redeemable Preference share) வழங்குவதாக சொல்லி இருக்கிறது. இந்த ரெடீமபிள் ப்ரிஃபரென்ஸ் பங்கை (Redeemable Preference share) வழங்குவதால், வேதாந்தா நிறுவனத்துக்கு 0.5 பில்லியன் டாலர் (சுமார் 3,500கோடி ரூபாய்) செலவாகும்.

பிரச்னை மாறவில்லை!

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பினால் முதலீட்டாளர் களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என நிறுவனங்களின் உள்நோக்கங்களை ஆய்வு செய்யும் ‘இன்கவர்ன் ரிசர்ச் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் சுப்ரமணியனிடம் கேட்டோம்.

“கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்கு ஒன்றுக்கு வழங்கப்படும் தொகை 30 ரூபாய் கூடுதலாக அதிகரித்திருக்கிறதே தவிர, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஃபரில் வேறு எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வேதாந்தா மற்றும் வேதாந்தா பிஎல்சி நிறுவனத்தின் 71,300 கோடி ரூபாய் கடன்கள் முழுமையாக கெய்ர்ன் இந்தியா பங்குதாரர்களின் தலையில் கட்டப்படும்.

கெய்ர்ன் இந்தியாவை தன்னோடு இணைத்துக் கொள்ள 26,850 கோடி ரூபாய் செலவழித்தது. அதில் கெய்ர்ன் இந்தியா விடமிருந்தே 18,000 கோடி ரூபாய் பணத்தை பயன்படுத்தி இருக்கிறது. அதோடு மீதமுள்ள 8,000 கோடி ரூபாயை கெய்ர்ன் இந்தியாவிடமிருந்து, வேதாந்தாவின் துணை நிறுவனங்களுள் ஒன்றான டிஹெச்எல் ஜிங்க் என்கிற நிறுவனத்துக்குக் கடன் வழங்கியது. இதிலெல்லாம் எந்த மாற்றமும் செய்யப்படாதபோது, இந்த இணைப்பு எப்படி கெய்ர்ன் இந்தியா முதலீட்டாளர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும்’’ என்றார்.

எல்ஐசி எதிர்ப்பு!

ஜூன் 2015-ல் வந்த அறிவிப்பை எதிர்த்ததில் மைனாரிட்டி பங்குதாரர்களில் எல்.ஐ.சி குறிப்பிடத்தக்க ஒரு நிறுவனம் ஆகும். எல்.ஐ.சியின் எதிர்ப்பு காரணமாகத்தான் இப்போது புதிய அறிவிப்பே வந்திருக்கிறது.

எல்.ஐ.சி நிறுவனம், கெய்ர்ன் இந்தியாவின் 9.06 சதவிகித பங்குகளையும், வேதாந்தாவின் 3.05 சதவிகித பங்குகளையும் வைத்திருக்கிறது. ஒரு கெய்ர்ன் இந்தியா பங்குக்கு 1 வேதாந்தா பங்கு மற்றும் 4 ரெடீமபிள் ஃப்ரிஃபெரென்ஸ் பங்கு தொடர்பாக எல்.ஐ.சி இன்னும் தன் கருத்தை தெரிவிக்கவில்லை. கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா நிறுவன இணைப்பினால் ஏற்பட இருக்கும் நீண்ட கால வளர்ச்சி, உரிமங்கள், வரி பாக்கி போன்ற பிரச்னைகளை இன்னும் அலசி ஆராய்ந்து தன் கருத்தை விரைவில் தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறது.

முதலீட்டாளர்கள் சந்திப்பு!

இந்த புதிய ஆஃபரை பற்றி வரும் செப்டம்பர் மாதம் 8, 2016-ம் தேதி வேதாந்தா நிறுவனப் பங்குதாரர்களோடும், செப்டம்பர் 12, 2016-ம் தேதி கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்குதாரர்களோடும் கலந்து பேச இருக்கிறார்கள்.

வரி கட்டியபின் இணைப்பு..!

இந்தியாவின் வருமான வரித் துறை கடந்த 2014-ம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு மூலதன ஆதாயம் மூலம் கிடைத்த வருமானத்துக்கு வரியாக 24,500 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தது. அதை நீதிமன்றங்களில் முறையிட்டு கெய்ர்ன் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபின் தற்போது சர்வதேச நியாய மையத்தில் (International Court of Arbitration) முறையிட்டிருக்கிறது. இந்த வரிப் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்காமல் நிறுவன இணைப்பு நடக்காது என்று இந்தியாவின் வருமான வரித் துறை தெளிவாக தன் கருத்தை பதிவு செய்திருக்கிறது.

இணைப்புக்குப் பின்!

வேதாந்தா மற்றும் கெய்ர்ன் இந்தியா நிறுவனங்களின் இணைப்புக்குப்பிிறகு கெய்ர்ன் இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி கேள்விக்குறியதாக இருக்கும் என்று கோல்டுமென் சாக்ஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அதேபோல், கெய்ர்ன் இந்தியாவின் உரிமங்கள், ஹைட்ரோ கார்பன் ரிசர்வ்கள் எல்லாமே அதிகமாக இருப்பதால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தவுடன் இந்த நிறுவனமும் நன்றாக லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது.

தற்போது கெய்ர்ன் நிறுவனம் வேதாந்தாவுடன் இணைந்து விடுவதால், அதன் வளர்ச்சி இந்தியாவில் குறையவே வாய்ப்பிருப்பதாக எடெல்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் தெரிவித்திருக்கிறது.

இந்த இணைப்பு நடந்ததால் புரமோட்டார்கள் போக, கெய்ர்ன் இந்தியாவின் பங்குதாரர்கள் 20.2 சதவிகித பங்குகளை மட்டுமே வைத்திருப்பார்கள். வேதாந்தா நிறுவன பங்குதாரர்கள் 29.7 சதவிகித பங்குகளை வைத்திருப்பார்கள்.

ஆக மொத்தத்தில், கெய்ர்ன் இந்தியாவில் உள்ள சிறுபான்மை முதலீட்டாளர்களின் பாடு திண்டாட்டாமாகவே இருக்கும்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
» ஸ்டேட் வங்கிகள் இணைப்பு - யாருக்கு சாதகம்
» கம்பெனிகள் இணைப்பு... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் !
» ராஜஸ்தானில் 3 எண்ணெய் வயல்கள் கண்டுபிடிப்பு: கெய்ர்ன் இடைக்கால ஈவுத் தொகை அறிவிப்பு
» டிஜிட்டல் இந்தியா... மாற்றங்களுக்கு ஏற்ப ஏற்றம் தரும் பங்குகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum