வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்!

Go down

மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்! Empty மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்!

Post by தருண் Mon Jun 02, 2014 7:08 pm

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி வளர்ச்சிக்கான ஆட்சியாக இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி காணும்போது, நடுத்தர நிலையில் இருக்கும் மிட் கேப் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களாக, அதாவது, லார்ஜ் கேப் நிறுவனங்களாக வளர்ச்சி காண அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

மும்பையைச் சேர்ந்த இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் எஸ்.விக்னேஷ், தற்போதைய நிலையில் மிட் கேப் நிறுவனப் பங்குகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னார்.
''பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, வளர்ச்சிப் பருவம், நிலைபெறுதல் பருவம் என இரு நிலை உண்டு. இந்தியப் பொருளாதாரம் அண்மைக்காலம் வரை நிலைபெறுதல் என்னும் நிலையில் இருந்தது.

புதிய அரசு, உள்கட்டமைப்பு வசதிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு  இருப்பதால், சிறிய நிறுவனங்கள்  அதிக வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.

பொருளாதார வளர்ச்சி ஏற்றத்தில் இருக்கும்போது வங்கி, இன்ஃப்ரா போன்ற துறைகள் வேகமான வளர்ச்சி காணும். அப்போது இதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.  

முப்பது ஆண்டுகளுக்குப்பின் தனியரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதற்குமுன் 2004-ல் மன்மோகன் சிங் பிரதமரானபோது தொடங்கிய பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் போல, இப்போது நரேந்திர மோடி சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, 4.5 - 4.8 சதவிகிதமாக இருக்கும் ஜிடிபி வளர்ச்சி, 6.5 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கக்கூடிய மிட் கேப் நிறுவனங்கள் நிறையவே இருக்கும். இந்த மிட் கேப் நிறுவனங்கள்தான், எதிர்காலத்தில் லார்ஜ் கேப் நிறுவனங் களாக மாறும். மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தாலும், தற்போது மிட் கேப் பங்குகளுக்கான மதிப்பீடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் விரைவில் வளர்ச்சி காண இருக்கும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கும்'' என்ற விக்னேஷ், முதலீட்டுக்கேற்ற மிட் கேப் பங்குகள் மூன்றை பரிந்துரை செய்தார்.

பிரிஸம் சிமென்ட்ஸ் இலக்கு விலை ரூ.80

ஒருங்கிணைந்த கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இது. புதிய அரசு மூலம் உள்கட்டமைப்புத் துறை வேகமான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிமென்ட் தேவை அதிகரிக்கும். இந்தத் தேவை குறைந்தபட்சம் மூன்றாண்டு களுக்குத் தொடரும் எனலாம். இது பிரிஸம் சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு லாபமாக அமையும். நிறுவனங்களின் பங்கு மூலதனம் 75 சதவிகிதமாக இருப்பது இதன் கூடுதல் பலம்.

கே.எஸ்.சி.எல். இலக்கு விலை ரூ.754

காவேரி சீட்ஸ் கம்பெனி (கே.எஸ்.சி.எல்.), தாவர விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 2010-13-ல் இதன் சராசரி வருமான வளர்ச்சி விகிதம் 58 சதவிகிதமாக  உள்ளது. வீரிய விதைகள் சந்தையில் இதன் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது.

மிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்! Nav08c

ஹெச்.எஸ்.ஐ.எல். இலக்கு விலை ரூ. 278

இந்தியாவின் பெரிய சானிடரிவேர் நிறுவனங்களில் ஒன்றாக இது இருக்கிறது. கன்டெய்னர் கிளாஸ் பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்த நிறுவனம். 2014-16-ல் இதன் வருமான அதிகரிப்பு சராசரியாக 19 சதவிகிதமாக இருக்கிறது.

சென்னையின் முன்னணி டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீராம் பரிந்துரை மூன்று மிட் கேப் பங்குகள் இனி:

எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் இலக்கு விலை: ரூ.600

இந்தியாவின் முன்னணி மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் இது. குறுங்கடன் வணிகத்தில் நல்ல அனுபவத்தைப் பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, இப்போது இந்த நிறுவனம் வலிமையாகி இருக்கிறது. நடப்பு ஆண்டில் இந்த நிறுவனம் நிகர லாப இழப்பிலிருந்து நிகர லாபத்துக்குத் திரும்பியிருக்கிறது. இந்தப் பங்கு ஒவ்வொருமுறை 20 ரூபாய் இறங்கும் போதும் வாங்க வேண்டும். 185 ரூபாய் வரை இப்படி வாங்கிச் சேர்க்கலாம்.

ஜே.பி. பவர் இலக்கு விலை: ரூ.45

புதிய அரசு பதவியேற்றபின் இந்த நிறுவனம் சார்ந்த மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. இனிவரும் காலத்தில் இதன் வருமானம் கணிசமாக அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளது. பங்கின் பிரைஸ் டு புக் ரேஷியோ 1:1 என்பது கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தப் பங்கு ஒவ்வொருமுறை 2 ரூபாய் இறங்கும்போதும் வாங்க வேண்டும். ரூ.17 ரூபாய் வரை இப்படி வாங்கிச் சேர்க்க வேண்டும்.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இலக்கு விலை: ரூ.500

சென்னை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் டியூப் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. இதன், நிர்வாகம் சிறப்பாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பங்கின் விலை 100 மற்றும் 150 ரூபாய்க்கும் இடையே வர்த்தகமானது. இது அண்மையில் உடைக்கப்பட்டிருக்கிறது. பிரைஸ் டு புக் வேல்யூ 4:1-ஆக இருப்பதைத் தாண்டியும் இந்தப் பங்கின் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்தப் பங்கு ஒவ்வொருமுறை 20 ரூபாய் இறங்கும்போதும் வாங்க வேண்டும். 160 ரூபாய் வரை இப்படி வாங்கிச் சேர்க்க வேண்டும்.

சென்னையைச் சேர்ந்த சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜன் பரிந்துரை செய்யும் மூன்று மிட் கேப் பங்குகள் இனி.

தீபக் ஃபெர்டிலைஸசர் இலக்கு விலை ரூ.210

இந்தியாவில் கெமிக்கல்ஸ் வியாபாரத்தில் சிறந்த நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று. குறிப்பாக, ஐசோபுரஃபைல் ஆல்கஹால் (ஐ.பி.ஏ) என்னும் கெமிக்கல் வியாபாரத்தில் 75% பங்கை கைப்பற்றி உள்ளது. உரத் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்துக்கு வருங்காலத்தில் அதிக முக்கியத்துவம் வர வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து காலாண்டு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் இந்தப் பங்கின் வருமானமும் கூடிவருவது இதன் வலிமையான வளர்ச்சியைக் காட்டுகிறது. பருவமழை பொய்காதவரை இந்த நிறுவன வளர்ச்சி தொடரும்.

ஐ.டி.எஃப்.சி. இலக்கு விலை ரூ.170

ஐ.டி.எஃப்.சி. நிறுவனம், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் அளிக்கும் ஒரு நிறுவனமாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி இப்போது தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மை. இந்த நிலை மாறி இனி உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேகமெடுக்கத் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஐந்து காலாண்டு முடிவுகளை எடுத்துப் பார்த்தால், கடைசி காலாண்டைத் தவிர, மற்ற எல்லா காலத்திலும் சிறப்பான லாபத்தைத் தந்துவந்தது. ஆனால், கடைசி காலாண்டில், நல்ல வருமானம் இருந்தும், வாராக்கடனுக்கான ஒதுக்கீடு கணிசமான அளவுக்கு இருந்ததால், இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. எனவேதான் பங்குக்கான லாபமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

இனிவரும் காலத்தில் இதன் விற்பனை உயர்வதோடு, நிலுவையில் இருக்கக்கூடிய கடனையும் வசூலிக்கும் திறனும் அதிகரிக்கும். புதிய வங்கிக்கான லைசென்ஸ் பெறுவது இந்த நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. அடுத்த ஓராண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்து பங்கின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

என்.சி.சி. இலக்கு விலை ரூ.100

இந்த நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளில் பல கடுமையான சூழலைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, நிறைய கடன் வாங்கி, அதிக வட்டி கட்டிவந்தது. பொருளாதாரத் தேக்கநிலை மாறும்பட்சத்தில் இந்த நிறுவனம் பெரும்பயன் அடையும்.
கடந்த ஐந்து காலாண்டு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த நிறுவனத்தின் வருமானம் நன்கு அதிகரித்து வருகிறது. கடைசி காலாண்டில், நல்ல லாபத்தையும் ஈட்டி உள்ளது. எனவேதான், ஒரு பங்குக்கான லாபமும் நன்கு
அதிகரித்து, இந்த நிறுவனம் மீண்டும் வலிமையாக மாறியிருக்கிறது.

எச்சரிக்கை: மேலே பரிந்துரை செய்யப்பட்ட பங்குகளை மொத்தமாக வாங்கக்கூடாது. ஒவ்வொரு இறக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்க்க வேண்டும்.

* இலக்கு விலை ஓராண்டுக்கானது. பங்கு விலை நிலவரம் மே 30

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum