வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தங்கத்தை பணமாக்கும் திட்டம்..!

Go down

தங்கத்தை பணமாக்கும் திட்டம்..! Empty தங்கத்தை பணமாக்கும் திட்டம்..!

Post by தருண் Mon May 25, 2015 11:04 am

இந்தியாவில் வீடுகளில் மட்டும் 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. மேலும் மேலும் மக்கள் தங்கம் வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் தங்கம் இறக்குமதி செய்வது அதிகரித்து அன்னிய செலவானியும் அதிகரிக்கிறது. இதை குறைப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் தங்கத்தை பணமாக்கும் திட்டம். மேலும் வீடுகளில் முடங்கி கிடக்கும் தங்கத்தினால் எந்த வருமானமும் கிடைப்பதில்லை.

இந்த திட்டத்தை 2015-16 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட்டாக வைக்கலாம். அந்த டெபாசிட்டுக்கு வட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்த வரைவை மத்திய நிதியமைச்சம் வங்கிகளுக்கு அனுப்பி வைத்தது. இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் எப்படி செயல்படுகிறது?, இதனால் யாருக்கு என்ன பயன் என்பது குறித்துப் பார்ப்போம்.

தங்கத்தை பணமாக்கும் திட்டம்..! 19-1432028161-goldjewellery

திட்டம் எப்படி செயல்படும்!

தேவைக்கு அதிகமாக இருக்கும் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். இதில் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்ய முடியும். வங்கிகள் ஆபரண தங்கமாக ஏற்காது. தங்கத்தை டெபாசிட் செய்ய விரும்பினால் அதை முதலில் வங்கிக்கு நேரில் சென்று தெரியப்படுத்த வேண்டும். அதன் பின் வங்கி தங்கத்தை பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் வழங்கும். தங்கத்தின் தரத்தை பரிசோதனை செய்து, தங்கத்தை உருக்கி அதுடைய எடை மற்றும் தரத்தை ஹால்மார்க் சென்டர் வாடிக்கையாளரிடம் கூறும்.

அதை வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டால் ஹால்மார்க் சென்டர் தங்கத்தின் எடை மற்றும் மதிப்புக்கு சான்றிதழ் வழங்கும். இந்த வேலை முடிவதற்கு 3-4 மணி நேரம் ஆகும். அதன் பின் அந்த சான்றிதழை வங்கியில் கொடுத்து, வங்கி கேட்கும் கே ஒய் சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஹால்மார்க் சென்டர்

இதை செய்வதற்கு அரசு 350 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 57 ஹால்மார்க் சென்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கார்நாடக ஆகிய மாநிலங்களில்தான், மக்கள் தங்கத்தை அதிகமாக வாங்குகிறார்கள். அதனால் இந்த மாநிலங்களில் அதிகமான ஹால்மார்க் சென்டர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சென்டரில் தங்கம் உருக்கும் செயல்முறையை வாடிக்கையாளர் நேரடியாக பார்க்க முடியும்.

தங்கம் சேமிப்பு கணக்கு துவக்கம்!

வாடிக்கையாளரின் பெயரில் தங்கத்தை வரவு வைப்பதற்காக தனியாக ஒரு கணக்கு துவங்கப்படும். இதில் தங்கத்தின் எடையை, மதிப்பாக மாற்றி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு 0.75-1 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படலாம். இந்த வட்டிவிகிதம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தங்கத்தை டெபாசிட் செய்த 30-60 நாட்களுக்கு பிறகு வட்டி கணக்கிடப்படும். டெபாசிட் செய்யப்படும் தங்கம் மற்றும் அதற்கான வட்டி இரண்டு தங்கத்தின் விலையை அடிப்படையாக வைத்து வழங்கப்படும். அதாவது 100 கிராம் தங்கம் முதலீடு செய்தால் 101 கிராம் தங்கமாக கிடைக்கும்.

திரும்ப எடுப்பது எப்படி?

பணம் அல்லது தங்கமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதாவது டெபாசிட்ட எடுப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் டெபாசிட் பணமாக வேண்டுமா அல்லது தங்கமாக வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.

டெபாசிட் காலம்!

குறைந்தபட்சம் ஒரு ஆண்டு டெபாசிட் வைக்கலாம். 2,3 என எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைக்கலாம். இடையில் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ள முடியும். அந்த காலத்துக்கு மட்டும் வட்டி கணக்கிடப்படும்.

வரிச் சலுகை!

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்க டெபாசிட்டுக்கும் அதன் மூலமாக கிடைக்கும் வட்டிக்கும் மூலதன ஆதாய வரி, செல்வ வரி, வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

யாருக்கு பயன்!

வங்கிகள் டெபாசிட்டாக வாங்கும் தங்கத்தை, சிஆர் ஆர்,எஸ் எல் ஆர் ஆகியவற்றுக்கு தங்க இருப்பை கணக்கு காண்பித்துக் கொள்ளலாம்.

பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தங்க டெபாசிட்டை மறுசுழற்சி முறையில் தங்க வியாபரிகளுக்கு விற்பனை செய்யப்படும். மேலும் தங்க காயின்கள் மற்றும் பிஸ்கட்டுகளாக பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

சிக்கல் என்ன?

தங்க டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தங்கத்துக்கு வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது தங்க டெபாசிட்டுக்கு 0.75-1 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும். அதே தங்கத்துக்கு ஈடான பணத்தை வங்கியில் பிக்ஸ்ட் டெபாசிட்டாக முதலீடு செய்யும் போது 8-9 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும்.

இந்தியா போன்ற நாட்டில் அதுவும் தமிழகத்தில் தங்கம் சென்டிமென்ட் சார்ந்த விஷயமாகும். இங்கு பெரும்பாலானவர்கள் தங்கத்தை சொத்தாக பார்ப்பதில்லை. கெளரவம் சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். மேலும் அவசர நேரத்தில் பணம் தேவைப்படும் போது கையிலிருந்து தங்கத்தை எளிதாக பணமாக்கி கொள்வர்கள். அதாவது அடமானம் அல்லது நகையை விற்று பணமாக்க முடியும்.

குறைந்தபட்சம் 30 கிராம் கூட டெபாசிட் வைக்கும் விதமான வடிவமைக்கப்பட்டுள்ளது. 30 கிராம் தங்கம் என்பது 4 சவரனுக்கு குறைவானது இந்த அளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கவே பொதுமக்கள் விரும்புவார்கள். இந்தியாவில் கருப்பு பணம் பெரும்பாலான இடங்களில் தங்கமாக உள்ளது. தங்கத்தை டெபாசிட்டாக கொண்டு வரும்போது கணக்கில் வந்துவிடும் என்பதால் இதில் முதலீடு செய்ய மக்கள் தயங்கவே செய்வார்கள்.
--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum