வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ்

Go down

சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ் Empty சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ்

Post by தருண் Mon Jan 09, 2017 2:03 pm

சுயவிவரத் திருட்டுக்கும் இன்ஷீரன்ஸ் 32p1

இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் அதிகளவில் நடந்து வருகிறது. நமக்குத் தெரியாமலேயே ‘ஐடென்டி தெஃப்ட்’ எனப்படும் சுயவிவரங்களைத் திருடும் போக்கு அதிகரித்துள்ளது. அதற்கு இணையவழி பரிமாற்றங்கள் ஒரு முக்கிய காரணம். அண்மையில் அசோசெம் (Assocham) மற்றும் பிடபிள்யூசி (PwC) இணைந்து நடத்திய ஆய்வில் ஓர் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டுகளுக்குள் சைபர் கிரைம் 350% அதிகரித்துள்ளது. சைபர் கிரைமில் அதிகமாக திருடப்படுவது நமது சுயவிவரங்கள்தான். அதற்கு ஆன்லைன் பரிவர்த்தனை முக்கிய காரணமாக இருக்கிறது என்பதும் கூடுதல் அதிர்ச்சி.

ஐடென்டி தெஃப்ட்!

சரி, இந்த ‘ஐடென்டி தெஃப்ட்’ என்றால் என்ன?, நமது வங்கிக் கணக்கு எண்கள், கிரெடிட் கார்டு பாஸ்வேர்டுகள், நமது விலாசம் போன்றவற்றை நமக்குத் தெரியாமலேயே அல்லது விவரம் தெரியாமல் ஏமாற்றி நம்மிடம் இருந்து வாங்குவதைத்தான் ‘ஐடென்டி தெஃப்ட்’ என்கிறார்கள்.

சரி, ஆவண விவரங்களைத் திருடி என்ன செய்துவிடப் போகிறார்கள் என நினைத்து விடாதீர்கள். உங்களது வங்கி ஆன்லைன் பாஸ்வோர்டு திருடப்பட்டால், உங்களுக்கு தெரியாமலே வங்கிக் கணக்கில் பணம் எடுக்க வாய்ப்புண்டு. ஏன் உங்கள் பணத்தை தீவிரவாதக் குழுகள்கூட எடுத்துக்கொள்ள முடியும். உங்கள் ஆவணங்கள் திருடப்பட்டால், அதன் மூலம் போலி விசா எடுப்பது போன்ற முறைகேடான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.

ஆன்லைனில் கவனக்குறைவாக நம்மைப் பற்றிய விவரங்களை பதிவு செய்வதுதான் ந்ம்மைப் பற்றிய சுய விவரங்கள் திருடு போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வங்கி அல்லது கிரெடிட் கார்டுகளை வாங்குவதற்கு நாம் நமது பர்சனல் விவரங்களை அளிக்கிறோம். இதுவெல்லாம் இயந்திரங்களின் வழியாகத்தான் நடைபெறுகிறது. மெக்கானிக்கலாக நடைபெறும்போது எதிர்பாராமலோ அல்லது நமக்குத் தெரியாமலோ நமது சுயவிவரங்களை இன்னொருவர் திருட முடியும். அவ்வளவு ஏன், உங்களுக்கு போன் செய்து உங்களுடன் நயமாகப் பேசியே, உங்களைப் பற்றிய தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டுவிட முடியும். சமூக வலைதளங்கள் படர்ந்து கிடக்கும் டிஜிட்டல் உலகில் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

தடுக்கவே முடியாதா?

இந்தத் திருட்டுகளைத் தடுக்கவே முடியாது. ஆனால், சற்று கவனமாக இருந்தால் போதுமானது. தேவையில்லாமல் வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண்களை எதிலும் பதிந்தோ, எழுதியோ வைக்க வேண்டாம். அதுபோல், கிரெடிட் கார்டு பாஸ்வேர்டுகள், வங்கி மற்றும் செல்போன்களின் பாஸ்வேர்டையும் கவனக் குறைவாக கையாண்டு விடக் கூடாது. இதேபோல், பிறந்த தேதி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் பாஸ்வேர்டுகள், போன் எண்கள் போன்றவற்றையும் எழுதி வைக்காதீர்கள்.

உங்கள் ஏடிஎம் கார்டை யாராவது கையாள்வது போல் தெரிந்தால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றிவிடவும். ஏடிஎம் கார்டுகளை மிக பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஷாப்பிங் போகும் போது, கைப்பை போன்றவற்றில் இவற்றைப் போட்டு எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது. பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது பாஸ்வேர்டுகளை உரக்கச் சொல்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும்.

ஏடிஎம் கார்டுகளில் பணம் எடுத்துவிட்டு வரும் ஸ்லிப்புகளை அங்கிருக்கும் குப்பைத் தொட்டிகளில் வீச வேண்டாம். அதனைப் பத்திரமாக எடுத்து வந்து வீட்டில் கிழித்துப் போடவும். போனிலோ அல்லது இ-மெயில் வழியாகவோ தெரியாதவருக்கு உங்களைப் பற்றிய சுயவிவரங்களைப் பகிராதீர்கள்.

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள், அதன் கணக்கு எண் போன்ற விவரங்களை போனில்கூட கேட்கக்கூடும். அப்படிக் கேட்டால் சம்பந்தப்பட்ட நபர் உங்களுக்குத் தெரிந்தவராகவோ நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றிய சுய விவரங்களை அனுப்புங்கள் அல்லது தெரிவியுங்கள். அடிக்கடி உங்கள் வங்கி இருப்பை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

தெரியாத நபரிடம் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்டு இமெயில் வந்தால், அதனைத் தவிர்ப்பது நல்லது. அல்லது அது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்டவேண்டும். உங்கள் சுயவிவரம் கேட்டு போன் வந்தால் கண்டிப்பாக பதில் சொல்லாதீர்கள். பயணங் களில் உங்களது டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள அட்டைகள் மீது எப்போதும் கவனம் தேவை. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஆவணங்களின் பாதுகாப்பு முக்கியம்.

சரி, எவ்வளவு கவனமுடன் இருந்தபோதும் உங்களது ஆவணங்கள் திருடு போய் விட்டது எனில் என்ன செய்வது?

இப்போது அதனை கவர் செய்ய இன்ஷூரன்ஸ் வந்துவிட்டது. உங்களிடம் உள்ள ஆவணங்களுக்கு ஏற்ற வகையில் தனித்தனியாக நீங்கள் இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளலாம். அதற்கேற்ற வகையில் ஏராளமான இன்ஷூரன்ஸ் வகைகள் உள்ளன. முக்கியமான ஆவணங்களை நீங்கள் தொலைத்துவிட்டால், நீங்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு இன்ஷூரன்ஸ் செய்துகொள்வது எளிதான வழியாக இருக்கும். மணிபர்ஸ் தொலைந்து விட்டால் அதற்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. ஏடிஎம்-மில் நீங்கள் பணத்தை எடுக்கும்போது கொள்ளையடித்தால், அதனைத் திரும்பப் பெறவும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது.

ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றையும் இன்ஷூரன்ஸ் செய்யலாம். இந்த ஆவணங்கள் தொலைந்து போனால், அதனை நீங்கள் எளிதாகத் திரும்பப் பெற முடியும். தகுதியான நிதி நிறுவனங்கள் வழங்கும் வீட்டுக் கடன், கிரெடிட் கார்டுகள், கார் கடன் போன்றவையும் கவர் செய்யப்படுகிறது.

உங்களைப் பற்றிய விவரங்கள் திருடப்பட்டால், நீங்கள் பணத்தை இழந்தால், அது தொடர்பான வழக்குகள் வரை கவர் செய்ய முடியும். உங்களது ஆவணங்களை வைத்து யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் இன்ஷூன்ஸ் இருக்கிறது. உங்கள் பணத்தையோ, அல்லது உங்களது சொத்துக்களையோ கொள்ளை அடிக்கும் முயற்சியில் உங்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது இறப்பு ஏற்பட்டால்கூட இன்ஷூரன்ஸ் தரப்படுகிறது.

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கிரெடிட் கார்டை இன்னொருவர் பயன்படுத்திவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அதனைத் திரும்பப் பெறுவதற்கும் இன்ஷூரன்ஸ் வந்திருக்கிறது. உங்கள் மொபைல் சிம் கார்டை ஒருவர் முறைகேடாகப் பயன்படுத்தினாலோ அல்லது தொலைத்துவிட்டால்கூட விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதனைத் திரும்பப் பெறும் வகையில் இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளலாம்.

உங்களைப் பற்றிய விவரங்களை திருடு போகும்போது நடக்கும்போது உங்களுக்கு காயம் ஏற்பட்டால், உடனடியாக போலீசில் புகார் தெரிவியுங்கள். அதுபோல், கிரெடிட், டெபிட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை இழந்துவிட்டாலோ உடனடியாக போலீசிடம் புகார் தெரிவித்து எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களால் எளிதாக செட்டில்மென்ட் பெற முடியும்.

அதற்காக எதற்கெடுத்தாலும் இன்ஷூரன்ஸ் இருக்கிறதே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உஷாராக இருப்பது நம் கடமை!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum