வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

Go down

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு? Empty வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

Post by தருண் Mon Jun 29, 2015 12:15 pm

வேதாந்தா, தன் துணை நிறுவனமான கெய்ர்ன் இந்தியாவைத் தன்னோடு இணைக்க இருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தை மற்றும் பலசுற்று பங்கு பரிவர்த்தனைகளுக்குப் பின், டிசம்பர் 08, 2011 அன்று கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் 58.5% பங்குகளை 8.67 பில்லியன் டாலர் விலை கொடுத்து வேதாந்தா குழுமம் கைப்பற்றியது.

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு? P64a

வேதாந்தா நிறுவனம், கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை இணைத்துக் கொள்ளும் அறிவிப்பைக் கடந்த 14-ம் தேதி அன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களிலேயே இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுவும் இந்த இணைப்புக்கான உத்தரவையும் வழங்கின. இந்த இணைப்புக்குப் பின் கெய்ர்ன் இந்தியாவின் 40.12% பங்கை வைத்திருக்கும் மைனாரிட்டி பங்குதாரர்களுக்கு ஒரு ஷேருக்கு வேதாந்தா நிறுவனம் தன் நிறுவனத்தின் ஒரு ஈக்விட்டி ஷேர் மற்றும் ஒரு 7.5% ரெடீமபிள் ப்ரிஃபரன்ஸ் ஷேர் ஒன்றையும் வழங்க இருக்கிறது.

வேதாந்தா நிறுவனம் இதற்கு முன்புகூட பல நிறுவனங்களைக் கையகப்படுத்தித் தன்னுடன் இணைத்துக் கொண்டபோதும் வெளிப்படையாக நடந்து கொண்டதில்லை என்பதே பலரது ஆதங்கம். பல நிறுவனங் களைத் துணை நிறுவனங்களாகக் கொண்டுள்ள வேதாந்தா, எந்த நிறுவனத்தை எந்த நிறுவனத் துடன் இணைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதுர்யமாகக் குழப்புவதில் கில்லாடியாக இருக்கிறது.

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பினால் முதலீட்டாளர் களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என நிறுவனங்களின் உள் நோக்கங்களை ஆய்வு செய்யும் ‘இன்கவர்ன் ரிசர்ச் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் சுப்ரமணியனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வேதாந்தா இன்று!

‘‘வேதாந்தா நிறுவனத்துக்கு மட்டும் 37,636 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதோடு கெய்ர்ன் இந்தியாவை வேதாந்தா நிறுவனத்துடன் இணைக்கவும், இதற்குமுன் கெய்ர்ன் இந்தியா வின் பங்குகளை வாங்குவதற்கும், தன் 100 சதவிகித துணை நிறுவனமான ட்வின் ஸ்டார் மொரீசியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 26,850 கோடி ரூபாயைப் பயன்படுத்தியது. எனவே, ட்வின் ஸ்டார் நிறுவனத்துக்கு தற்போது 26,850 கோடி ரூபாய் கடன் உருவாகி இருக்கிறது.

வேதாந்தா குழுமத்தின் மற்றொரு 100 சதவிகித துணை நிறுவனமான தல்வான்டி சபோ பவர்ஸ் என்கிற நிறுவனத்துக்கு 6,541 கோடி ரூபாய் கடன் இருக் கிறது. தவிர, பால்கோவின் 51 % பங்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், பால்கோ நிறுவனமும் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனம் தான். இந்த பால்கோ நிறுவனத் துக்கும் சுமார் 5,456 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.

இப்படி தன் குழுமத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் கடன் இருக்கும் நிலையில்தான் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வேதாந்தா குழுமத் தோடு இணைக்க இருக்கிறது. ஒட்டுமொத்தமாக வேதாந்தா மற்றும் அதன் துணை நிறுவனங் களின் கடன் மட்டும் சுமாராக 74,000 கோடி ரூபாயாக இருக்கிறது.

கெய்ர்ன் இன்று!

கெய்ர்ன் இந்தியா நிறுவனம் எந்தக் கடனும் இல்லாமல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக் கிறது. கெய்ர்ன் இந்தியாவின் கடந்த நிதி ஆண்டின் நிகர லாபம் 1,320 கோடி ரூபாய். ஈக்விட்டி டிவிடெண்டாக 90% வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நன்றாகச் செயல் பட்டு வருகிறது. அதோடு 17,000 கோடி ரூபாய் ரொக்கக் கையிருப்பும் வைத்திருக் கிறது. இந்தக் கையிருப்பை கெய்ர்ன் நிறுவனத்தை வாங்கு வதற்காக வேதாந்தா வாங்கிய கடனை அடைப்பதற்கு பயன் படுத்தும். வேதாந்தாவின் கடன் கெய்ர்ன் இந்தியா பங்குதாரர்கள் தலையில் விடியும்.

கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இந்திய அரசுக்கு 20,000 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் இருக்கின்றன. இந்த வழக்கில் தீர்ப்புகள் கெய்ர்ன் நிறுவனத் துக்கு எதிராக வந்தால், வேதாந்தா நிறுவனத்தின் கேஷ் ஃப்ளோ பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு சிக்கல்களைச் சந்திக்கும்.

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு? P65a

இணைப்புக்கான நேரம்!

வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் இந்தியாவைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் பங்கு விலை இறக்கம் கண்டிருக்கும்போது இணைக் கிறது. கடந்த ஜூன் 16, 2014-ல் 366 ரூபாய்க்கு வர்த்தகமான இந்த பங்கு, இன்று 183 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதனால் கெய்ர்ன் பங்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என்ன சிக்கல்?

வேதாந்தா நிறுவனம் தன் சுத்திகரிப்பு ஆலைகளை விரிவாக்கம் செய்ய ஒடிஸாவில் போராடிக் கொண்டிருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற மனித உரிமை அமைப்பு ஒடிஸாவில் உள்ள லாஞ்சிகர் என்னும் இடத்தில் இருக்கும் வேதாந்தாவின் சுத்திகரிப்பு ஆலையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்த ஆலை 2007-ல்தான் செயல்படத் தொடங்கியது. ஒடிஸாவில் உள்ள வேதாந்தாவின் பாக்ஸைட் ஆலைகூட பலவிதமான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேதாந்தாவின் பிரச்னைகளாக கூறப்படும் இவை அனைத்தும் அப்படியே கெய்ர்ன் இந்தியா வின் பங்குதரார்களையும் பாதிக்கும்.

என்ன பாதிப்பு?

இப்படிப்பட்ட நிலையில்தான் வேதாந்தா நிறுவனம், கெய்ர்ன் இந்தியாவை இணைக்கப் போகிறது. கடன் இல்லாத கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்குதாரர்கள், அதிக கடன் கொண்ட வேதாந்தாவின் பங்கு தாரர்களாகப் போகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வேதாந்தாவின் கடன்களை கெய்ர்ன் இந்தியா நிறுவனப் பங்குதாரர்களும் சேர்ந்து சுமக்கவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

வேதாந்தா - கெய்ர்ன் இந்தியா இணைப்பு...முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு? P66a

இனி..?

வேதாந்தா நிறுவனம் தன் மொத்த பங்குகளில் 50.1 சதவிகித பங்குகளைத் தன்வசம் வைத்துக் கொள்ளப்போகிறது. (பார்க்க அட்டவணை). வேதாந்தா நிறுவனங்களைக் கையகப்படுத்த வாங்கிய கடன் 26,850 கோடி ரூபாயை கெய்ர்ன் இந்தியாவின் கையிருப்பின் மூலம் அடைத்து விடும். வேதாந்தா நிறுவனம் தன் மொத்த கடனான 74,000 கோடி ரூபாயை அதிக மைனாரிட்டி பங்குதாரர்களிடம் கொண்டு சேர்த்துவிடும். வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின் பிரச்னைகள், கெய்ர்ன் பங்கு தாரர்களின் தலையிலும் கட்டப் படும். ஆகமொத்தத்தில், வேதாந்தா மைனாரிட்டி பங்குதாரர்களுக்கு கொண்டாட்டம், கெய்ர்ன் இந்தியா மைனாரிட்டி பங்குதாரர் களுக்குத் திண்டாட்டம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார் ஸ்ரீராம்.

உஷாராய் இருங்கள் கெய்ர்ன் இந்தியா முதலீட்டாளர்களே!
--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கெய்ர்ன் இந்தியா - வேதாந்தா இணைப்பு... பங்குதாரர்களுக்கு லாபமா
» தொழில்நுட்பக் கோளாறு: மும்பை பங்குசந்தையில் மூன்று மணி நேரம் வர்த்தகம் பாதிப்பு
» ராஜஸ்தானில் 3 எண்ணெய் வயல்கள் கண்டுபிடிப்பு: கெய்ர்ன் இடைக்கால ஈவுத் தொகை அறிவிப்பு
» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
» ஹெவல்ஸ் இந்தியா பங்கு பிரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum