வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


முதலீட்டாளர்களை பாதுகாக்கும் செபி! --SEBI

Go down

முதலீட்டாளர்களை பாதுகாக்கும் செபி! --SEBI Empty முதலீட்டாளர்களை பாதுகாக்கும் செபி! --SEBI

Post by தருண் Wed Nov 12, 2014 9:11 am

செபி அமைப்பு

நிதி சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது ரிசர்வ் வங்கி என முதலீட்டாளர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி தவிர பல்வேறு அரசு அமைப்புகளும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு செபி (Securities and Exchange Board of India) அமைப்பு இருக்கிறது.

முதலீட்டாளர்களை பாதுகாக்கும் செபி! --SEBI Sebi2(2)

செபி தொடக்கம்

மூலதனச் சந்தை மற்றும் பங்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் தன்னிச்சையான அமைப்புதான் செபி. இந்த அமைப்பு இந்திய அரசால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது. 1992 ஏப்ரல் 12-ம் தேதி இந்திய அரசால் செபி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கென்று தனியாகச் சட்டம் இயற்றியதன் மூலம் தன்னிச்சையான அமைப்பாக உருவானது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட செபிக்கு டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் அஹமதாபாத் நகரங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இந்த அமைப்புக்கான தலைவரை மத்திய அரசு நேரடியாக நியமிக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் இரண்டு உறுப்பினர்களையும், ரிசர்வ் வங்கி ஒரு உறுப்பினரையும் தவிர மத்திய அரசின் நாமினிகளாக இரண்டு உறுப்பினர்களை கொண்ட மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இதுதவிர, பல்வேறு கமிட்டிகள், வழிகாட்டும் குழுக்கள் செபியை வழிநடத்துகின்றன.

செபியின் அதிகாரம்

பங்குச் சந்தை முகவர்கள், துணை முகவர்கள், பங்குகளை மாற்றித்தரும் ஏஜென்ட்டுகள், நிறுவனப் பதிவாளர் தொடர்பான பிரச்னைகள், மெர்ச்சன்ட் பேங்கர்ஸ், முதலீட்டு ஆலோசகர்கள், போர்ட்ஃபோலியோ மேலாளர்கள் இவர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம்.

டெபாசிட்டரீஸ் (depositories) மற்றும் பங்கு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை அனுமதிப்பது, கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது.

வெஞ்சர் கேப்பிட்டல் ஃபண்டுகள், கூட்டு முதலீட்டு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது.

முறைகேடான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் இன்சைடர் டிரேடிங் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, முதலீட்டாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது.

பங்கு வெளியீட்டுக்கான அனுமதிகள், வழிகாட்டுதல்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பங்குச் சந்தை கொள்கை முடிவுகளை மேற்கொள்வது போன்றவை செபியின் அதிகாரங்களாக உள்ளன.


செபியின் செயல்பாடுகள்:

இந்தியா முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் பயன்பெறும்வகையில் 14 இந்திய மொழிகளில் தொலைபேசி வழியாக குறைகேட்பு சேவையைச் செய்து வருகிறது. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, காஷ்மீரி ஆகிய மொழிகளில் இந்தச் சேவை கிடைக்கிறது.

பாதுகாப்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் விழிப்பு உணர்வு பெறுவதற்கு ஏற்ப பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு மொழிகளில் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

முறைகேடாக முதலீடுகளைத் திரட்டும் நிறுவனங்களைத் தடை செய்வதுடன் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து சட்ட ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்வது. பங்குச் சந்தை சார்ந்த அவ்வப்போதைய சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் அதிகாரம் கொண்டது.

இதுதவிர, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை பங்குச் சந்தை தீர்த்துவைக்காதபோது செபியிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்ள முடியும்.

நீரை.மகேந்திரன்.
--முக நூல்
--ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum