வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -1

Go down

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை  பகுதி -1 Empty தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -1

Post by தருண் Tue Oct 08, 2013 2:23 pm

வணக்கம் .




பங்கு சந்தை பற்றி எழுதும் அளவுக்கு நான் வரவில்லை என்பதே உண்மை .

இந்த திரி பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்தைய திரி என்று கொள்ளலாம் .

நான் 2008 முதல் நாணய விகடன் தொடர்ந்து படித்து வருகின்றேன் . அதன் அடிப்படையில் இந்த திரி தொடங்கி உள்ளேன் .

இது முற்றிலும் பங்கு சந்தை பற்றி அடிப்படை அறிவுக்கு முந்திய பகுதியாக இருக்கும் .





தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை -பகுதி -1


பங்கு சந்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ள தேவை இல்லாதவர்கள் .

1 . மகன்/மகள் திருமண செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .

2 .மகன்/மகள் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்துள்ள பணம் .(காரணம் சில சமயங்களில் பணத்தை நமக்கு தேவைப்படும் போது சட்டென்று எடுக்க இயலாது .ஏன் என்று பின்பு பார்ப்போம் .)

3 . கடன் வாங்கி செய்ய வேண்டாம்.

4 . வரவுக்கும் , செலவுக்கும் பற்றாக்குறை உள்ளவர்கள் .


சில அடிப்படை தகவல் பற்றி பார்ப்போம் .


index என்றால் என்ன ?


இன்றைய தொலைகாட்சி மற்றும் செய்திதாள்களில் சென்செக்ஸ் & நிப்படி இவ்வளவு புள்ளிகள் ஏறின என்றும் இறங்கின என்று சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் குறிப்பிடுவர் .பச்சை என்றால் சந்தை மேலே சென்று உள்ளது பொருள். சிவப்பு சந்தை கீழே சென்று விட்டது என்று பொருள். .

இன்டெக்ஸ் என்பது ,ஓர் குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல , பங்கு சந்தையில் உள்ள பல இலட்சம் கணக்கான பங்குகளில் இருந்து ஓர் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பங்குகளின் விலையில் ஏற்படும் , ஏற்ற , இறக்கங்களின் கூட்டு சாரசரியே இன்டெக்ஸ் என்பதாகும் .

கணக்கிடபடும் முறை :-

-> இன்டெக்ஸ் - யை கணக்கிட , base year எனப்படும் அடிப்படை ஆண்டை தேர்வு செய்வர் ,

-> பின்பு சந்தையில் வணிகத்தில் இருக்கும் , மொத்த பங்குகளில் ,சில விதிமுறைகளை பின்பற்றி ,குறிப்பிட்ட பங்குகளை தேர்வு செய்வர் ,

->இந்த குறிப்பிட்ட பங்குகளின் , குறிப்பிட்ட நாளில் விலையில் ஏற்படும் ஏற்ற ,இறக்கங்களின் கூட்டு சாரசரியே அந்நாளில் அதிகரித்த அல்லது குறைந்த புள்ளிகள் ஆகும் .

->தினம் இவ்வாறு தோன்றும் புள்ளிகளை ,அடிப்படை ஆண்டின் புள்ளிகளோடு இணைத்து இன்டெக்ஸ் - யை கணக்கிடுவர் .

சென்செக்ஸ் - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்


ACC LTD.
BHARAT HEAVY ELECTRICALS LTD.
BHARTI AIRTEL LTD.
CIPLA LTD.
DLF Ltd.
HDFC BANK LTD
HERO HONDA MOTORS LTD
HINDALCO INDUSTRIES LTD
HINDUSTAN UNILEVER LTD.
HOUSING DEVELOPMENT FIN. CORPN. LTD
ICICI BANK LTD.
INFOSYS TECHNOLOGIES LTD.
ITC LTD.
JAIPRAKASH ASSOCIATES LIMITED
JINDAL STEEL & POWERS LTD.
LARSEN & TOUBRO LTD.
MAHINDRA & MAHINDRA LTD
MARUTI SUZUKI INDIA LIMITED
NTPC LTD.
ONGC CORPN
RELIANCE COMMUNICATIONS LTD.
RELIANCE INDUSTRIES LTD.
RELIANCE INFRASTRUCTURE LTD
STATE BANK OF INDIA
STERLITE INDUSTRIES.
TATA CONSULTANCY SERVICES LIMITED
TATA MOTORS LTD.
TATA POWER CO. LTD.
TATA STEEL LIMITED.
WIPRO LTD.


நிப்படி - யில் கணக்கில் கொள்ளப்படும் பங்குகள்


ABB
ACC
AMBUJACEM
AXISBANK
BHARTIARTL
BHEL
BPCL
CAIRN
CIPLA
DLF
GAIL
HCLTECH
HDFC
HDFCBANK
HEROHONDA
HINDALCO
HINDUNILVR
ICICIBANK
IDEA
IDFC
INFOSYSTCH
ITC
JINDALSTEL
JPASSOCIAT
KOTAKBANK
LT
M&M
MARUTI
NTPC
ONGC
PNB
POWERGRID
RANBAXY
RCOM
RELCAPITAL
RELIANCE
RELINFRA
RPOWER
SAIL
SBIN
SIEMENS
STER
SUNPHARMA
SUZLON
TATAMOTORS
TATAPOWER
TATASTEEL
TCS
UNITECH
WIPRO

பங்குச்சந்தை என்றால் என்ன?

பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். இதை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.

பங்கு என்றால் என்ன ?

ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள் அவர்கள் நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக அவர்கள் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது...

அப்பொழுது பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்து , ஒரு பங்கு விலை இவ்வளவு என்று வெளியிடுவார்கள் அதுதான் ஷேர் அல்லது பங்கு. ( முகப்பு விலை , முகப்பு விலையை விட அதிக விலை வைத்து விற்பது "பிரிமியம் என்று பெயர் -- பின்பு விவரமாக பார்ப்போம் )

ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம்(டிவிடன்ட்) முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன..


பங்கு வர்த்தகத்தில் இடுபட கீழ் கண்டவை மிக அவசியம் .


1 . வங்கி கணக்கு

2. ஒரு டிமேட் கணக்கு

3. 50,000 மேல் ஷேர்களுக்கு விண்ணப்பிப்பது என்றால் , தங்களின் வருமான வரிக் கணக்கு எண்(பான் கார்டு)

Demat Account என்றால் என்ன?

வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பயன்படுத்த படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.

விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும்.


மேலும் சில அடிப்படை தகவல்கள் பற்றி அடுத்த வாரம் காண்போம்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை  பகுதி -1 Empty தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை  பகுதி -2

Post by தருண் Tue Oct 08, 2013 2:27 pm

தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2


பங்குச்சந்தை இரண்டு வகைப்படும்

முதன்மை பங்குச்சந்தை (Primary Market) :

ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பெயர்.

IPO பெற எப்படி விண்ணப்பிப்பது என்று பின்னர் பாப்போம் .விண்ணபித்த அனைவருக்கும் சில நேரங்களில் கிடைக்காது . அப்போ நீங்க இரண்டாம் நிலை பங்குச்சந்தையில் பெற்றுகொள்ளலாம் .

இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)

முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை( STOCK EXCHANGE ) அணுக வேண்டும். ஒரு கம்பனிஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும். அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்புவிலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.

பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)


பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) விற்பனை செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோனா விலை (பிரிமியம்)கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.

பங்கு தரகர்கள் ? (Stock Brokers)


பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளைவாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.இதற்கு என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை முதல் பகுதியில் பாருங்கள்.

பங்குச்சந்தை பற்றி மேலும் சில தகவல்களை அறியுமுன், நாம் நடைமுறையில் உள்ள நிறுவனங்களின் வகைகள் குறித்துச் தெரிந்துகொள்வோம்


தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :

ஒரே ஒருவர், தன்னுடைய பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) வைத்து ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் , அந்நிறுவனத்தின் இலாபமோ நஷ்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சேர்ந்தது . இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று சொல்லுவார்கள் . அதன் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.


கூட்டு நிறுவனம் (Partnership company) :

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் தன்னுடன் சிலரை சேர்த்து (partners) ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்றால் . இலாபம், நஷ்டமோ எதுவாயினும், சமமாகக் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளுக்கு அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு முழு உரிமை உண்டு.

வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :

மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப்
பகுக்கலாம். அவையாவன:

தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :

அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.

பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :

தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்...

பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும்.

ஷேர் செய்வபர்களின் வகைகள்


1 . முதலீடு செய்பவர்கள் (இன்வேஷ்டர்ஸ்)

2. வியாபாரம் செய்பவர்கள்(ட்ரடெர்ஸ் )

3. எதாவது ஒரு யுகத்தின் அடிபடையில் வியாபாரம் செய்பவர்கள். ("SPECULATORS")

உதாரணம் :

அபுதாபியை சேர்ந்த "எதியட் " நிறுவனம் , இந்தியாவில் உள்ள ஜெட் நிறுவனத்தை வாங்க போவதாக தகவல் வெளியான உடன்(உண்மையான தகவல என்று பார்க்காமல் ஒரு யுகத்தின் அடிபடையில் ) ஜெட் நிறுவன பங்குகளை வாங்குவார்கள் .இதனால் ஜெட் நிறுவன பங்குகள் விலை ஏறும். ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை (இதுவரை ) . ஆகவே மீண்டும் அந்நிறுவன பங்குகள் வீழ்ச்சி அடைந்தன . சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் . எனவே புதியவர்கள் முன்றாவது முறையை நினைத்து கூட பார்க்க வேண்டாம் .

பங்குகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விசயங்கள்

1 . நல்ல டிவிடன்ட் தரும் நிறுவனம் .

2 . நல்ல நிறுவனம் .

3. விலை குறைவாக உள்ள நேரம் (52 வார அதிகம் /52 வார குறைவு - இதை பின்னர் விளக்கமாக பார்ப்போம் .)


தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum