Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
வருமானத்தில் வரலாறு படைத்த ஃபண்டுகள்!
Page 1 of 1
வருமானத்தில் வரலாறு படைத்த ஃபண்டுகள்!
உலகளவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் இந்தியாவின் பங்கு சிறிதென்றாலும், வெகுவேகமாக நமது மியூச்சுவல் ஃபண்ட் துறை வளர்ந்து வருகிறது. மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலமாக நமது மக்களால் முதலீடு செய்யப்படும் தொகை சுமார் ரூ.3,000 கோடியாகும். கடந்த வருடத்தில், நம் பங்குச் சந்தையில் வெளிநாட்டவரின் முதலீட்டுக்கு நிகராக நமது உள்நாட்டு முதலீடு வந்துள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், நமது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நம் பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுதான்! இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்நாட்டு முதலீடு அதிகரித்து, வெளிநாட்டவரின் முதலீட்டு சதவிகிதம் குறைந்துவிடும்.
1963-ல் இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்டான யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்டது. 1987-ம் ஆண்டு எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் துவங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு செபி (SEBI) சட்டம் கொண்டு வரப்பட்டது. 1993-ம் ஆண்டிலிருந்து தனியார் நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் நடத்த அனுமதிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு செபி மியூச்சுவல் ஃபண்ட் ரெகுலேஷன்ஸ் கொண்டு வரப்பட்டது. ஆக, ஒரு ஆரோக்கியமான துறை சார்ந்த சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் கடந்த 20 வருடங்களில் சிறப்பான வருமானத்தைக் கொடுத்துள்ள ஃபண்டுகளைப் பற்றி பார்ப்போமா?
20-க்கும் வருடங்களில் சிறப்பான வருமானம் தந்துள்ள ஃபண்டுகளை தேர்ந்தெடுக்க முக்கிய வடிகட்டிகளாக (filters) நாம் எடுத்துக் கொண்டது:
1. ஈக்விட்டி அல்லது பேலன்ஸுடு ஃபண்டுகளாக இருக்கவேண்டும்
2. ஃபண்டுகள் 20 வருடத்துக்கு மேல் நடப்பில் இருந்தவையாக இருக்கவேண்டும்
3. கடந்த 20 வருடங்களில் 18 சதவிகிதத்துக்கு மேல் சிஏஜிஆர் வருமானம் கொடுத்தவையாக இருக்கவேண்டும். (18% ஆண்டு வருமானம் என்பது மக்கள் பாஷையில் மாதத்துக்கு 1.50% வட்டிக்குச் சமம்.)
லார்ஜ்கேப், மல்ட்டிகேப், வரி சேமிப்பு (இ.எல்.எஸ்.எஸ்), மிட்கேப், ஸ்மால்கேப், பேலன்ஸுடு, செக்டோரல் என அனைத்து வகை ஃபண்டுகளையும் நமது கட்டுரைக்கு எடுத்துக் கொண்டோம்.
18 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ள ஃபண்டுகள்!
அவற்றில் 20 வருடங்களுக்கு மேல் நடப்பில் இருப்பவை 30 ஃபண்டுகளாகும். அந்த 30 ஃபண்டுகளில் ஆண்டுக்கு 18 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ள ஃபண்டுகள் 17 ஆகும். (பார்க்க மேலே உள்ள அட்டவணை) மேலும், இந்த அட்டவணையில் ஃபண்டுகள் டிவிடெண்ட் ஏதும் கொடுத்திருந்தால், அவை அதே ஃபண்டிலேயே ரீஇன்வெஸ்ட் செய்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையில் தரப்பட்டுள்ள 17 ஃபண்டுகளில், முதல் 7 ஃபண்டுகள் கடந்த 20 வருடங்களில் 2 வட்டிக்கு மேல் (24% சிஏஜிஆர்) வருமானத்தைக் கொடுத்துள்ளன. அந்த ஃபண்டுகளைப் பற்றிய சிறு குறிப்பு கீழே:
ஹெச்.டி.எஃப்.சி டேக்ஸ் ஸேவர் ஃபண்ட் : இது ஒரு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டாகும். தற்போது ரூ. 5,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இது கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தை லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.
சில வருடங்கள் முன்பு வரை இந்த ஃபண்ட் ஒரு மிட்கேப் ஃபண்டாக செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் இதனுடைய போட்டித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இதன் செயல்பாடு சற்று மெதுவாகவே உள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் வினை குல்கர்னி ஆவார்.
பிர்லா சன்லைஃப் டேக்ஸ் ரிலீஃப் 96 : மார்ச் 1996-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் ரூ.2,300 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர் அஜய் கர்க் ஆவார்.
இதுவும் ஒரு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டாகும். இது ஒரு மல்ட்டிகேப் ஃபண்டாகும். கிட்டத்தட்ட 47% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளன. சுந்தரம் கிளேடன், பேயர் கிராப் சயின்ஸ், ஹனிவெல் ஆட்டோமேஷன், கோட்டக் மஹிந்த்ரா, இக்ரா போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்டின் டேர்னோவர் 3% என்ற அளவில் மிகவும் குறைவாக இருப்பது, ஃபண்ட் மேனேஜர் தனது போர்ட் ஃபோலியோ மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் : இந்த ஃபண்ட் பலருக்கும் பரிச்சயமான ஒரு ஃபண்ட். ஒரு காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் விற்று இந்த ஃபண்டில் முதலீடு செய்த கதையையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தற்போது ரூ.5,600 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இது கிட்டத்தட்ட 48% சொத்துக்களை லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்துள்ளது. 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இந்த ஃபண்ட் டிவிடெண்டை வழங்கி வருகிறது. 2007-ம் ஆண்டு வரை மிகவும் சிறந்த மிட்கேப் ஃபண்டாக இது செயல்பட்டு வந்தது. 2008 பங்குச் சந்தை சரிவிலிருந்து எழுந்துவர இந்த ஃபண்டுக்கு சில காலமாகிவிட்டது.
இந்த ஃபண்டின் தற்போதைய மேனேஜர் சுனில் சிங்கானியா ஆவார். இந்த ஃபண்டின் வருமானத்தை தனியாகப் பார்க்கும்போது, நன்றாக இருந்தாலும், இதன் போட்டித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்டின் செயல்பாடு சற்றுக் குறைவுதான்.
ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி ஃபண்ட் : மிகவும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. தற்போது ரூ.15,800 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டின் மேனேஜர் மியூச்சுவல் ஃபண்ட் உலகுக்கு பரிச்சயமான பிரஷாந்த் ஜெயின்.
இதன் போர்ட்ஃபோலியோவில் 74% லார்ஜ்கேப் பங்குகளும், எஞ்சியது மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், மாருதி போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளது. நீண்ட நாள் பாரம்பர்யம் உள்ள திட்டம் என்றாலும், கடந்த சில வருடங்களாக இதனுடைய போட்டித் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், இதன் செயல்பாடு சற்று மெதுவாகவே உள்ளது.
ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட்: இது ஒரு மிட்கேப் ஃபண்டாகும். நடப்பில் இருக்கும் மிட்கேப் திட்டங்களுக்கு இது ஒரு முன்னோடி ஆகும். தற்போது ரூ.4,400 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.
இதன் போர்ட்ஃபோலியோவில் 72% மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும், எஞ்சியது லார்ஜ்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. யெஸ் பேங்க், ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ், ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ், வோல்டாஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் நீண்ட கால செயல்பாட்டை போல தற்போதும் நன்றாகவே செயல்பட்டு வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆர். ஜானகிராமன், ஹரி ஷ்யாம் சுந்தர், மற்றும் ஸ்ரீகேஷ் நாயர் ஆவார்கள்.
ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் ஃபண்ட்: ரூ.9,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை தற்போது இந்த ஃபண்ட் நிர்வகித்து வருகிறது. இதன் முதலீடுகள் 74% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும் உள்ளது.
தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டு வரும் திட்டங்களில் இதுவும் ஒன்று. கடந்த ஒரு வருட செயல்பாடு மட்டும் இதன் போட்டித் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், சற்று மெதுவாகவே உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல் போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆனந்த் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். ஜானகிராமன் ஆவார்கள்.
ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்: ப்யூர் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் இந்த ஃபண்ட், கிட்டத்தட்ட 96 சதவிகிதத்துக்கு மேல் தனது முதலீட்டை லார்ஜ்கேப்பில் வைத்துள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இந்தஸ்இந்த் பேங்க், இன்ஃபோசிஸ் போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. பெரும்பாலான லார்ஜ்கேப் ஃபண்டுகள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 20% வரை மிட்கேப் பங்குகளை வைத்துக் கொள்கின்றன. ஆனால், ப்யூர் லார்ஜ்கேப்பை ஃபோக்கஸ் செய்யும் ஒருசில ஃபண்டுகளுள் இதுவும் ஒன்று.
பங்கு சார்ந்த முதலீட்டில் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டை நாடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த ஃபண்டாகும். இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆனந்த் ராதாகிருஷ்ணன், ரோஷி ஜெயின் மற்றும் ஸ்ரீகேஷ் நாயர் ஆவார்கள்.
இந்த ஃபண்டுகளை அலசினால், பின்வரும் விஷயங்கள் நமக்குத் தெரியவரும்:
1. 20 வருடங்களுக்கு முன்பு ஒருவர் செய்த ரூ.1 லட்சம் முதலீடு, தற்போது சராசரியாக ரூ.68.52 லட்சமாக இருக்கும்.
இதே காலகட்டத்தில், இண்டெக்ஸில் செய்த ரூ 1 லட்சம் முதலீடு 8.95 அல்லது 9.72 லட்சமாகத்தான் இருந்திருக்கும்.
2. கடந்த 20 வருடங்களில் அனைத்து ஃபண்டுகளுமே ஃபிக்ஸட் டெபாஸிட்டைவிட, தங்கத்தைவிட, ரியல் எஸ்டேட்டைவிட அதிகமான வருமானத்தைக் கொடுத்துள்ளன.
3. இனி வரும் காலங்களிலும் பிற சொத்துக்களை விட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் உன்னதமான வருமானத்தைத் தர நிறையவே வாய்ப்புண்டு.
நாம் அட்டவணையில் தந்துள்ள இந்த 17 ஃபண்டுகளும் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்துள்ள போதிலும், தற்போது புதிதாக முதலீட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள், தற்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
நாம் மேலே கண்ட டாப் 7 ஃபண்டுகளும் சரி, பிற ஃபண்டுகளும் சரி, தந்துள்ள வருமானத்துக்கு ஈடாக வேறு எந்த சொத்து வகைகளும் – ரியல் எஸ்டேட், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட் உட்பட இதுவரை தந்ததில்லை; இனி தரப்போவதும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வருமானம் அனைத்தும் டாக்ஸ் ஃப்ரீ. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஒரு உன்னதமான முதலீடு என்பதில் சந்தேகமே வேண்டாம்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» லார்ஜ்கேப் ஃபண்டுகள் Vs பேலன்ஸ்டு ஃபண்டுகள் - எது பெஸ்ட்?
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» லிக்விட் ஃபண்டுகள்
» முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!
» மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்
» மியூச்சுவல் ஃபண்ட் : வரலாறு
» லிக்விட் ஃபண்டுகள்
» முதலீட்டுக்கேற்ற செக்டோரல் ஃபண்டுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|