வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சொத்து பத்திரப் பதிவு... இனி காத்திருக்கத் தேவையில்லை !

Go down

சொத்து பத்திரப் பதிவு... இனி காத்திருக்கத் தேவையில்லை ! Empty சொத்து பத்திரப் பதிவு... இனி காத்திருக்கத் தேவையில்லை !

Post by தருண் Sat Jul 19, 2014 4:46 pm

பொதுமக்கள் காலவிரயம் இன்றி சொத்துப் பத்திரம் பதிவு செய்ய இணையதளம் மூலம் சார் பதிவாளருடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அண்மையில் சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆவணம் பதிவு செய்வதற்கான குறிப்பிட்ட நேரத்தைப் பொதுமக்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொண்டு, அந்த நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் சென்று, ஆவணப் பதிவு தொடர்பான பணிகளை விரைவாக செய்து முடிக்கலாம். சொத்து குறித்த வில்லங்க விவரங்களை ஆன்லைனில் பார்க்கும் வசதியும் கொண்டுவரப்பட இருக்கிறது. இதுகுறித்து சார் பதிவாளர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

''சொத்து வாங்குவதற்கு முன்பும், பின்பும் அனைவரும் பார்க்கும் விஷயம், வில்லங்கச் சான்றிதழ். இதுதான் ஒரு சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. தற்போது அதை சார் பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறுவது வழக்கமாக உள்ளது. மேலும், கம்ப்யூட்டர் மூலமான ஆன்லைன் சேவை நடைமுறையில் இருந்தாலும், அதை விண்ணப்பித்து தபாலில் வில்லங்கச் சான்றை பெற பல நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால் பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதுபோன்றவர்களுக்கு உதவும் விதமாக, ஒரு சொத்து தொடர்பான விவரங்களைப் பூர்த்தி செய்து, உடனுக்குடன் வில்லங்கக் குறிப்புகளைப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்து அச்செடுக்கவும் புதிய வசதியை அறிமுகம் செய்யப் போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் இன்னும் ஆறு மாத காலத்தில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது' என்றார்கள் பத்திரப் பதிவு அதிகாரிகள்.  

நகர்ப்புறங்களில் இணையம் மூலம் முன்பதிவு பெறுவது சாத்தியமாக இருக்கும். கிராமங்களில் தொலைபேசி மூலம் சார் பதிவாளரிடம் முன்பதிவு செய்யும் விதமாக கொண்டுவந்தால் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சொத்து பத்திரப் பதிவு... இனி காத்திருக்கத் தேவையில்லை ! Nav46b

தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தால் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கூட்ட நெரிசல் குறையும். வில்லங்கச் சான்றிதழ் பெறுவதில் இடைத் தரகர்களின் ஆதிக்கம் தவிர்க்கப்படும் என்பதால் வரவேற்கக்கூடிய மாற்றம்தான்..!
-விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum