வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!

Go down

பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்! Empty பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!

Post by தருண் Tue May 12, 2015 11:16 am

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீடுகளில் லாபம் பார்ப்பதற்கு கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் குறித்து நிதி ஆலோசகர் வி.நாகப்பனிடன் கேட்டோம். அவர் குறிப்பிட்ட அந்த விஷயங்கள் இதோ..!

1. இளமையில் முதலீட்டை தொடங்குங்கள்!

இளமையில் கல் என்பதுபோல் இளமையில் பணத்தைச் சேர் என்பது முக்கிய முதலீட்டு மொழி. வேலைக்குச் சேர்ந்த உடன் முதலீட்டை ஆரம்பிக்கும்பட்சத்தில் முதலீட்டுத் தொகை குறைவாக இருந்தால் போதும். இதனை ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் புரியும். கண்ணன் என்பவர் வேலைக்குச் சேர்ந்ததும் தன் 25-வது வயதில் அவரது ஓய்வுக்காலத்துக்கென மாதம் 2,500 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கினார். அவரது நண்பர் பாலனோ தனது 35-வது வயதில் மாதம் 5,000 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கினார். 65 வயதில் இந்தப் பணத்தை எடுக்கும்போது யார் கணக்கில் அதிக பணம் இருக்கும்?

இருவரும் செய்த முதலீட்டுக்கு 8% வருமானம் கிடைத்தால்கூட, கண்ணன் கணக்கில் ரூ.77.72 லட்சம் இருக்கும். இதுவே பாலன் அதிகத் தொகையை முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு ரூ.67.97 லட்சம்தான் கிடைக்கும். காரணம், முதலீட்டை சின்ன வயதிலே ஆரம்பித்ததுதான்.

2. பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் முக்கியம்!

உங்கள் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்க விகிதத்தைத் தாண்டியதாக இருப்பது முக்கியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு, இந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் அடுத்த ஆண்டு 110 ரூபாய்க்கு விற்றால், உங்களின் முதலீட்டு மீதான வருமானம் 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால்தான் நல்லது. வங்கி சேமிப்புக் கணக்கில் 4%, எஃப்டியில் 9%தான் வருமானம் கிடைக்கும் என்பதால் அவற்றை நாம் முதலீட்டு பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடியாது. இதனைவிட அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் ரிஸ்க் உள்ள முதலீடுகளான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1979-ல் 100 புள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டது. அது சுமார் 35 ஆண்டுகளில் 27000 புள்ளிகளுக்கு உயர்ந்திருக்கிறது.

3. சிறுதொகைகூடப் போதும்!

நம்மில் பலர் பங்கு மற்றும் ஃபண்டில் முதலீடு செய்யப் பெரும்தொகை தேவை என்று நினைக்கிறார்கள். மாதம் 500 ரூபாய்கூட இவற்றில் முதலீடு செய்யலாம். ஒருவர் ஆண்டுக்கு 1,000 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு 18% வருமானம் கிடைத்தால் அவர் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் மூலம் அதிக லாபத்தைப் பார்க்க முடியும். அதற்கு எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) என்கிற முதலீட்டு முறை மிகவும் கைகொடுக்கும்.

4. ரிஸ்க் எடுத்தால் ரிவார்ட்!

வயது, அறிவு மற்றும் அனுபவத்துக்குத் தக்க ரிஸ்க் எடுப்பதில் தவறில்லை. முதலீட்டைப் பொறுத்தவரையில், எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ரிவார்ட், அதாவது விருது - வருமானம் கிடைக்கும். பொதுவாக, 100-லிருந்து ஒருவரின் வயதை கழித்துவரும் சதவிகிதத் தொகையை ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்து மிக முக்கியமாக, எந்த முதலீட்டில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ரிஸ்க் எடுப்பது அவசியம். இதனை ‘கால்குலேட்டட் ரிஸ்க்’ என்பார்கள். மேலும், ரிஸ்க்கை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பது அவசியம்.

5. உபரி நிதி மட்டுமே பங்கு, ஃபண்டுகளில் முதலீடு!

பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் வேண்டும் என்கிறபோது, ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அதேநேரத்தில், இவற்றில் ரிஸ்க் அதிகம் என்பதால், செலவுகள் போக மீதி உள்ள உபரித் தொகையை மட்டுமே இவற்றில் முதலீடு செய்யவேண்டும். மிக முக்கியமாக, கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது. மேலும், குறுகிய காலத்தில் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு என வைத்திருக்கும் தொகையைப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது. தேவைக்கான முதலீட்டை அவசரமாக எடுக்கும் காலத்தில் சந்தை இறக்கத்தில் இருந்தால் நஷ்டப்பட வாய்ப்பு இருக்கிறது.

6. நீண்ட கால முதலீடு!

முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பார்க்க, முதலீட்டை நீண்ட காலத்துக்குத் தொடர்வது நல்லது. குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நிச்சயம் பணவீக்க விகிதத்தைத் தாண்டி ஆண்டுக்கு சுமார் 15 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கிடைக்கும். இந்த 8-10 ஆண்டு காலத்தில் பங்குச் சந்தை குறைந்தபட்சம் 2 காளைச் சந்தை, 2 கரடி சந்தையைச் சந்தித்து இருக்கும். அதாவது, சராசரியாக அதிக வருமானம் கிடைக்கும் நிலைக்கு முதலீடு வளர்ந்திருக்கும்.

7. முதலீட்டை பிரித்துச் செய்க!

எல்லா முட்டை களையும் ஒரே கூடையில் வைத்தால் எப்படி அதிக ரிஸ்கோ, அதேபோல் அனைத்து முதலீடு களையும் ஒரே பிரிவில் மேற்கொள்வது சரியாகாது. உதாரணத்துக்கு, ஒருவர் தன் அனைத்து முதலீடுகளையும் பங்குச் சந்தையில் மேற்கொண்டிருக்கிறார் என்கிறபோது சந்தை சரிந்தால் அவரது முதலீட்டின் மதிப்பும் சரியும். இதனைத் தவிர்க்க இண்டெக்ஸ் பங்குகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள், டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும். 5-10 பங்குகள் மற்றும் 3-5 ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொண்டால்தான் முதலீட்டின் வளர்ச்சியை சராசரியாகக் கவனித்து அதிக லாபம் ஈட்ட முடியும். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் தேவைக்கேற்ப முதலீட்டை மேற்கொண்டால் போதும். 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்வது மிகவும் நல்லது. அப்படிச் செய்யும்போது ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும்.

8. வரிச் சலுகை மூலம் லாபம்!

நீங்கள் வருமான வரி கட்டுபவர் என்றால் உங்களின் முதலீடுகள் மூலம் வருமான வரியைச் சேமிக்க முடிந்தால் மிக நல்லது. மேலும், வருமானப் பெருக்கம், முதிர்வுத் தொகை போன்றவையும் வருமான வரி கட்டுவதிலிருந்து விலக்குப் பெறுவதாக இருந்தால் மிக நல்லது. இல்லை என்றால் வருமானத்துக்கு வரி கட்டுவது மூலம் அதிகத் தொகையை இழக்க வேண்டி இருக்கும். அந்த வகையில், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்), பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிபிஎஃப்) ஆகியவற்றிலும், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் இஎல்எஸ்எஸ் என்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் முதலீட்டை மேற்கொண்டு வரலாம். பிபிஎஃப் மற்றும் இஎல்எஸ்எஸ் -ல் மாதம் 500 ரூபாய் இருந்தால் போதும் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம்.

9. குடும்ப நிதி ஆலோசகர்!

குடும்ப மருத்துவர் போல், குடும்ப நிதி ஆலோசகரை வைத்துக் கொள்வது நல்லது. அந்த நிதி ஆலோசகர் உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுக்குத் தெரிந்தவராக இருப்பது நல்லது.

மேலும், உங்களின் தேவை அறிந்து முதலீடுகளைப் பரிந்துரை செய்பவராக அவர் இருப்பது நல்லது. உங்களின் முதலீடுகள் நீண்ட காலத்தில் சராசரியாக நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆண்டுத்தோறும் அதிக வருமானம் தர வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். காரணம், பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது.

10. லாபத்தை வெளியே எடுப்பது முக்கியம்!

எப்படி நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துவர வேண்டுமோ, அதேபோல் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு லாபத்தை வெளியே எடுப்பதும் முக்கியம்.

அந்த லாபத்தை அதிக ரிஸ்க் இல்லாத ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது கடன் சார்ந்த ஃபண்டுகள் என பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்!

--விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum