வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Go down

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! Empty பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்...தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Post by தருண் Thu Mar 10, 2016 11:11 am


அதிக ரிஸ்க் எடுக்காமல் ஓய்வுக்காலத்துக்காகச் சேமிக்க நினைப்பவர்களுக்காகச் சிறந்த முதலீடாக இருப்பது பிபிஎஃப் (Public Provident Fund Account) முதலீட்டுத் திட்டம். இந்தத் திட்டம் தபால் அலுவலகத்தில் பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டம் என்ற பெயரிலும் இப்போது அழைக்கப் படுகிறது. இதில் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், இந்த முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்துச் சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர் சொன்னார்.

1 யார் துவங்கலாம்?

யார் வேண்டுமானாலும் பிபிஎஃப் கணக்குத் துவங்கலாம். ஒருவர் பெயரில் ஒரு கணக்கும், குழந்தைகளின் ஒவ்வொரு கணக்கும் பாதுகாவலர் என்ற முறையில் துவங்கலாம். அதாவது, மைனராக இருப்பவர்களுக்கு பாதுகாப்பாளர் அல்லது பெற்றோர் என்று குறிப்பிட வேண்டும். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். ஜாயின்ட் அக்கவுன்ட் துவங்க முடியாது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிபிஎஃப் கணக்கை துவங்க முடியாது. இந்தியாவில் இருக்கும்போது பிபிஎஃப் கணக்கு துவங்கியபிறகு வெளிநாடுகளில் குடியேறுபவர்கள் கணக்கைத் தொடர முடியும்.

2 எங்குத் துவங்கலாம்?

பொதுத் துறை வங்கிகள், குறிப்பிட்ட தனியார் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் பிபிஎஃப் கணக்கு துவங்க முடியும். இதற்கு கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்தி செய்வது அவசியம். 15 ஆண்டுகளில் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யப்படும் தொகை 50 ஆயிரம் ரூபாயைத் தாண்டும்போது பான் எண் தேவைப்படும். வங்கியில் துவங்கிய பிபிஎஃப் கணக்கை அஞ்சல் அலுவலகத்துக்கும், அஞ்சலகத்தில் துவங்கிய கணக்கை வங்கிக்கும் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.

3 முதலீடு எவ்வளவு?

வருடத்துக்கு ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒரு நிதியாண்டுக்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்வது அவசியம். இல்லையெனில் அபராதம் இருக்கும். பிபிஎஃப் கணக்கில் ஒரே முறை மொத்தமாக பணம் செலுத்தும் வசதி உள்ளது.

4 முதிர்வு!

பிபிஎஃப் கணக்குக்கு 15 வருட லாக்-இன் உள்ளது. இடையில் பணத்தை எடுக்க முடியாது. பிபிஎஃப் கணக்கு 15 வருடம் முடிந்தபிறகு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதலீட்டைப் புதுப்பிக்க முடியும். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.

5 இடையில் பணம் எடுத்தல்!

ஏழு வருடத்துக்குப்பின் பிபிஎஃப் கணக்கிலிருந்து 50 சதவிகிதம் வரை எடுக்கலாம். இந்தத் தொகை கடனாகக் கருதப்பட மாட்டாது. எனவே, அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்த தேவையில்லை. இப்படி ஒரு நிதியாண்டுக்கு ஒருமுறை பணத்தை எடுக்க முடியும்.

6 வரி!

பிபிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ்அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கும் வரி செலுத்த தேவையில்லை.

7 கடன்!

பிபிஎஃப் கணக்கு ஆரம்பித்து, மூன்று நிதியாண்டுகள் பூர்த்தி அடைந்தபிறகு முதலீடு செய்த தொகையில் 25 சதவிகிதம் வரை கடன் பெற முடியும். இந்தக் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். இரண்டு சதவிகித வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இப்படி 3 - 6 வருடத்துக்குள் நான்கு முறை கடன் பெற முடியும். ஆனால், முதலில் வாங்கிய கடனை முழுவதுமாகத் திரும்பச் செலுத்திய பிறகுதான் அடுத்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

8 உறுப்பினர் மரணம் அடையும்போது!

பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் உறுப்பினருக்கு எதிர்பாராத விதமாக மரணம் ஏற்படும்போது, அவரின் சட்டப்படியான வாரிசு அல்லது நாமினி கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

9 பறிமுதல் செய்ய முடியாது!

பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யும் தொகை எந்தக் கடனுக்கு ஈடாகவும் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதாவது, பிபிஎஃப் உறுப்பினர் கடன் அல்லது வேறு எதாவது காரணத்துக்காக நீதிமன்றம் அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும்போது, பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகையைக் கடனுக்கு ஈடாகக் கேட்க முடியாது.

10 எவ்வளவு முதிர்வுத் தொகை கிடைக்கும்?

பிபிஎஃப் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு 8.7% வட்டி என்றால் முதிர்வுத் தொகையாக சுமார் ரூ.3.70 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த முத லீட்டுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டும் அறிவிக்கப்படும். பிபிஎஃப் திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளீர்கள், அதற்கு வட்டி எவ்வளவு கிடைத்துள்ளது என்பதை அஞ்சலகத்தில் ஆன்லைனில் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிக்ஸ் வங்கி குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்
» வீட்டு பட்ஜெட்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
» மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum