Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
Page 1 of 1
தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
வரும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து கணக்குத் தணிக்கையாளர் மற்றும் தென் இந்திய கணக்குத் தணிக்கையாளர் குழுவின் மண்டல உறுப்பினர் கோபால கிருஷ்ண ராஜு விளக்கிச் சொன்னார்.
‘‘2017-ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மாதச் சம்பளக்காரர்களுக்கு தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு. இதனைக் கொஞ்சம் உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ரூ.4 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். கடந்த காலங்களில் பார்க்கும்போது, வரி வரம்பானது படிப்படியாகவே உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒரேயடியாக உயர்த்தப்பட்டது கிடையாது. 5,000, 10,000 ரூபாய் என்று உயர்த்தி இருக்கிறார்கள். இவ்வளவு வருடங்களில் 50 ஆயிரம் வரை உயர்த்தியது ஒரேமுறை மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.50,000 என உயர்த்தி ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்தார்கள். இப்போது ரூ.3 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு உயர்த்தும்போது ஸ்லாப் அளவை மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் வரை ஒரு ஸ்லாப் லெவல் இருக்கிறது. ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் ஒரு ஸ்லாப் ஆக இருக்கிறது. இப்போது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ரூபாய் என்று மாற்றினால், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை ஒரு இடைவெளி இருக்கும். அடுத்த இடைவெளி ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
80C பிரிவு
தற்போது ரூ.1.5 லட்சம் வரை 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் முதலீடு செய்தால், அதற்கும் வரி விலக்கு உண்டு. 80C-ன்கீழ் வழங்கப்படும் வரி விலக்கினால் சம்பளக் காரர்களின் சேமிப்பு அதிகரித்திருக்கிறது என்ற கடந்த கால விவரங்களின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கு 80C வரி விலக்கு தொகையினை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மூத்த குடிமக்கள்
தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள சீனியர் சிட்டிஷன்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. இது ரூ.4 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இது போலவே, 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. இதனை ரூ.6 லட்சம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
நேஷனல் பென்ஷன் ஸ்கீம்
தற்போது ரூ.50,000 வரை முதலீடு செய்வதற்கு 80C-ன்கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கடந்த காலங்களோடு ஒப்பீட்டு இந்த பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செலுத்தப்படும் வங்கிக் கடனின் அசலில் வரி விலக்கு கிடையாது. ஆனால், தற்போது வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செலுத்தப்படும் தொகைக்கும் வரி விலக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது நிறைவேறுமா என்று தெரியவில்லை.
ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்
தற்போது சம்பளம் போன்ற செயல்பாட்டு வருமானத்துக்கு 30% வரி செலுத்த வேண்டும். இதுவே சொத்தை விற்றுக் கிடைக்கும் செயல்பாடற்ற வருமானத்துக்கு 20% வரி செலுத்தினால் போதும்.
இந்த பட்ஜெட்டில் செயல்பாடற்ற வருமானத்துக்கு வரி விகிதத்தை உயர்த்தி, 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) அதிகரிக்கலாம்.
தற்போது மியூச்சுவல் ஃபண்டில் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்றால், வரி விலக்கு இருக்கிறது. ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் எங்கு வருமானம் சிறப்பாக இருக்கிறதோ, அங்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படாதபோது கடன் பத்திரங்களில் முதலீட்டை மாற்றிக்கொள்வார்கள். பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் போது கடன் பத்திரங்களிலிருந்து பங்குச் சந்தைக்கு முதலீட்டை மாற்றிக் கொள்வார்கள்.
பொதுவாக, கடன் பத்திரங்களில் முதலீட்டுக்கு மூன்று வருடங்களுக்குப் பின்பும், பங்கு சார்ந்த முதலீட்டில் ஓர் ஆண்டு முடிந்தவுடனேயும் வருமானத்துக்கான வரிச் சலுகையைப் பெற முடியும்.
ஆனால், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளுக்கும் ஓராண்டு என்று இருப்பதால், இனிவரும் காலத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே வரிச் சலுகை அல்லது வருமானத்துக்குக் குறிப்பிட்ட அளவு வரியைச் செலுத்த வேண்டும்
என்பதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
இந்த எதிர்பார்ப்பில் எவையெல்லாம் நிறைவேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
ரியல் எஸ்டேட் துறைக்கான எதிர்பார்ப்புகள்..!
மத்திய அரசு, 2017-18 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வந்தால் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும் என்று கிரெடாய் சென்னை தலைவர் சுரேஷ் கிருஷ்ணா விளக்கிச் சொன்னார்.
‘‘மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் தொழிலை தூக்கி நிறுத்தும் வகையில் பல்வேறு பாசிட்டிவ் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதற்கான வேண்டுகோளையும் வைத்துள்ளோம். ஏனென்றால், கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் வர்த்தகம் தேக்க நிலையில்தான் இருந்து வருகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிடும் ரியல் எஸ்டேட் பிசினஸ் குறித்த அறிவிப்புகளைப் பொறுத்தே, ரியஸ் எஸ்டேட் வர்த்தகம் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதற்கான வங்கிக் கடன் வட்டி சராசரியாக 8.7 சதவிகிதமாக இருக்கிறது. இதனை 7.5 சதவிகித அளவுக்கு குறைக்க வேண்டும். பெண்கள், முதியோர், மைனர்கள் பெயரில் வீடு வாங்கும்போது கடனுக்கான வட்டியில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டியில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
ரியஸ் எஸ்டேட் தொழிலுக்கு, தொழில்துறை அந்தஸ்து வேண்டும் என்று கேட்டுள்ளோம். அப்படி ஓர் அங்கீகாரம் கிடைத்தால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான வங்கிக் கடன் மிகவும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தொழில் பாதுகாப்பும் இன்னும் உறுதியாகும்.
மத்திய அரசு, ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்த சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதில் இருக்கும் வரிகளைக் குறைக்க வேண்டும். விரைவில் நடைமுறைக்கு வர உள்ள ஜிஎஸ்டி-யில், ரியல் எஸ்டேட் தொழில் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளையும் குறைக்க வேண்டும். இவையெல்லாம் ரியல் எஸ்டேட்டை தூக்கி நிறுத்தக்கூடிய மிகவும் முக்கியமான கோரிக்கைகள்.
நாங்கள் வைத்துள்ள இத்தகைய கோரிக்கைகளை மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி நிறைவேற்றினால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடு பிடிக்கும். அனைத்து தரப்பு மக்களும் சொந்த வீடு வாங்கும் கனவு மெய்ப்படும்’’ என்று முடித்தார் சுரேஷ் கிருஷ்ணா.
ந.விகடன்‘‘2017-ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. மாதச் சம்பளக்காரர்களுக்கு தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு. இதனைக் கொஞ்சம் உயர்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. ரூ.4 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வருகிறார்கள். கடந்த காலங்களில் பார்க்கும்போது, வரி வரம்பானது படிப்படியாகவே உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒரேயடியாக உயர்த்தப்பட்டது கிடையாது. 5,000, 10,000 ரூபாய் என்று உயர்த்தி இருக்கிறார்கள். இவ்வளவு வருடங்களில் 50 ஆயிரம் வரை உயர்த்தியது ஒரேமுறை மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.50,000 என உயர்த்தி ரூ.2.5 லட்சமாக நிர்ணயித்தார்கள். இப்போது ரூ.3 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு உயர்த்தும்போது ஸ்லாப் அளவை மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாய் வரை ஒரு ஸ்லாப் லெவல் இருக்கிறது. ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் ஒரு ஸ்லாப் ஆக இருக்கிறது. இப்போது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் ரூபாய் என்று மாற்றினால், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை ஒரு இடைவெளி இருக்கும். அடுத்த இடைவெளி ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
80C பிரிவு
தற்போது ரூ.1.5 லட்சம் வரை 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் முதலீடு செய்தால், அதற்கும் வரி விலக்கு உண்டு. 80C-ன்கீழ் வழங்கப்படும் வரி விலக்கினால் சம்பளக் காரர்களின் சேமிப்பு அதிகரித்திருக்கிறது என்ற கடந்த கால விவரங்களின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கு 80C வரி விலக்கு தொகையினை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மூத்த குடிமக்கள்
தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள சீனியர் சிட்டிஷன்களுக்கு ரூ.3 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. இது ரூ.4 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இது போலவே, 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. இதனை ரூ.6 லட்சம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
நேஷனல் பென்ஷன் ஸ்கீம்
தற்போது ரூ.50,000 வரை முதலீடு செய்வதற்கு 80C-ன்கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கடந்த காலங்களோடு ஒப்பீட்டு இந்த பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செலுத்தப்படும் வங்கிக் கடனின் அசலில் வரி விலக்கு கிடையாது. ஆனால், தற்போது வீட்டில் குடியேறுவதற்கு முன்பு செலுத்தப்படும் தொகைக்கும் வரி விலக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது நிறைவேறுமா என்று தெரியவில்லை.
ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்
தற்போது சம்பளம் போன்ற செயல்பாட்டு வருமானத்துக்கு 30% வரி செலுத்த வேண்டும். இதுவே சொத்தை விற்றுக் கிடைக்கும் செயல்பாடற்ற வருமானத்துக்கு 20% வரி செலுத்தினால் போதும்.
இந்த பட்ஜெட்டில் செயல்பாடற்ற வருமானத்துக்கு வரி விகிதத்தை உயர்த்தி, 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) அதிகரிக்கலாம்.
தற்போது மியூச்சுவல் ஃபண்டில் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்றால், வரி விலக்கு இருக்கிறது. ஆர்பிட்ரேஜ் ஃபண்டில் எங்கு வருமானம் சிறப்பாக இருக்கிறதோ, அங்கு முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படாதபோது கடன் பத்திரங்களில் முதலீட்டை மாற்றிக்கொள்வார்கள். பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படும் போது கடன் பத்திரங்களிலிருந்து பங்குச் சந்தைக்கு முதலீட்டை மாற்றிக் கொள்வார்கள்.
பொதுவாக, கடன் பத்திரங்களில் முதலீட்டுக்கு மூன்று வருடங்களுக்குப் பின்பும், பங்கு சார்ந்த முதலீட்டில் ஓர் ஆண்டு முடிந்தவுடனேயும் வருமானத்துக்கான வரிச் சலுகையைப் பெற முடியும்.
ஆனால், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளுக்கும் ஓராண்டு என்று இருப்பதால், இனிவரும் காலத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே வரிச் சலுகை அல்லது வருமானத்துக்குக் குறிப்பிட்ட அளவு வரியைச் செலுத்த வேண்டும்
என்பதை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
இந்த எதிர்பார்ப்பில் எவையெல்லாம் நிறைவேறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
ரியல் எஸ்டேட் துறைக்கான எதிர்பார்ப்புகள்..!
மத்திய அரசு, 2017-18 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வந்தால் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும் என்று கிரெடாய் சென்னை தலைவர் சுரேஷ் கிருஷ்ணா விளக்கிச் சொன்னார்.
‘‘மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் தொழிலை தூக்கி நிறுத்தும் வகையில் பல்வேறு பாசிட்டிவ் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதற்கான வேண்டுகோளையும் வைத்துள்ளோம். ஏனென்றால், கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் வர்த்தகம் தேக்க நிலையில்தான் இருந்து வருகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிடும் ரியல் எஸ்டேட் பிசினஸ் குறித்த அறிவிப்புகளைப் பொறுத்தே, ரியஸ் எஸ்டேட் வர்த்தகம் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதற்கான வங்கிக் கடன் வட்டி சராசரியாக 8.7 சதவிகிதமாக இருக்கிறது. இதனை 7.5 சதவிகித அளவுக்கு குறைக்க வேண்டும். பெண்கள், முதியோர், மைனர்கள் பெயரில் வீடு வாங்கும்போது கடனுக்கான வட்டியில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டியில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
ரியஸ் எஸ்டேட் தொழிலுக்கு, தொழில்துறை அந்தஸ்து வேண்டும் என்று கேட்டுள்ளோம். அப்படி ஓர் அங்கீகாரம் கிடைத்தால் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான வங்கிக் கடன் மிகவும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தொழில் பாதுகாப்பும் இன்னும் உறுதியாகும்.
மத்திய அரசு, ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்த சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதில் இருக்கும் வரிகளைக் குறைக்க வேண்டும். விரைவில் நடைமுறைக்கு வர உள்ள ஜிஎஸ்டி-யில், ரியல் எஸ்டேட் தொழில் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளையும் குறைக்க வேண்டும். இவையெல்லாம் ரியல் எஸ்டேட்டை தூக்கி நிறுத்தக்கூடிய மிகவும் முக்கியமான கோரிக்கைகள்.
நாங்கள் வைத்துள்ள இத்தகைய கோரிக்கைகளை மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி நிறைவேற்றினால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடு பிடிக்கும். அனைத்து தரப்பு மக்களும் சொந்த வீடு வாங்கும் கனவு மெய்ப்படும்’’ என்று முடித்தார் சுரேஷ் கிருஷ்ணா.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» பட்ஜெட் 2014 : வரிச் சலுகைகளை லாபகரமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்கள்!
» தனிநபர் கடனை தவறாக பயன்படுத்தாதீர்கள்!
» தனிநபர் கடனை தவிர்க்க 6 சிறந்த கடன் திட்டங்கள்!!!!
» ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?
» ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?
» தனிநபர் கடனை தவறாக பயன்படுத்தாதீர்கள்!
» தனிநபர் கடனை தவிர்க்க 6 சிறந்த கடன் திட்டங்கள்!!!!
» ஐ.டி ரிட்டர்ன்... கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?
» ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|