வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா?

Go down

அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா? Empty அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா?

Post by தருண் Mon Jun 22, 2015 4:02 pm

எம்ஆர்எஃப், போஸ்ச் (Bosch), டைடு வாட்டர் ஆயில் (Tide water oil) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிக விலையுடன் வர்த்தகமாகி வருகின்றன. உதாரணத்துக்கு, எம்ஆர்எஃப் பங்கு ஒன்றின் விலை சுமார் ரூ.34,000. (ஜூன் 4-ம் தேதி நிலவரப்படி) இந்த அளவு அதிக விலை கொண்ட பங்குகளில் முதலீடு செய்யலாமா, இதில் முதலீடு செய்வதற்குமுன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் சங்கரிடம் கேட்டோம். விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர்.

அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா? P20a

எப்போது முதலீடு செய்யலாம்?

“அதிக விலையுள்ள பங்கு களை வாங்கக்கூடாது என்றில் லாமல், எப்போது வாங்கினால் அதன்மூலம் நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

காரணம், நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்கக்கூடிய சம்பவங்கள், மோசமான மார்க்கெட் சூழல் போன்ற காரணங்களினால் வருமானத்தின் மீது ரிஸ்க் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எதுமாதிரியான சமயங்களில் இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றால், நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனத் தின் வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி சதவிகிதத்தைவிட அதிகமாக இருந்தால்தான் முதலீடு செய்யலாம்” என்றவர், முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எடுத்துச் சொன்னார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

“தற்போதைய நிலையில், தாங்கள் முதலீடு செய்ய நினைக் கும் அதிக விலையுள்ள பங்குகளின் விலை 10-20% இறக்கத்தில் இருக்கிறதா என்று கவனித்து, பின்னர் முதலீடு செய்யுங்கள்.

அதேபோல, என்ட்ரி பாயின்ட் என்ன என்பதைப் பார்த்து முதலீடு செய்வது அவசியம். எப்போதும்போல நீங்கள் முதலீடு செய்யும் நேரத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

அதிக விலையுள்ள பங்கு நிறுவனங்கள், அதிக விலையில் வர்த்தகமாகி வரும் பங்கின் லிக்விடிட்டியை அதிகப்படுத்த (ரீடெயில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக) பங்குகளைப் பிரிக்க நினைப் பார்கள். இதுபோன்ற சூழ்நிலை உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நேரத்தில் அந்தப் பங்கு களில் முதலீடு செய்யலாம்.

ஆனால், நிறுவனம் பங்கு பிரிப்புச் செய்யப்போவது குறித்த தகவலை வெளியிட்ட பின்னரும், பங்குகளைப் பிரித்தபின்பும் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதிக விலை பங்குகள்... வாங்கலாமா, கூடாதா? P21a

பங்கின் விலை சரிந்தால்..?

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை திடீரென்று எல்லாம் உயராது. ஓரிரு ஆண்டு வர்த்தகத்துக்குப் பிறகு, நிறுவனத் தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு கள், சந்தை சூழ்நிலையைப் பொறுத்துதான் உயர்ந்திருக்கும்.

இதன்பிறகு அந்தப் பங்கின் விலை சரிந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, போஸ்ச் நிறுவனத்தின் பங்கு விலை 31.12.13-ம் தேதி நிலவரப்படி, ஒரு பங்கு ரூ.9,475 என்கிற விலையில் வர்த்தகமானது. கடந்த ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, அதிகரித்து ரூ.19,465 என்கிற விலையில் வர்த்தகமானது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 52 வாரத்தில் அதிகபட்சமாக 27,999 ரூபாய்க்கு வர்த்தகமாகியிருக்கிறது. தற்போது அந்த அதிகபட்ச விலையைவிட 6,273 ரூபாய் குறைந்து 21,726.60 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

தற்போது இந்தப் பங்கின் விலை குறைந்து வர்த்தகமாவதால் இதுபோன்ற நிலையிலுள்ள அதிக விலை உள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம்.

பொதுவாக, பங்கின் விலையைப் பார்ப்பதைவிட அந்தப் பங்குகள் தொடர்ந்து எப்படி வருமானம் கொடுத்து வருகிறது என்பதைப் பார்ப்பது நல்லது.

உதாரணத்துக்கு, எம்ஆர்எஃப் பங்கு ஓராண்டு, இரண்டாண்டு மற்றும் ஐந்தாண்டுக் காலத்தில் முறையே 54.14%, 123.42%, 368.01% (ஜூன் 4-ம் தேதி நிலவரப்படி) வருமானம் தந்திருக்கிறது.

குறைவான விலையுள்ள பங்குகளைத் தரம் பார்த்து முதலீடு செய்வதில் அக்கறையும், மெனக்கெடலும் அதிகமாக இருக்கும். ஆனால், விலை அதிகமுள்ள பங்குகள் என்றால் முதலீடு செய்யலாமா, வருமானம் தருமா என்றெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவை இருக்காது.

காரணம், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் பட்சத்தில்தான் அதன் பங்கு விலை பெரும்பாலும் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

இதுபோன்ற பங்குகளில் குறைந்தபட்சம் ஒரு பங்கை மட்டுமே வாங்க முடியும். பணம் குறைவாக இருக்கிறது என்பதற் காக கால் பங்கு அல்லது அரை பங்கு என்றெல்லாம் வாங்க முடியாது.

உதாரணத்துக்கு, ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 17,244.35 ரூபாய் என்றால், என்னிடம் 10,000 ரூபாய்தான் இருக்கிறது.

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாமா என்றால், முடியாது என்பதே சரியான பதில்” என்றார் தெளிவாக.

ஆக, இனி விலை அதிகமுள்ள பங்குகளில் முதலீடு செய்பவர்கள் மேலே உள்ள விஷயங்களையும் கருத்தில் கொண்டு வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்!
-- விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum