வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


நீங்கள் ஏழையா, பணக்காரரா?

Go down

நீங்கள் ஏழையா, பணக்காரரா? Empty நீங்கள் ஏழையா, பணக்காரரா?

Post by தருண் Thu Jul 23, 2015 10:44 am

நீங்கள் ஏழையா இல்லை பணக்காரரா என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? இந்தக் கேள்விக்குச் சில பணக் காரர்கள், தங்களை ஏழை என்று சொல்வார்கள். சில நடுத்தர வர்க்கத்தினர், தன்னைப் பணக் காரர் என்று சொல்வார்கள். நீங்கள் ஏழையா அல்லது பணக் காரரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? என்கிற கேள்வியை மும்பையைச் சேர்ந்த லேடர்செவன் ஃபைனான்ஷியல் அட்வைஸரி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நீங்கள் ஏழையா, பணக்காரரா? P64a

“மாத சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார் கள். ரூ.10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். நடுத்தரவர்க்கம், கீழ் நடுத்தர வர்த்தகம், மேல் நடுத்தரவர்க்கம், உயர்வர்க்கம் எனத் தங்களின் வருமானத்தின் அடிப்படையில் வகைப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் அதிகமா னவர்கள் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதை எதிர்கால நோக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். அதை அடைய முடியவில்லையெனில், தங்களை ஏழையாக நினைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கமும் ஒரு நாளைக்கு 30 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களை வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருதுகிறது. அதேபோல, வரிச் செலுத்து பவர்களைப் பணக்காரர்களாக நினைக்கிறது. இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது.

நீங்கள் ஏழையா, பணக்காரரா என்பதை அறிந்துகொள்ளப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. சம்பளத்தை மட்டும் அடிப்படை யாக எடுத்துக்கொள்ளாமல், சேமிப்பை வைத்து உங்களின் நிலையைக் கணக்கிடப் போகி றோம். இதில் இரண்டு வீடு, நான்கு கார்கள், அதிகமான சொத்துகள், தொடர்ந்து பண வரத்து இருப்பவர்களுக்கு இந்தக் கணக்கீடு பொருந்தாது. குடும்பச் சொத்துகள் வைத்திருந்தாலும், இந்த அளவீட்டுக்குள் அவர்கள் வரமாட்டார்கள். இதுமாதிரி இல்லாதவர்களை ஏழையா, பணக்காரரா என்பதை அளவிடுவது அவசியமானது.

செலவு விகிதம்!

சிலர் வாங்கும் சம்பளத்தில் 70 சதவிகித தொகையைச் செலவு செய்துவிடுவார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதுவும் அடுத்தச் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறவர்கள் மிக அதிகமான தொகையைச் சேமிக்க வேண்டியி ருக்கும். அதாவது, மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபர், அடுத்த 10 ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன செலவுகள் உள்ளன என்பதைப் பட்டியலிட வேண்டும். அதாவது, வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ இன்னும் எத்தனை வருடத்துக்குச் செலுத்த வேண்டும், குழந்தைகளின் உயர் கல்விக்கு எவ்வளவு தொகை தேவைப்படும், குழந்தைகள் என்ன மாதிரியான படிப்பைப் படிக்கப் போகிறார்கள், ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதைக் கணக்கிட வேண்டும். இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர் மாத சம்பளத்தில் 40-50 சதவிகித தொகையை சேமிக்க வேண்டியிருக்கும். அதுவும் போதுமானதாக இருக்குமா என்பது நிச்சயம் இல்லை.

உண்மையான செலவு!

வாங்கும் சம்பளத்தில் உங்களின் உண்மையான செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, சில செலவுகளைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். வீட்டுச் செலவு, வீட்டுக் கடன் இஎம்ஐ, குழந்தைகள் படிப்பு போன்றவை உண்மையான செலவுகள். இதுபோக உள்ள மற்ற செலவுகள், முடிந்தவரைத் தவிர்க்கக்கூடிய செலவுகளே ஆகும். அதாவது, ஷாப்பிங், ஹோட்டல், பொழுதுபோக்கு போன்றவை.

சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?

சேமிக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், சேமிக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சேமிக்கி றோம் என்பதே முக்கியம். அதாவது, சேமிக்கும் தொகையில் செலவு தொகை எத்தனை மடங்கு என்பதைப் பார்க்க வேண்டும். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபரின் சேமிப்பு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். செலவு 40 ஆயிரம் ரூபாய். இவர் வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் சேமிக்க முடியும். இந்தத் தொகை அவரது மூன்று மாத செலவு தொகையைத் தான் ஈடுகட்ட முடியும். ஆனால், அவசரகாலத் தேவைகள் வரும்போது, இந்தத் தொகையை வைத்து நிலைமையைச் சமாளிப்பது கடினம்தான்.

அடுத்தது, மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் அதே 10 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக, ஒரு வருடத்தின் முடிவில் 1.2 லட்சம் ரூபாய் இருக்கும். இவரது மாத செலவு மாதத்துக்கு 20,000 என்பதால், இவர் 6 மாத செலவு தொகையைக் கையில் வைத்திருப்பார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்பது இப்போது உங்களுக்கே தெரியும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் சம்பளம் ஒரே அளவானதாக இல்லை என்றாலும், இருவரும் சேமிக்கும் தொகையும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் செலவு தொகையின் விகிதம் வித்தியாசப்படுகிறது. எனவே, முடிந்தவரை செலவு களைக் குறைத்துச் சேமிப்பை அதிகரிப்பதுதான் முக்கியம். அப்போதுதான் அவசர தேவைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். மருத்துவத் தேவை, வேலை இழப்பு போன்றவை எதிர்பாராதவிதமாக நிகழும்போது நிலைமையை எளிதாகச் சமாளித்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். இல்லையெனில், கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் விளைவாக அடுத்த ஆண்டின் சேமிப்பு விகிதம் குறையும்.

யார் பணக்காரர், யார் ஏழை?

வருமானம் இல்லாத சமயங் களில் உங்கள் சேமிப்பு மூலமாக எத்தனை மாதங்களுக்குக் குடும்பத் தேவைகளைச் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்பதைப் பொறுத்தே நீங்கள் பணக்காரரா, ஏழையா என்பதை முடிவு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5-10 மாத செலவு தொகை ஒருவரது சேமிப்பாக இருப்பது அவசியத்திலும் அவசியம்’’ என்றார்.

சேமிக்கும்போதும், செலவு செய்யும்போதும் ஒரு சிறிய திட்டமிடல் வைத்திருப்பது நல்லது. நான் 5 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன் என்று அதன் மதிப்பை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல், அதை வைத்து எத்தனை மாத செலவுகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கவனிப்பது அவசியம்.மேலும், உங்களுடைய எதிர்காலக் குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் சேமிப்பு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் சேமிப்புதான் சரியான சேமிப்பாக இருக்கும்.

இரா.ரூபாவதி
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum