வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


நீண்ட காலத்தில் நிச்சய லாபம் !

Go down

நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! Empty நீண்ட காலத்தில் நிச்சய லாபம் !

Post by தருண் Wed Nov 19, 2014 11:20 am

ஒவ்வொரு மனிதனின் அடிமனதிலும் மிகப் பெரிய செல்வந்தராக வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால், வாழ்க்கையில் கஷ்டமில்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். இதற்கு நிறைய பணம் வைத்திருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது.

இந்த ஆசை நிறைவேறி, ஒருவர் செல்வந்தராக வேண்டுமானால், அதற்கு அவர் முதலில் சேமிக்கத் தொடங்க வேண்டும். இப்படி சேமிக்கும் தொகையைச் சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
ஒருவர் கோடீஸ்வராக அவரது முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புதுச்சேரியைச் சேர்ந்த நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிச் சொன்னார்.

“பொதுவாக, முதலீடு செய்யும்போது அவரவர் அறிந்த முதலீட்டுத் திட்டங் களில் முதலீடு செய்து, செல்வந்தராக முயற்சிப்பார்கள். அவ்வாறு முயற்சிப் பவர்களில் பெரும்பாலானோர் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், சீட்டு, அஞ்சலகச் சேமிப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்து, தங்களது குறிக்கோளை அடைய முயற்சிப்பார்கள்.

இவ்வாறு செய்யும் முதலீடு, விலைவாசி ஏற்றத்தைத் தாண்டி வளரும் எனில், அவர் செல்வந்தராவது நிச்சயம். ஆனால், ஒருவரது முதலீட்டின் வளர்ச்சி யானது, விலைவாசி ஏற்றத்தைவிட குறைவாக வளரும் எனில், அவர் செல்வத்தை இழக்கவே செய்வார்.

சாதாரண போன், செல்போன், இன்று டச்போன் என காலத்துக்கேற்ப நாம் மாறுகிற மாதிரி, நம் முதலீட்டுத் திட்டத்தையும் காலத்துக்கேற்ப மாற்றி அமைப்பதன் மூலமே செல்வந்தராகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! Nav28a

இன்றைய சூழ்நிலையில் விலைவாசியைத் தாண்டி வளரக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் ஒரு சிலவே உள்ளன. ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள் முதலீட்டில் முதலீடு செய்தால் ஒருவர் நிச்சயம் கோடீஸ்வரராகலாம்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனில், மொத்தமாகப் பணம் கையில் இருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைவிட நாமே நேரடியாகப் பங்கில் முதலீடு செய்யும் போது அதிக லாபம் பெற முடியும்’’ என்றவர், இப்படி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கமாகச் சொன்னார்.

‘‘பங்குச் சந்தையில் சாதாரண மனிதனும் முதலீடு செய்து மிகப் பெரிய செல்வந்தராவதற்கு ஒரு சிறந்த வழி, எஸ்ஐபி (சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான்) மூலம் முதலீடு செய்வதுதான். அதாவது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வது.

நம்மவர்கள் மாருதி காரை ஓட்டி மகிழ்வார்கள், ஆனால், மாருதி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யமாட்டார்கள். இதேபோல், டைட்டான் வாட்ச் கட்டுவார்கள். ஆனால், அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யமாட்டார்கள். அப்படி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.

நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! Nav28c

பங்குச் சந்தை என்பது கடலில் மீன் பிடிப்பதுபோல. நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். பங்கு முதலீட்டை ஆரம்பிக்கும்முன் ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, அந்த நிறுவனம் எத்தனை வருடங்களாக இயங்கி வருகிறது, லாபத்தை டிவிடெண்ட்டாக  முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் விதம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்தபட்சம் 15 சதவிகிதத் துக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை முதலீடு எப்படி நீண்ட காலத்தில் முதலீட்டாளர்களுக்குப் பெரும் சொத்தை சேர்த்துத் தருகிறது என்பதை உதாரணம் மூலம் பார்ப்போம் ஒருவர் எல் அண்ட் டி நிறுவனப் பங்குகளில் 2000-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2014 செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.  மாதத்தின் முதல் வாரத்தில் ஏதாவது ஒருநாளில் முதலீடு செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அவர் இந்த 177 மாதங்களில் மொத்தம் ரூ.8,85,000 (177 x 5,000) முதலீடு செய்திருப்பார். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பது முக்கியமான விஷயம்.

2014 செப்டம்பரில் இவரது கணக்கில் மொத்தம் 45,140 பங்குகள் இருக்கும். 2014, செப்டம்பர் 19-ம் தேதி பங்கின் விலை ரூ.1,581. அதன்படி, பங்கின் மதிப்பு சுமார் ரூ.7.14 கோடி. இதே காலகட்டத்தில் டிவிடெண்ட் வருமானம் ரூ.35.75 லட்சம் ரூபாயாகும்.

பங்கின் மதிப்பு மற்றும் டிவிடெண்ட்டைச் சேர்த்தால், மொத்த வருமானம் ரூ.7.50 கோடி. இதன்படி பார்த்தால், ஆண்டு சராசரி வருமானம் 43.47%. இந்த வருமானம் வேறு எந்த முதலீட்டில் கிடைக்கும்? மேலும், டிவிடெண்ட் மற்றும் பங்கு வருமானம் முற்றிலும் வரி இல்லாத லாபம் என்பது கூடுதல் லாபம். டிவிடெண்ட் தொகையை மறுபடியும் பங்கிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டிலோ முதலீடு செய்திருந்தால், அதுவும் அதிக வருமானத்தைத் தந்திருக்கும்.

இதேபோல் எஸ்பிஐ, அசோக் லேலாண்ட், ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், எல்ஐசி ஹெச்எஃப்எல், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பிஹெச்இஎல் பங்குகளில் கடந்த 177 மாதங்களாக முதலீடு செய்திருந்தால் என்ன லாபம் கிடைத்திருக்கும் என்பதை எதிர்ப்பக்கத்தில் உள்ள அட்டவணையில் தந்திருக்கிறோம்.

பிஹெச்இஎல் பங்கில் செய்யப்பட்ட ரூ.8,85,000 முதலீடு என்பது ஆண்டுக் கூட்டு வளர்ச்சியில் 32% வருமானம் தந்து, ரூ.1.96 கோடியாக அதிகரித்துள்ளது. இதைவிட 11.5% அதிக வருமானம் தந்துள்ள எல் அண்ட் டி பங்கு முதலீட்டு ரூ.7.14 கோடியாக அதிகரித்துள்ளது.  ‘பவர் ஆஃப் காம்பவுன்டிங்’ செய்யும்  மகத்தான மாற்றம் இது. இந்த அளவுக்கு அதிக லாபம் என்பது நீண்ட கால முதலீட்டில் மட்டுமே சாத்தியம்.

நம் வாழ்க்கையில் தேவைப்படும் அதிகத் தொகை இலக்குகளான குழந்தை களின் கல்வி மற்றும் திருமணம், சொந்த வீடு மற்றும் ஓய்வூதியம் இதர தேவை களுக்கு மிகச் சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுத்து (பிஎஸ்இ 30, நிஃப்டி 50),  ஒவ்வொரு மாதமுமம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, வாழ்க்கை யில் மிகப் பெரிய செல்வந்தராகலாம்” என்றார் சா.ராஜசேகரன்.

முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்..!

இனிவரும் காலத்தில் பங்குச் சந்தை யில் நீண்ட காலத்தில் முதலீடு செய்து கோடீஸ்வராக எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

‘கண் தெரியாத ஆறு பேர் யானையைத் தொட்டுப்பார்த்து சொன்ன கருத்துகளுக்கும், பங்குச் சந்தைக்கும் தொடர்பு இருக்கிறது. கண் தெரியாத ஒவ்வொருவரும் யானை பற்றி வித்தியாசமாகச் சொன்னதுபோல், பங்குச் சந்தை பற்றியும் வித்தியாசமான கருத்துகளே நம்மிடம் இருக்கிறது. சிலர், பங்குச் சந்தையை சூதாட்டம் என்கிறார் கள். சிலர், பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு என்கிறார்கள். இன்னும் சிலர், சொத்தை இழப்பதற்கான இடம் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லோரும்  சொல்லத் தவறும் ஒரு உண்மை என்னவெனில், நீண்ட காலத்தில் நிலையான சொத்து சேர்க்க பங்குச் சந்தைதான் சரியான முதலீடு என்பதே!

உதாரணத்துக்கு, 2000-ம் ஆண்டி லிருந்து இப்போது வரைக்கும் சென்செக்ஸ் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் லார்ஜ் கேப் பங்கான ஹெச்டிஎஃப்சி பேங்கின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 37 மடங்கு அதிகரித்துள்ளது. மிட் கேப் பங்கான கரூர் வைஸ்யா பேங்கின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 46 மடங்கு உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில், பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் தொடர்ந்து சொத்துச் சேர்ப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயமும் இல்லை. அப்டெக், பிர்லா காட்சைன், சுஸ்லான் போன்ற பங்குகளில் செய்திருந்த முதலீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது. அந்தவகையில் நீண்ட கால முதலீடு என்கிறபோது முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். அதற்கு ‘அசெட் அலோகேஷன்’ மற்றும் பங்குத் தேர்வு முக்கியமானதாக இருக்கிறது” என்றவர், அவை பற்றியும் விரிவாகச் சொன்னார்.


அசெட் அலோகேஷன்..!

1. ஒருவரது முழு முதலீட்டையும் பங்குச் சந்தையில் மேற்கொள்ளக் கூடாது. 50-60 சதவிகித முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளவும். முதலீட்டாளரின் வயது, பொருளாதாரப் பின்னணி, கடன், வேலை, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பங்குகளில் முதலீட்டு அளவு இருக்க வேண்டும்.

2. இப்போதுள்ளது போன்ற காளைச் சந்தையில் தனிப்பட்ட பங்கு ஒன்றில் சில முதலீட்டாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டில் 50-100% வரை மேற்கொண்டு இருக்கிறார்கள். இப்படி செய்வதைத் தவிர்க்கவும்.

3. கடன் வாங்கி முதலீடு செய்வது நல்லதல்ல. பங்கின் விலை வீழ்ச்சி கண்டால், கடனையும் கட்ட முடியாது. முதலீடும் போய்விடும்.

4. அனைத்து முதலீட்டையும் பங்குகளில் மேற்கொள்வது ஆபத்து. ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் கொஞ்சம் முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.

பங்குத் தேர்வு..!

கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இன்றைக்கு ஈக்விட்டி முதலீட்டில் ரிஸ்க் அதிகமாக உள்ளது. ஒருவர் லார்ஜ் கேப் பங்கு ஒன்றில் முதலீடு செய்துவிட்டு, 10 - 15 ஆண்டுகள் சும்மா உட்கார்ந்துவிட்டால், வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காலாண்டுக்கு ஒருமுறை பங்கு களின் நிலைமையை ஆராய்வது நல்லது. பல லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகளாகக் கரைந்திருப்பதைப் பங்குச் சந்தை வரலாற்றில் காணலாம்.

மேலும், பிசினஸ் மாற்றத்தால் (சாதாரணப் போன்கள், மொபைல் போன்களாக மாறி இருப்பது) எம்டிஎன்எல் நிறுவனம் அதன் முன்னணித் தன்மையை இழந்துள்ளது. இதுபோன்ற அம்சங் களின் அடிப்படையில், அடுத்த 10-15 ஆண்டுகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கக்கூடிய ஐந்து பங்குகளைத் தேர்வு செய்து தந்துள்ளன. ரிஸ்க்கைக் குறைக்கப் பல பத்தாண்டுகளாகச் சிறப்பாக மேலாண்மை செய்துவரும் நிறுவனங்களில் 3 லார்ஜ் கேப் பங்குகள், 2 மிட் கேப் பங்குகளைத் தந்துள்ளேன்.

1.ஹெச்டிஎஃப்சி பேங்க்!

வங்கித் துறையின் வளர்ச்சியைப் பொறுத்தே, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் இருக்கிறது.
இந்திய வங்கித் துறையில் ஹெச்டிஎஃப்சி பேங்க் வலிமை மற்றும் தரத்தில் முன்னணியில் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இதன் பங்கின் விலை 37 மடங்கு அதிகரித்துள்ளது. 52 காலாண்டுகளுக்கு மேலாக 30 சதவிகித (YoY) அளவில் இந்த வங்கியின் லாபம் அதிகரித்துள்ளது. ஆண்டு வளர்ச்சி என்பது சுமார் 23 சதவிகிதத்துக்கும் குறையாமல் உள்ளது. அந்தவகையில் அடுத்த 10 - 15 ஆண்டுகள் இந்த வளர்ச்சி ஏறக்குறைய 20 சதவிகிதமாக இருக்கும். பெரிய நகரங்களில் அதிக கிளைகளைக் கொண்டி ருக்கும் இந்த வங்கி, சிறிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்குகள் மூலம் குறைந்த செலவில் நிதி கிடைத்து வருவது இந்த வங்கியின் நிதி திரட்டும் செலவை குறைக்கிறது.

நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! Nav28h

2. ஐடிசி!

கடந்த 15 ஆண்டுகளில் இந்தப் பங்கு மீதான முதலீடு 15 மடங்கு அதிகரித்துள்ளது. மிகப் பெரிய பல்துறை நிறுவனமான இதன் வணிகம் சிகரெட்டில் ஆரம்பித்து, ஹோட்டல், காகிதம், உணவு என தொடர்கிறது. நீண்ட காலத்தில் இந்த நிறுவனம், அதன் சிகரெட் வணிகத்தைக் குறைத்து எஃப்எம்சிஜி வணிகத்தில் கவனம் செலுத்தும். மேலும், கிராமப்புற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

3.கரூர் வைஸ்யா பேங்க்!

விரைவில் (2015-16) நூறாண்டு விழா காண இருக்கும் வங்கி. இதன் சொத்துத் தரமானதாக இருக்கிறது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன் என்பது இந்திய வங்கித் துறையிலேயே மிகவும் குறைவானதாக இருக்கிறது.
ஒவ்வொரு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போனஸ் பங்குகள் மற்றும் உரிமைப் பங்குகளை அளித்து வருகிறது. பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிக டிவிடெண்டும் அளித்து வருகிறது. இந்த வங்கியில் அதன் புரோமோட்டர் பங்கு மூலதனம் 2.5 சதவிகிதமாக உள்ளது. அந்தவகையில் ஏதாவது ஒரு பெரிய வங்கி, இந்த வங்கியைக் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இது முதலீட்டாளர் களுக்கு லாபகரமாக அமையும்.

4.டெக் மஹிந்திரா!

இது ஒரு முன்னணி ஐ.டி நிறுவனம். கடந்த 15 ஆண்டுகளில் இது முதலீட்டாளருக்கு அதிகச் சொத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை மிகச் சிறப்பாக இருக்கிறது. நிலையான வணிக வளர்ச்சி, ஏறக்குறைய கடன் இல்லாத நிறுவனம் மற்றும் அதிக ரொக்க கையிருப்புக் கொண்ட நிறுவனம். அடுத்த 15 வருடங்களில் இதன் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

5.இன்டர்நேஷனல் பேப்பர் கார்ப்பரேஷன்!

இதன் பழைய பெயர் ஏபி பேப்பர். இப்போது இந்த நிறுவனம் 2,900 கோடி டாலர் மதிப்பைக் கொண்ட அமெரிக்காவின் ஐபிசி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. உற்பத்தித் திறனில் வட அமெரிக்கா மற்றும் ரஷியாவில் இந்த நிறுவனம் முதல் இடத்திலும், சீனாவில் மூன்றாவது இடத்திலும், இந்தியாவில் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. உணவு மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை பேக்கிங் செய்வதற்கான பேப்பரை உலக அளவில் சப்ளை செய்து வருகிறது. ஐபிசியின் சர்வதேச வாடிக்கை நிறுவனங்கள், இந்திய நிறுவனத்திடமிருந்தும் காகிதத் தயாரிப்புகளை வாங்கி வருகிறது” என்றார்.
நீண்ட கால பங்கு முதலீட்டில் பெரும்செல்வம் சேர்க்க வாழ்த்துக்கள்..!

- முக நூல்
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீண்ட காலத்தில் நிச்சய லாபம் ! பணக்காரர் ஆக்கும் பங்குச் சந்தை ரகசியம்...
»  நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
» நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யுங்கள் - ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் துணைத்தலைவர் ஆர்.ஜானகிராமன் பேட்டி
» எஸ்.பி.ஐ. லாபம் ரூ. 2,234 கோடி
» தங்கம் தந்த லாபம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum