வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்!

Go down

பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்! Empty பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்!

Post by தருண் Fri Mar 18, 2016 11:20 am

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுக்கும் நடைமுறைகளை பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்) அமைப்பு எளிமைப் படுத்தி உள்ளது.

தற்போது பிஎஃப் பணத்தைத் திரும்ப பெற வேண்டும் எனில் வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியம் தேவை. இதனால் பிஎஃப் பணத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. நிறுவனத்தில் ஏதோவொரு பிரச்னை காரணமாகத் வேலையை விட்டு விலகும்போது, பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாக நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி.பிரசாத் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்! P42a

“வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதோ, வேறு காரணங்களினால் நிரந்தரமாக வேலையை விட்டு விலகும்போதோ, பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். அதாவது, தொடர்ந்து 60 நாட் களுக்கு மேல் வேலையில் இல்லாமல் இருக்கும்போது பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை மாறும்போது பணத்தை எடுக்க முடியாது. திருமணம், மருத்துவக் காரணங்கள், நிரந்தரமாக வெளிநாட்டுக்கு செல்லும்போது, நிரந்தர பணி ஓய்வு பெறும்போது எந்தவிதமான காத்திருப்புக் காலமும் இல்லாமல் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

இப்படி பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுக்கும் போது, படிவம் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து, பிஎஃப் அலுவலகத்தில் தரவேண்டும். அதன்பிறகு அந்தப் படிவம் நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப் படும். நிறுவனம் ஒப்புதல் அளித்தபிறகு மீண்டும் பிஎஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, ஊழியருக்கு செட்டில்மென்ட் செய்யப்படும்.

இப்படி இல்லாமல் பிஎஃப் பணத்தை எளிதாக பெற யுஏஎன் (Universal Account Number) எண் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமல் பணத்தை எடுக்க முடியும். கடந்த 2014-ம் ஆண்டு யுஏஎன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இது பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. எனவே, ஊழியர்கள் அனைவரும் இந்த யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்து வைத்திருப்பது முக்கியம்.

இந்த யுஏஎன் எண் பெறுவதற்கு ஆதார் எண், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு எண் ஆகியவை தேவை. இந்த எண்ணை வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் பெறலாம். வேலையில் இல்லாதவர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த எண்ணை பெற முடியும். இந்த எண் கிடைத்தபிறகு ஊழியர்கள் அதை ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு பிஎஃப் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

பிஎஃப் பணத்தை திரும்ப எடுத்தல்... எளிதாகும் நடைமுறைகள்! P43b

பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன், வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பிஎஃப் செட்டில்மென்ட் பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்றார்.

பிஎஃப் பணத்தைத் திரும்ப எடுப்பது எளிமைப் படுத்தப்பட்டு இருப்பது பலருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியே!

பிஎஃப்: 2015-ன் மாற்றங்கள்!

* பணிக்கு சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் வேலையிலிருந்து விலகி, பிஎஃப் பணம் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் பிஎஃப் அலுவலகத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

* யுஏஎன் எண் அடிப்படையில் பிஎஃப் செட்டில்மென்ட் வசதி அறிமுகம்.

* பிஎஃப் கணக்கு விவரங்களை தெரிந்துகொள்ள பிஎஃப் ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதை டவுன்லோடு செய்ய முடியாத நிலையே உள்ளது.

* மிஸ்டு கால், எஸ்எம்எஸ் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டது.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum