வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்!

Go down

பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்! Empty பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்!

Post by தருண் Wed Feb 25, 2015 2:39 pm

பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்த்து, லாபம் பார்ப்பதற்கான 10 எளிய வழிகளைச் சொல்கிறார் 'திங் ரிச் இனிஷியேட்டிவ் இந்தியா’ அமைப்பின் நிறுவனரான எஸ்.ஆனந்த். இவர் 'தி இன்வெஸ்டர்: ஆர்டினரி ஸ்டாக்ஸ், எக்ஸ்ட்ராடினரி பிராஃபிட்’ என்கிற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

1. குறைந்தபட்சம் 10 பங்குகள்!

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் குறைந்தபட்சம் 10 நிறுவனப் பங்குகளை யாவது வைத்திருக்க வேண்டும். பங்குச் சந்தை என்பது மாறுதல்களுக்கு உட்பட்டது என்பதால், பாதுகாப்புக்கான காரணிகளைக் கவனிப்பது அவசியம். அதேபோல், நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் ஐந்து அல்லது ஆறு துறைகளில் இருப்பது நல்லது. ஒருவேளை, ஒருசில துறை சரியான வருமானத்தைத் தராமல் போனாலும் மற்ற துறைகள் அதனைச் சமாளிக்க உதவும்.

நீங்கள் அன்றாடம் காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை பயன்படுத்தும் பொருட்களின் பிராண்டுகளைக் கவனியுங்கள்; அவற்றின் பங்கு விலை எப்படி உயர்ந்துள்ளது என்று பார்த்து அந்தப் பங்குகளைத் தேர்ந்தெடுங்கள்.

பங்குச் சந்தையில் நஷ்டம் தவிர்க்க பத்து வழிகள்! P20a

2. வருடத்துக்கு இருமுறை மதிப்பீடு செய்யுங்கள்!

நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை வருடத்துக்கு இரண்டு முறை, ஆறு மாத இடைவெளியில் மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கின் முழு மதிப்பீடு உங்களுக்குத் தெரிவதற்கு இந்த இரண்டு முறை மதிப்பீடு அவசியம். அப்போதுதான் அந்தப் பங்கை வைத்திருக்கலாமா, இல்லையா என்கிற முடிவை நீங்கள் எடுக்க முடியும். வருடத்துக்கு இரண்டு முறை என்பதை ஒவ்வொரு பங்குக்கும் அதன் துறைக்கு ஏற்றவாறு மதிப்பீடு செய்வது சிறந்தது.

3. நிச்சயம் வருவாய் தரும் முதலீட்டில் 50%!

ஒருவர் செய்யும் முதலீட்டில் 50 சதவிகிதப் பணத்தை கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. வருமானம் என்பது உங்கள் முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும். இந்த வருமானம் என்பது உங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கானதல்ல. உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கானது என்பதை அறிந்து, உங்கள் முதலீட்டை செய்ய வேண்டும்.

நீண்ட கால முதலீட்டில் பங்குகள் அதிக வருமானம் தரக்கூடியதாக இருக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களது எதிர்காலத் தேவைக்கு உதவியாக இருக்கும். அதனால் உங்கள் போர்ட்ஃபோலியோ வில் 50 சதவிகித பணத்தை நிச்சயம் லாபம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்வது சிறந்தது.

4. முழுத் தகவல்கள் இல்லாத நிறுவனத்தில் முதலீடு வேண்டாம்!

ஒரு நிறுவனத்தைப் பற்றிய முழுத் தகவல்கள் உங்களிடம் இல்லையெனில், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சில நிறுவனங்கள் அதன் தகவல்களை முழுமையாக அளிக்கா மலும், தவறான தகவல்களை வெளியிட்டும் தனது நிறுவனத்தை முதலீட்டுக்கு ஏற்ற நிறுவனமாகக் காட்டும். அது போன்ற நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதுபோன்ற நிறுவனங்களில் புரமோட்டர்கள் வெளியிடும் தகவல்கள் எழுத்தளவில் இருக்குமே தவிர, அதே அளவுக்கு வர்த்தகம் இருக்காது. அப்படி இருக்கும் போது அந்த நிறுவனத்தால் குறிப்பிட்ட வருமானத்தைத் தரமுடியாமல் போகும் சூழல் உருவாகும். அதனால், இதுபோன்ற நிறுவனங்களைத் தவிர்த்துவிடலாம்.

5. இன்சைடர் இன்ஃபர்மேஷன்களைத் தவிருங்கள்!

நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்தோ அல்லது வெளியாட்களிடம் இருந்தோ ஏதாவது ஒரு பங்கை வாங்கும்படி வரும் ஆலோசனைகளை அப்படியே பின்பற்றாதீர்கள். இந்தத் தகவல்களை அப்படியே நம்பி அதில் முதலீடு செய்வதால் நமக்கு நஷ்டம் வர வாய்ப்புண்டு. ஒரு நிறுவனத்தின் பங்கு விலையை வேண்டுமென்றே உயர்த்தி விற்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இதுமாதிரியான ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அந்தப் பங்கின் நிதிநிலையை நன்கு ஆராய்ந்து, அவர்கள் சொல்லும் பரிந்துரையில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறது என ஆராய்ந்தபின் அதில் முதலீடு செய்ய வேண்டும்.

6. இயந்திரத்தனமான ஃபார்முலாக்களை நம்ப வேண்டாம்!

பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பி/இ போன்ற பல்வேறு ஃபார்முலாக்கள் உள்ளன. இந்த ஃபார்முலாக்களை அப்படியே நம்பி அந்தப் பங்கை வாங்க வேண்டாம். இயந்திரத்தனமான இந்த சில ஃபார்முலாக்களின் அடிப்படையில் சில நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாகச் செயல்படுவதுபோலத் தோன்றும். ஆனால், அப்போது நிலவும் சூழல், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இந்த ஃபார்முலாக் களுக்குள் அடங்காது. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு என்பது புறக்காரணி களையும், அது உள்ள துறையையும் சார்ந்துள்ளதால், பிற காரணிகளையும் கருத்தில்கொண்டு முதலீடு செய்வது சிறந்தது.

7. சந்தை உச்சத்தில் வெளியேறுங்கள்!

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் போது அதிலிருந்து 50 சதவிகித பங்கு களை விற்றுவிட்டு வெளியேறிவிடலாம். இப்படி கிடைக்கும் பணத்தைக் குறுகிய காலத்துக்கு கடன் சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பொதுவாக, பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது கடன் சந்தை தரும் வருமானம் குறைவாக இருக்கும். உச்சத்தில் இருக்கும் பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்து கடன் சந்தையில் போட்டுவைப்பதன் மூலம் லாபத்தைக் குறையாதபடி நம்மால் பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், உங்களுக்கு உடனடியாக பணம் தேவையில்லை என்பதால், நீண்ட காலத்துக்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து வைத்திருக்க முடியும் எனில், நல்ல நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த பங்கை நீங்கள் விற்காமல் இருப்பதே நல்லது.

8 சந்தை வீழ்ச்சியில் மட்டுமே கடன் வாங்குங்கள்!

சில முதலீட்டாளர்கள் சந்தை இறங்கிவிட்டால், தாங்கள் ஏற்கெனவே வாங்கிய பங்குகளை வைத்து கடன் வாங்கிவிடு கிறார்கள். இப்படி வாங்கும் கடனானாது பங்கு விலை இன்னும் இறங்கி நஷ்டத்தையே ஏற்படுத்தும். பொதுவாக, சந்தை பெரிய அளவில் குறையும்போது புதிய முதலீட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.

சந்தை உச்சத்தில் இருக்கும்போது பங்குகளை விற்று வைத்திருந்தால், இந்த முதலீட்டை மேற்கொள்ளலாம். அல்லது பங்குகளை அடகு வைத்து கடன் வாங்கி புதிய முதலீட்டை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஒரு தொழில் நலிவடைந்து, சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பும்போது வட்டி விகிதங்கள் குறைக்கப்படும். இதுபோன்ற நேரத்தில் மட்டுமே கடன் வாங்குவது நமக்கு லாபகரமாக இருக்கும். இல்லையெனில், முதலுக்கே மோசம் என்ற நிலையை உருவாக்கிவிடும்.

9. நீண்டகால முதலீட்டில் நிதானம் தேவை!

நீண்ட கால முதலீட்டாளர் ஒருவர், முதலீடு செய்த நிறுவனத்தின் மதிப்பீடு முழுமையடைந்து நல்ல லாபத்தைத் தரும் வரை நிதானமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே நிர்ணயித்துள்ள இலக்கை ஓரளவுக்கு நெருங்கிவிட்டால் போதும் என்று அந்தப் பங்கை விற்றுவிட்டு வெளியேறிவிடக் கூடாது.

ஏனெனில், சில நிறுவனங்களும், துறைகளும் சுழற்சித்தன்மை உடைய தாக இருக்கும். அவை, சில சமயம் நல்ல வருமானத்தை அளிக்கும். சில சமயத்தில் குறைவான லாபத்தையே அளிக்கும். இதுபோன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் இருக்கும்போது நாம் வெளியேறிவிட்டால், அது நல்ல லாபத்தைத் தரும் வேளையில் உங்களால் மீண்டும் வாங்க முடியாது. ஒரு நிறுவனப் பங்கு இதுவரை நல்ல லாபத்தைத் தராவிட்டாலும் நீண்டகால முதலீட்டில் நிதானமான போக்கை கையாண்டால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

10. அடுத்த இறக்கத்துக்காகக் காத்திருங்கள்!

ஒருசில முதலீட்டாளர்கள் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது பங்குகளை வாங்கி மீண்டும் சந்தை ஏறும்போது நல்ல லாபத்தைப் பார்த்திருப்பார்கள். நல்ல லாபத்தில் பங்குகளை விற்றவர்கள் மீண்டும் சந்தை எப்போது இறங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவ்வாறு சந்தை இறங்கும்போது விலை இறங்கியுள்ள பங்குகளை வாங்கி மீண்டும் லாபம் பார்ப்பார்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்களில் லாபம் தரும் பங்குகளை அடையாளம் காணமுடியும். இறக்கத்தில் வாங்கும் பங்குகள் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.

-முக நூல் ....ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum