வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிபிஎஃப் முதிர்வுத் தொகையைப் பெறுவது எப்படி?

Go down

பிபிஎஃப் முதிர்வுத் தொகையைப் பெறுவது எப்படி? Empty பிபிஎஃப் முதிர்வுத் தொகையைப் பெறுவது எப்படி?

Post by தருண் Thu Nov 17, 2016 10:41 am

பிபிஎஃப் - பொது வைப்பு நிதித் திட்டம்; இந்தத் திட்டமானது, 15 ஆண்டுகளுக்கானது. இதில் சேர்ந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்தபின், சேர்த்த பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். 15 ஆண்டுகள் நிறைவு பெற்றபின் இந்தப் பணத்தை எப்படித் திரும்ப எடுப்பது?

பிபிஎஃப் முதிர்வுத் தொகையைப் பெறுவது எப்படி? P32a

15 ஆண்டுகள் நிறைவு!

பிபிஎஃப் கணக்குத் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டால், எந்த தபால் அலுவலகத்தில் கணக்குத் தொடங்கப்பட்டதோ, அந்த அலுவலகத்தில் கணக்கை முடித்துக் கொள்ளலாம். அண்மைக் காலமாக, இந்தக் கணக்கில் சேர்த்த தொகையைத் திரும்ப எடுக்கும் போது, அது அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றப்படுவதால், முதலீட்டாளரின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள், வங்கிக் கணக்கு புத்தகம், காசோலை போன்றவற்றை எடுத்துச் செல்வது நல்லது.

பிபிஎஃப் கணக்கை 15 ஆண்டு முதிர்வுக்குப் பிறகுதான் முடிக்க முடியும். மேலும், ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை நீடித்துக்கொள்ளலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்துக்கும் வட்டி கிடைக்கும். அதேசமயம், பழைய கணக்கை முடிக்காத நிலையில், புதிய பிபிஎஃப் கணக்கை ஆரம்பிக்க முடியாது. ஏற்கெனவே உள்ள பிபிஎஃப் கணக்கை முடித்து, அந்தத் தொகையை மறு முதலீடு செய்து மீண்டும் வரிச்சலுகை பெறலாம்.

முதலீட்டாளர் முன்னரே இறந்துவிட்டால்..!

பி.பி.எஃப். கணக்கினைத் தொடங்கியவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டால் மட்டுமே கணக்கினை முன்னதாக முடிக்க முடியும். பிபிஎஃப் கணக்கில் பணம் செலுத்தி வந்தவர் இடையில், அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டால், முதலீட்டுத் தொகையை எப்படிப் பெறுவது என்பதை இறந்துபோனவரின் குடும்பத்தினர் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இறந்துபோன முதலீட்டாளர் / சந்தாதாரர் எந்த தபால் நிலையத்தில் கணக்கு வைத்து இருந்தாரோ, அங்கு வாரிசுகள் சென்றுப் படிவம் ஜி (G)-ஐ நிரப்பிக் கொடுக்கவேண்டும். அதனுடன் இறப்புச் சான்றிதழும் இணைத்துத் தரவேண்டும்.

யாரையும் நாமினியாக நியமிக்காதபட்சத்தில் இறந்தவரின் சட்டப்படியான வாரிசுகள் பிபிஎஃப் பணத்தைப் பெற முடியும். அதற்கான சான்றிதழ்கள் மற்றும் அட்டெஸ்ட்டட் செய்யப்பட்ட உயில் போன்ற ஆவணங்களைக் கூடுதலாக இணைக்கவேண்டியது இருக்கும்.

அதே சமயம், பிபிஎஃப் கணக்கில் கடன் பெறப்பட்டிருந்தால், கடனுக்குப் பொறுப்பேற்று அஃபிடெவிட் மற்றும் சந்தாதாரரின் இறப்புச் சான்றிதழ் ஸ்டாம்ப் பேப்பரில் அளிக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்கள் அளிக்கப்பட்டபின், பிபிஎஃப்-ல் உள்ள பணம் அனைத்தும் வாரிசுதாரருக்கு சம்பந்தப்பட்ட தபால் அலுவலகம் மூலமோ அல்லது வங்கி மூலமோ அளிக்கப்படும். கடன் நிலுவையில் இருந்தால், அதை கழித்துக் கொண்டு மீதித் தொகை வாரிசுதாரருக்கு அளிக்கப்படும்.

வாரிசுதாரரும் இறந்துவிட்டால், இணை வாரிசுதாரர் பிபிஎஃப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். வாரிசுதாரர் இறந்துவிட்டதற்கான சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum