வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


குறுகிய மற்றும் நீண்டகால முதலீட்டாளார்கள் கவனிக்க வேண்டியவை!

Go down

குறுகிய மற்றும் நீண்டகால முதலீட்டாளார்கள் கவனிக்க வேண்டியவை! Empty குறுகிய மற்றும் நீண்டகால முதலீட்டாளார்கள் கவனிக்க வேண்டியவை!

Post by தருண் Thu Jul 31, 2014 10:10 am

குறுகிய மற்றும் நீண்டகால முதலீட்டாளார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்று ஐ.எஃப்.சி.ஐ நிறுவனத்தின் சீனியர் டீலர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் சொல்கிறார்.

பெரும்பாலும் பங்குசந்தையில் உள்ள பழைய மற்றும் புதிய முதலீட்டாளர்கள் சிறிய மீன் போட்டு பெரிய மீன் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்பழமொழிக்கு ஏற்ப சிறிய முதலீட்டில் பெரிய லாபம் ஈட்டி விடலாம் என்ற எண்ணத்தில் மிக குறைந்த விலையில் இருக்கும் சிறிய நிறுவனங்களின் பங்குகளை, அதன் ஃபண்டமென்டல் சரிவர பார்க்காமலே கூட வாங்கி குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கிறார்கள். அப்படி சிறிய அளவில் முதலிடு செய்யும் நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலான நேரங்களில் சந்தையில் புழக்கத்தில் வருவதில்லை. அதனால் அந்த பங்குகளை லாபத்தில் விற்று ரொக்கமாக மாற்றுவது என்பது மிக கடினமாகி விடுகிறது. அந்த பங்குகள் சிறிது புழக்கத்தில் இருக்கும்பொழுது பெரும்பாலும் குறைந்த விலையிலேயே விற்க நேரிடும். இதனால் நஷ்டம் அடைவது தான் வாடிக்கையாளர் மத்தியில் நிலவி வருகிறது.

அதிலும் சிரிய அளவிலிருக்கும் சில நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் நஷ்டமடைந்து விடுவதால், அவைகளின் பங்குமதிப்புகள் பூஜ்யமாகி விடுகிறது. அதனால் இந்த பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்கள் பணம் முழுவதையும் இழக்கின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் மிக முக்கியமாக ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஏ குரூப் பங்குகள் அதாவது நிஃப்டி மற்றும்
சென்செக்ஸில் உள்ள பங்குகள், மேலும் மற்ற பிரிவுகளுக்குள் இருக்கும் வேறு சில ஃபண்டமென்டலி பலமான நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக முதலீடு தேவைபட்டாலும் அந்த பங்குகள் குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் வாங்கி முதலீடு செய்வதற்கு சரியான பங்குகளாகும்.

இந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்தால், ரிஸ்க் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் தகுந்த லாபத்துடன் வெளியே வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

-தி இந்து

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum