வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


வரி கணக்குத் தாக்கல்: புதிய சிக்கல்கள்... தவிக்கும் வரிதாரர்கள்!

Go down

வரி கணக்குத் தாக்கல்: புதிய சிக்கல்கள்... தவிக்கும் வரிதாரர்கள்! Empty வரி கணக்குத் தாக்கல்: புதிய சிக்கல்கள்... தவிக்கும் வரிதாரர்கள்!

Post by தருண் Tue May 12, 2015 11:36 am

வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் ஆரம்பித்துவிட்டது. மாத சம்பளக்காரர்கள் கடந்த நிதி ஆண்டுக்கான வரி கணக்கு விவரத்தை வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.

இதற்கிடையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாற்றங்களால் என்ன மாதிரியான பிரச்னைகள் எழும், இதனால் வரி கணக்குத் தாக்கல் எப்படி சிக்கல்கள் நிறைந்ததாக மாறியிருக்கிறது என்பதை விரிவாக விளக்குகிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.

மாற்றங்கள்:

‘‘சிபிடிடி (CBDT) என்கிற சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸ் அமைப்பு 15 ஏப்ரல் 2015-ல் வருமான வரித் தாக்கல் செய்வதில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதைச் சொல்கிறேன்.

1. வருமான வரி தாக்கல் செய்பவர், வரித் தாக்கல் செய்யும் ஆண்டில் அதாவது, 2015 - 2016 நிதி ஆண்டில் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், 2014 - 2015 நிதி ஆண்டில் நீங்கள் பயன்படுத்தும் பழைய, புதிய, செயல்படும், செயல்படாத, பயன்படுத்தி ரத்து செய்த வங்கிக் கணக்குகளின் விவரங்களை வரித் தாக்கலின்போது ஆதாரங் களுடன் குறிப்பிட வேண்டும்.

2. வெளிநாட்டுக்கு பயணம் செய்திருந்தால், வருமான வரி தாக்கல் செய்யும் போது, வெளி நாட்டு பயணங்கள் குறித்த விவரங் களையும் குறிப்பிட வேண்டும். அதாவது, 2014 - 2015 நிதி ஆண்டில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டிருந்தால் 2015 - 2016-ஆம் ஆண்டு வரி தாக்கல் செய்யும்போது பாஸ்போர்ட் எண், எந்தெந்த நாடுகளுக்கு சென்றுள்ளீர்கள், எத்தனை முறை சென்றுள்ளீர்கள், வெளிநாட்டில் எவ்வளவு தொகை செலவு செய்தீர்கள், செலவு செய்த தொகையில் நிறுவனம் கொடுத்த தொகை எவ்வளவு, நீங்கள் சொந்தமாக செய்த செலவுகள் மற்றும் அதன் விவரங்கள், ஏதாவது ஸ்பான்சர் மூலம் சென்றிருந்தால், அதன் விவரங்கள் போன்றவைகளை ஆதாரத்துடன் குறிப்பிட வேண்டும்.

3. ஒரு கோடி ரூபாய்க்குக் கீழ் டேர்னோவர் உள்ள நிறுவனங்கள், மாத சம்பள தாரர்கள், இதர வருமானம் சம்பாதிப்பவர்கள் போன்றவர் களுக்கு வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி 31 ஜூலை 2015 என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், வரித் தாக்கல் செய்ய படிவங்கள் மற்றும் அதனை எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்கிற விவரக் கையேடு (ஸ்கீமா) இதுவரை வெளியாகவில்லை. இதனால் வரித் தாக்கல் செய்ய நினைப்பவர்கள் அதை சரிவர செய்யமுடியாமல் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. 31 ஜூலை 2015-க்குப் பிறகு வரித் தாக்கல் செய்தால், அவற்றை மாற்ற இயலாது. அதாவது, தவறாக வரி கணக்குத் தாக்கல் செய்தால் அவற்றைத் திருத்த முடியாது. ஆனால், 31 ஜூலை 2015-க்கு முன் வரி தாக்கல் செய்தால், தவறாக வரி தாக்கல் செய்திருந் தாலும் மீண்டும் சரியாக வரி தாக்கல் செய்யலாம்.

4. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதோடு, தாக்கல் செய்த படிவத்தின் நகலை பெங்களூரூவில் உள்ள வரி கணக்கு பரிசீலனை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். வருமான வரி தாக்கல் செய்பவரின் ஆதார் அட்டை, பான் அட்டையோடு இணைக்கப்பட்டிருந்தால், அவர் பெங்களூரூக்கு வரி தாக்கல் செய்த படிவத்தை நகலெடுத்து அனுப்பத் தேவையில்லை.

முரண்பாடுகள்!


1. வரி தாக்கல் செய்யும்போது, வரிதாரரின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் காட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவுறுத்துவது சரிதான். ஆனால், வருமான வரி அலுவலகமே வழங்கிய பான் அட்டையின் பயன்பாடு என்ன என்பதை இந்த இடத்தில் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஒருவரின் பணப் பரிவர்த்தனைகளை மொத்தமாக கண்காணிக்கும் பான் அட்டையை வழங்கிவிட்டு, மீண்டும் வரி செலுத்துபவரிடமே வங்கி பற்றிய விவரங்களை கேட்பது ஏன் என்று புரியவில்லை.

2. வங்கிக் கணக்கைப் பற்றி கேட்கும் வருமான வரித் துறை, வங்கியில் முதலீடாக இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்டி கணக்குகள், கடன் கணக்குகளான ஓவர் டிராஃப்ட், கிரெடிட் கார்டு, டேர்ம் லோன் போன்றவைகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

3. உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால் வருமான வரித் துறையோ, பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைத்திருப்பவர்கள் மட்டும் தாங்கள் தாக்கல் செய்த நகலை பெங்களூரூ வருமான வரி அலுவலகத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்கிறது. வருமான வரித் துறையிடம் வரியை தாக்கல் செய்தபிறகு, அதே வருமான வரித் துறையின் வேறு ஒரு அலுவலகத்துக்கு வரிதாரர் ஏன் நகலை அனுப்ப வேண்டும்? வருமான வரித் துறையே தன் கிளை அலுவலகத்திலிருந்து கேட்டு வாங்கிக் கொள்ள முடியாதா என்கிற கேள்வி எழுவது இயற்கைதானே!

4. வருமான வரித் துறை, பாஸ்போர்ட் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து வரிதாரர் எந்த நாட்டுக்கெல்லாம் பயணித்தி ருக்கிறார் என்கிற விவரங்களை வாங்க முடியாதா? வெளிநாடுகளில் வேலை பார்த்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில் நம் இந்தியா 70.39 பில்லியன் டாலர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, என்ஆர்ஐகள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மட்டும் 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 70.39 பில்லியன் டாலர்கள். வெளிநாட்டுக்கு போய் வேலை செய்பவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள் இல்லை. சாதாரண கூலி வேலைகூட பார்க்கிறார்கள். இவர்களால் எப்படி இதையெல்லாம் கணக்குக் காட்ட முடியும்?

5. என்ஆர்ஐ-ஆக இருப்பவர்கள் இந்தியாவுக்கு நிரந்தரமாக குடியேறும்போது, அவர்களிடமும் இந்தந்த விவரங்கள் கேட்கப்படும் என்பதை எல்லாம் விளக்காமலேயே அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறது வருமான வரித் துறை.

6. சரல் என்ற ஒரு எளிமையான வரி தாக்கல் படிவம் இருந்ததை மாற்றி, தற்போது ஐடிஆர் 1 முதல் ஐடிஆர் 7 வரை பல படிவங்கள் இருக்கின்றன. இதில் எந்த ஐடிஆரை யார் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே புரியாத அளவுக்கு கடினமான தாகவும், குழப்பத்துக்கு வழிவகுப்பதாகவும் இருக்கிறது.

என்ன பிரச்னை?

வருமான வரி தாக்கல் செய்யும்போது வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களில் வங்கியின் ஐஎஃஎஸ்சி (IFSC) எண், ஜாயின்ட் அக்கவுன்ட் ஹோல்டர் என்றால் உங்களுடைய விவரத்தோடு ஜாயின்ட் அக்கவுன்ட் ஹோல்டர்களின் விவரங்க ளையும் கொடுக்க வேண்டும். அதாவது, வங்கிக் கணக்கை பயன்படுத்துவோரின் விவரம், வங்கியின் கிளை, கணக்கு எண், 31 மார்ச் 2015 அன்றைய நிலவரப்படி கணக்கில் இருக்கும் மொத்தத் தொகை என்று அனைத்தையும் குறிப்பிட வேண்டும். இதில் காலாவதியான கணக்குகளையும் குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்றாகவே தோன்றுகிறது.

இன்று வேலைக்கு போகத் தொடங்கிய இளைஞர்கள்கூட குறைந்தபட்சம் 2 முதல் 4 வங்கிக் கணக்குகளை வைத்து பயன்படுத்துகிறார்கள். இப்படி இருக்கும்போது ஆண்டுக்கு 5 - 10 லட்சம் வருமானம் பெறக்கூடிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தாராளமாக தங்கள் குடும்பத்துக்கும் சேர்த்து குறைந்த பட்சம் 6 வங்கிக் கணக்குகளை யாவது பயன்படுத்துவார்கள். அதோடு ஒரு குடும்பத்தில் ஒருமுறையாவது வங்கிக் கணக்கை ரத்து செய்திருப்பார் கள். அப்படி ரத்துசெய்த வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் இதில் குறிப்பிட வேண்டும் என்றால் வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் கஷ்டப்பட மாட்டார்களா?

கறுப்புப் பணத்தை மீட்கத்தான் இந்த நடவடிக்கைகள் என்று அரசு சப்பைக்கட்டு கட்டினாலும், எந்த கறுப்புப் பண முதலைகளும் தங்கள் கறுப்புப் பணத்தை இந்திய வங்கிகளில் வைத்திருப்பதில்லை. கறுப்புப் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் பணமாக வைத்திருக் கிறார்கள் என்பது இந்தியாவில் குழந்தைக்குகூடத் தெரியும்.

வருமான வரி வரம்பில் வரும் நபர்கள், தங்கள் பணத்தை சரியாக நிர்வகிக்கவில்லை அல்லது திட்டமிட்டு முதலீடு களை மேற்கொள்ளவில்லை என்றால் குறைந்தபட்சம் அரசுக்கு 25 - 60% வரை வரியாக செலுத்துகிறார் என்று அர்த்தம். எப்படிக் கணக்கிட்டாலும் வருமான வரி வரம்பில் வருபவர் கள், வாங்கும் பொருட்களுக்கு இறக்குமதி வரி, சுங்க வரி, கலால் வரி, நகராட்சி வரி, குடிநீர் வரி, சாலைவரி என்கிற பெயரில் சரசரியாக 3 - 12% வரியையும், சேவைகளுக்கு 12.36 சதவிகிதமும், வாங்கும் பொருட்களுக்கு 14 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

இன்று கடைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் அனைத்தும் சேவை வரி அல்லது வாட்டின் கீழ் வந்துவிடுகிறது. எனவே, மொத்தமாக வரி மட்டுமே 25- 60% வரை வரி வசூலிக்கிறார்கள்.

ஒவ்வொரு வரி கணக்கு படிவத்திலும் 20 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இந்தப் படிவத்தை பூர்த்தி செய்வதில் குழப்பம் அதிகம் இருக்கிறது. இதை நிரப்புவதற்கு ஒருவரது வேலைப்பளு கூடும். அதிக காகித வேலைகளுக்கு வேண்டி நேர விரயம் மற்றும் பண விரயமாவது என்று பல பிரச்னை கள் உருவாகின்றன. ஒவ்வொரு வருடமும் அரசு, வரி கணக்கு தாக்கலை எளிமையாக்குகிறேன் என்று ஏதாவது ஒரு புதிய கணக்கீடுகளையோ, புதிய படிவங்களையோ, விதிகளையோ மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் வரிதாரர்களின் வேலை குறைந்தபாடில்லை, மாறாக அதிகரித்துக்கொண்டே போகிறது.

வரி கணக்குத் தாக்கல்: புதிய சிக்கல்கள்... தவிக்கும் வரிதாரர்கள்! P33a

ஆடிட்டர் மூலம் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவத்தில் தரப்பட்டுள்ள அனைத்துக் கட்டங்களையும் நிரப்பித்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதனால் வரிதாரர்களும் ஆடிட்டர்களை அணுகாமல் அவர்களே வரிப் படிவத்தில் தங்கள் ஆண்டு வருமானத்தை மட்டும் எழுதி விட்டு, கையெழுத்துப்போட்டு படிவத்தைச் சமர்பித்து பிரச்னையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது மட்டுமே இதுவரை வருமான வரித் துறை கொண்டு வரப்பட்ட மாற்றங்களில் நல்ல மாற்றம் என்று சொல்லலாம். அதையும் கூட சரிவர செய்யாமல் வரி தாக்கல் செய்த படிவத்தை நகல் எடுத்து பெங்களூரூக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறது வரித் துறை.

கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், ஆசிரமங்களுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதைவிட இலவச கல்வி, மருத்துவ சேவை மற்றும் சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளித்தால் அரசுக்கு தேவையான வரி எளிதாகக் கிடைத்துவிடும். அதோடு உண்மையாக சமூக சேவை செய்பவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் இருக்கும்” என்றார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

அரசாங்கங்கள் மாறினாலும், வரிதாரர்களை கையாளும் விதம் மட்டும் மாறவில்லை. சரியாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்காமல், மீண்டும் மீண்டும் தொல்லை கொடுப்பது சரிதானா
---விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்
» வருமான வரி கணக்குத் தாக்கல்... வழிகாட்டும் ஆலோசனைகள்!
» வருமான வரி கணக்குத் தாக்கல்: தவறுகளைத் திருத்த என்ன வழி?
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
» வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum