வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?

Go down

ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்? Empty ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?

Post by தருண் Wed Jul 19, 2017 9:22 am

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதனால் ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து ஹிராநந்தானி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும், தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் (NAREDCO) அமைப்பின் மேற்கு மண்டலத் தலைவருமான நிரஞ்சன் ஹிராநந்தானியிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...

ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்? 19p1

ரியல் எஸ்டேட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் என்னென்ன?”

``ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வேகத்தில் பிளான் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அனுமதி வழங்கத் தேவைப்படும் தகுதிகளும் வழிமுறைகளும் வேறுபடுகின்றன. அனுமதி வழங்கப்படுவதில் ஒரே சீரும், தகுந்த கால அளவும், எல்லா அனுமதிகளையும் ஒரே வழிமுறையில் வழங்கவும் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. மேலும், ரியல் எஸ்டேட்டுக்கு வசூலிக்கப்படும் வரியும் வேறுபடுகிறது.

ஜி.எஸ்.டி முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட போது, தேசம் முழுவதும் ஒரே சீராக வரி வசூலிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது ஒரே அளவிலான வரி நாடு முழுவதும் வசூலிக்கப்படாது என்று உறுதியாகிவிட்டதால், நாங்கள் `ரெரா’ சட்டமாவது குறிப்பிட்ட கால நேரத்துக்குள் அனுமதிகளை வழங்கிட உதவும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வழிகாட்டி மதிப்பீடு குறைப்பு மற்றும் அதனால் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படப் போகும் தாக்கங்கள் ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.’’

``ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்தும் `ரெரா’ சட்டத்தினால், இந்தத் துறைக்கும் பொதுமக்களுக்கும் என்ன லாபம்?”

``இந்திய ரியல் எஸ்டேட் துறை, பணமதிப்பு நீக்கம், பினாமி சொத்து சட்டம், ஜி.எஸ்.டி மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றால் மொத்தமாகத் தொழில் மறுதொடக்கத்தைச் சந்தித்து வருகிறது.

‘ரெரா’வை அமல்படுத்தியுள்ளதால், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதோடு, வீடு வாங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உறுதியையும் மேம்படுத்துகிறது.

‘ரெரா’வானது, ரியல் எஸ்டேட்மீது நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். மேலும், ரியல் எஸ்டேட் துறை இனி சிறந்த ஒழுங்குமுறையோடும் தொழில் சார்ந்த முறையில் சிறப்பாகவும் இயங்கும். வீடு வாங்குபவர்களின் தரப்பிலிருந்து பார்த்தால், இடைத்தரகர்களின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, மிகவும் வலிமையான சட்டத் தீர்வையும் வழங்குகிறது. இதனால் வெறுமனே வீடுகள் வாங்கப்படுவதை வேடிக்கை பார்த்தவர்கள்கூட, வீடு வாங்க முடிவெடுக்கும் சூழலை இது ஏற்படுத்தும்.’’

``ஜி.எஸ்.டி-யால் ரியல் எஸ்டேட் துறையில் தாக்கம்..?”

``ரியல் எஸ்டேட்டின் மிக முக்கிய மாற்றங்களுக்கான காரணங்களில், ஜி.எஸ்.டி-யும் ரெரா-வும் முன்னணியில் இருக்கின்றன. ஜி.எஸ்.டி-யானது ரியல் எஸ்டேட்மீது 12% அளவு மட்டுமே வரி விதித்திருக்கிறது. இதனால் ஸ்டாம்ப் டூட்டி, பதிவு செலவுகள் மற்றும் மற்ற இதர செலவுகள் ஜி.எஸ்.டி-யால் குறையும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.’’

``15% என்றிருந்த சேவை வரி, இப்போது ஜி.எஸ்.டி-யில் 18 சதவிகிதமென நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை உயருமா..? வேறு என்னென்ன பாதிப்புகள் இருக்கும்?”

“நான் முன்பே சொன்னதுபோல், ரியல் எஸ்டேட் துறையில் 12% அளவுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படியும், செய்தி அறிக்கையின் படியும், சராசரி அளவு ஒரு சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி-யால் உயர்ந்துள்ளது.
பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலிக்கப்படும் வரி ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது. உதாரணமாக, தற்போது தமிழ்நாட்டில் ஸ்டாம்ப் டூட்டி, பதிவு செலவு மற்றும் இதர வரிகள் 11% என்கிற அளவில் உள்ளது. இது நம் நாட்டிலேயே மிக அதிகம். ஜி.எஸ்.டி-யின் சாரமே, `ஒரே நாடு, ஒரே வரி’ என்பதுதான். ஆனால், இது ரியல் எஸ்டேட் துறைக்குச் செல்லுபடியாகாது.’’

``ஜி.எஸ்.டி-யால் ரியல் எஸ்டேட் துறைக்கு மட்டும் இரட்டை வரி விதிப்பு வரும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன?”

``ஒவ்வொரு மாநிலத்திலும் ஜி.எஸ்.டி-யைத் தவிர்த்து ஸ்டாம்ப் டூட்டி, பதிவு மற்றும் இதர வரிகள் வேறுபடுகின்றன. வீடு வாங்குபவர்கள் உள்பட பல்வேறு ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள், அவர்களிடமிருந்து வழக்கமாக வசூலிக்கப்படும் மற்ற வரிகளிலிருந்து, ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், அது நிதர்சனம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்படும் நிலை நீடிக்கும். இத்துடன் பணவீக்கமும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரிக்கும் நிலையும் உள்ளது.’’

``இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் எப்படி?”

``சி.எல்.சி.ஏ இந்தியா கொடுத்துள்ள ஆய்வறிக்கையின்படி, 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான வீடு விற்பனையே நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும். வரும் 2018-க்குப் பிந்தைய ஆறு வருடங்களில் 6 கோடி புது வீடுகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருபது லட்சம் புது வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கவுள்ளது. மேலும், ஜி.டி.பி-யையும் உயர்த்தும் என நம்பிக்கையளித்துள்ளதால், ரியல் எஸ்டேட், இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

`2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு’ என்னும் பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்கத்தையும் குறிப்பிட வேண்டும். இது ஓர் அருமையான தொடக்கம் என்பதோடு, நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பின்படி, கட்டுபடியாகும் விலையில் வீடு வாங்க வங்கிகளில் பெறப்படும் கடன்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, கிராமப் புறங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒதுக்கப்பட்ட நிதி, ரூ.15,000 கோடி ரூபாயிலிருந்து ரூ.23,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2017-2018-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகளைக் கட்டி முடிக்க முடியும். மேலும், 2022-ம் ஆண்டுக்குள் 2.5 கோடி நகர்ப்புற வீடு கட்டும் திட்டமும், 4.5 கோடி கிராமப்புற வீடு கட்டும் திட்டமும், தனியார் துறை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகும்.

பொருளாதாரத்தின் மற்ற உறுப்புகளைப்போல, ரியல் எஸ்டேட்டிலும், சுதந்திரமான எஃப்.டி.ஐ கொள்கை, ரெய்ட்ஸ், இன்விட்ஸ், கிரெடிட்டோடு இணைக்கப்பட்ட மானியம், ரூ.1 லட்சம் கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட கொள்கை மாற்றங்களால் எதிர்காலத்தில் பல நல்ல விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

இனிவரும் காலத்திலாவது அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்க விதிமுறைகள் தளர்வு
» ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு: அசோசேம் வலியுறுத்தல்
» முகலிவாக்கம் பாதிப்புக்குப் பிறகு ரியல் எஸ்டேட் ‘ரியல்’ நிலவரம்! தமிழக ரவுண்ட் - அப்
» ரியல் எஸ்டேட் அல்லது ரீல் எஸ்டேட்?
» ரியல் எஸ்டேட் : பத்திரத்தை அவசியம் படியுங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum