Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
புற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய்...சிறப்பு பாலிசிகள் தேவையா?
Page 1 of 1
புற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய்...சிறப்பு பாலிசிகள் தேவையா?
தனிநபர் பாலிசி, ஃப்ளோட்டர் பாலிசி என்பதை எல்லாம் தாண்டி இப்போது சிறப்பு பாலிசிகள் அதிக அளவில் வர ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பாலிசி என்ற ரீதியில் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டன.
இதில் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்கெல்லாம் தனித்தனி இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகள் அவசியம் தேவையா, இந்த பாலிசி எடுக்காமலே மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
சிறப்பு பாலிசிகள் வயதின் அடிப்படையிலும் உள்ளன. மூத்த குடிமக்கள், மாணவர்கள் எனத் தனித்தனியாகச் சிறப்புப் பாலிசிகள் உள்ளன. மற்றும் பிரசவ கால சிறப்பு பாலிசி, இருதய நோய், டெங்கு, கேன்சர், ஹெச்ஐவி, சர்க்கரை நோய் எனப் பல சிறப்பு பாலிசிகள் உள்ளன.
சிறப்பு பாலிசிகள் தேவை!
மனிதனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, புதிய நோய்களின் தாக்கம் அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் எல்லா வியாதி களுக்கும் ஒரே மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இப்போது ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். பொது மருத்துவம் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. எனவே, ஒவ்வொரு நோய்க்கும் ஒரு தனி பாலிசி என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பல பாலிசிகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
சிறப்பு பாலிசிகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் முன், சில நோய் பாதிப்புகளுக்குக்கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி க்ளெய்ம் கிடைக்கும். அந்த பாலிசியில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி!
கேன்சர், பக்கவாதம், இருதய நோய் போன்ற பல நோய்களுக்குக் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்கும். இந்த பாலிசியில் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் கண்டறியப்பட்டு 30 நாட்களுக்கு நோய் கண்டவர், மரணம் அடையாமல் இருந்தால் அவருக்கு கவரேஜ் தொகை முழுவதுமாகக் கிடைக்கும். இந்த பாலிசியில் ஒரே ஒருமுறை மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். அதன்பிறகு எந்தத் தீவிர நோய்க்கும் க்ளெய்ம் கிடைக்காது.
ஆனால், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நோய்க்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என ரேஷியோ வைத்து க்ளெய்ம் வழங்குகிறது. பாலிசிதாரரின் வருமானத்தின் அடிப்படையில் கவரேஜ் தொகை கிடைக்கும். எந்தெந்த நோய்களுக்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்பதை பாலிசி எடுக்கும்போதே இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிடும்.
சிறப்பு பாலிசிகளை யார் எடுக்கலாம் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன் விளக்கினார்.
''சிறப்பு பாலிசிகள் என்பது கூடுதல் கவரேஜ் தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, சிறப்பு பாலிசிகளில் கிடைக்கும் பெரும்பாலான நோய்களுக்கான கவரேஜ் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கிடைக்கிறது. ஏனெனில், சில சிறப்பு பாலிசிகளில் காத்திருப்புக் காலம் அதிகமாக உள்ளது.
சாதாரணமாக, தனிநபர் பாலிசியில் அடிப்படை வைத்துக் கொண்டு சிறப்பு பாலிசிகளைத் தனியாக எடுப்பது நல்லது. அதாவது, சிலருக்கு கேன்சர் நோயானது பரம்பரை பரம்பரை யாக வரலாம். அப்படி இருப்பவர் கள் அல்லது நோய் வருவதற்கான அறிகுறி இருப்பவர்கள் சிறப்பு பாலிசிகள் எடுக்கத் திட்டமிடலாம்.
இந்தச் சிறப்பு பாலிசிகளில் சர்க்கரை நோய்க்கென தனியாக இருக்கும் பாலிசிகளுக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுப்ப தற்கான தேவை குறைவுதான். தொடர் சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லாமல் அதன் மூலமாக உருவாகும் சில நோய்களுக்கான சிகிச்சைக்கு கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, சர்க்கரை நோய் வந்தால், பிபி வருவதற்கான வாய்ப்புள்ளது. பிபி அதிகமானால் இருதய நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, அந்தச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு க்ளெய்ம் கிடைக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கான கவரேஜ் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகளிலே கவரேஜ் கிடைக்கும். இதற்குச் சிறப்பு பாலிசி என்ற அவசியம் இல்லை. இந்த நோய்க்கு கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கவரேஜ் கிடைக்காது.
இருதய நோய், கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் சிறப்பு பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பல விதமான கேன்சர் உள்ளது. இதில் சிலவகை கேன்சர் நோயை சில லட்சங்களில் சரி செய்துவிட முடியும். ரத்த புற்றுநோய்க்கு அதிக அளவில் செலவாகும். எனவே, இந்த நோய் வர வாய்ப்புள்ளவர்கள் சிறப்பு பாலிசி மற்றும் கிரிட்டிகல் இல்னஸ் என இரண்டையும் சேர்த்து எடுப்பது நல்லது. ஏனெனில் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் நோய்க்கான சிகிச்சை பெறாமலே க்ளெய்ம் கிடைத்து விடும்” என்றார்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுபோன்ற வியாதிகள் வரும்போது வருமான இழப்பு ஏற்படும். எனவே, இது மாதிரியான நோய் வர அதிக வாய்ப்புள்ளவர்கள் இந்த இரண்டு பாலிசிகளையும், வாய்ப்பு குறைவாக இருப்பவர்கள் சிறப்பு பாலிசியையும் எடுக்கலாம்.
--ந.விகடன் இதில் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்கெல்லாம் தனித்தனி இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகள் அவசியம் தேவையா, இந்த பாலிசி எடுக்காமலே மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
சிறப்பு பாலிசிகள் வயதின் அடிப்படையிலும் உள்ளன. மூத்த குடிமக்கள், மாணவர்கள் எனத் தனித்தனியாகச் சிறப்புப் பாலிசிகள் உள்ளன. மற்றும் பிரசவ கால சிறப்பு பாலிசி, இருதய நோய், டெங்கு, கேன்சர், ஹெச்ஐவி, சர்க்கரை நோய் எனப் பல சிறப்பு பாலிசிகள் உள்ளன.
சிறப்பு பாலிசிகள் தேவை!
மனிதனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது, புதிய நோய்களின் தாக்கம் அதிகமாகி உள்ளது. முன்பெல்லாம் எல்லா வியாதி களுக்கும் ஒரே மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இப்போது ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். பொது மருத்துவம் என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. எனவே, ஒவ்வொரு நோய்க்கும் ஒரு தனி பாலிசி என இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பல பாலிசிகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
சிறப்பு பாலிசிகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளும் முன், சில நோய் பாதிப்புகளுக்குக்கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி க்ளெய்ம் கிடைக்கும். அந்த பாலிசியில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கிரிட்டிகல் இல்னஸ் பாலிசி!
கேன்சர், பக்கவாதம், இருதய நோய் போன்ற பல நோய்களுக்குக் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் க்ளெய்ம் கிடைக்கும். இந்த பாலிசியில் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் கண்டறியப்பட்டு 30 நாட்களுக்கு நோய் கண்டவர், மரணம் அடையாமல் இருந்தால் அவருக்கு கவரேஜ் தொகை முழுவதுமாகக் கிடைக்கும். இந்த பாலிசியில் ஒரே ஒருமுறை மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். அதன்பிறகு எந்தத் தீவிர நோய்க்கும் க்ளெய்ம் கிடைக்காது.
ஆனால், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நோய்க்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என ரேஷியோ வைத்து க்ளெய்ம் வழங்குகிறது. பாலிசிதாரரின் வருமானத்தின் அடிப்படையில் கவரேஜ் தொகை கிடைக்கும். எந்தெந்த நோய்களுக்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்பதை பாலிசி எடுக்கும்போதே இன்ஷூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிடும்.
சிறப்பு பாலிசிகளை யார் எடுக்கலாம் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஸ்ரீதரன் விளக்கினார்.
''சிறப்பு பாலிசிகள் என்பது கூடுதல் கவரேஜ் தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, சிறப்பு பாலிசிகளில் கிடைக்கும் பெரும்பாலான நோய்களுக்கான கவரேஜ் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கிடைக்கிறது. ஏனெனில், சில சிறப்பு பாலிசிகளில் காத்திருப்புக் காலம் அதிகமாக உள்ளது.
சாதாரணமாக, தனிநபர் பாலிசியில் அடிப்படை வைத்துக் கொண்டு சிறப்பு பாலிசிகளைத் தனியாக எடுப்பது நல்லது. அதாவது, சிலருக்கு கேன்சர் நோயானது பரம்பரை பரம்பரை யாக வரலாம். அப்படி இருப்பவர் கள் அல்லது நோய் வருவதற்கான அறிகுறி இருப்பவர்கள் சிறப்பு பாலிசிகள் எடுக்கத் திட்டமிடலாம்.
இந்தச் சிறப்பு பாலிசிகளில் சர்க்கரை நோய்க்கென தனியாக இருக்கும் பாலிசிகளுக்கான பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுப்ப தற்கான தேவை குறைவுதான். தொடர் சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லாமல் அதன் மூலமாக உருவாகும் சில நோய்களுக்கான சிகிச்சைக்கு கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, சர்க்கரை நோய் வந்தால், பிபி வருவதற்கான வாய்ப்புள்ளது. பிபி அதிகமானால் இருதய நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, அந்தச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு க்ளெய்ம் கிடைக்கலாம்.
டெங்கு காய்ச்சலுக்கான கவரேஜ் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகளிலே கவரேஜ் கிடைக்கும். இதற்குச் சிறப்பு பாலிசி என்ற அவசியம் இல்லை. இந்த நோய்க்கு கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் கவரேஜ் கிடைக்காது.
இருதய நோய், கேன்சர் வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் சிறப்பு பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் பல விதமான கேன்சர் உள்ளது. இதில் சிலவகை கேன்சர் நோயை சில லட்சங்களில் சரி செய்துவிட முடியும். ரத்த புற்றுநோய்க்கு அதிக அளவில் செலவாகும். எனவே, இந்த நோய் வர வாய்ப்புள்ளவர்கள் சிறப்பு பாலிசி மற்றும் கிரிட்டிகல் இல்னஸ் என இரண்டையும் சேர்த்து எடுப்பது நல்லது. ஏனெனில் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் நோய்க்கான சிகிச்சை பெறாமலே க்ளெய்ம் கிடைத்து விடும்” என்றார்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுபோன்ற வியாதிகள் வரும்போது வருமான இழப்பு ஏற்படும். எனவே, இது மாதிரியான நோய் வர அதிக வாய்ப்புள்ளவர்கள் இந்த இரண்டு பாலிசிகளையும், வாய்ப்பு குறைவாக இருப்பவர்கள் சிறப்பு பாலிசியையும் எடுக்கலாம்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» சர்க்கரை நோய்: இழப்பீடு கிடைக்குமா?
» சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா?
» பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு
» பெஸ்ட் பாலிசிகள்!
» ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!
» சர்க்கரை நோய்: மெடிக்ளைம் பாலிசி கிடைக்குமா?
» பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ காப்பீடு: நியூ இந்தியா அறிவிப்பு
» பெஸ்ட் பாலிசிகள்!
» ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|