Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
டெபிட், கிரெடிட் கார்டு... கொள்ளை அடிக்கும் சைபர் கிரிமினல்கள்!
Page 1 of 1
டெபிட், கிரெடிட் கார்டு... கொள்ளை அடிக்கும் சைபர் கிரிமினல்கள்!
இந்தியாவின் பிரபல வங்கிகளின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விவரங்களை சைபர் கிரிமினல்கள் களவாடிவிட்டார்கள் என்ற தகவலால் வங்கி வாடிக்கையாளர்கள் ஆடிப்போயுள்ளனர். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை தங்கள் தொழிலுக்குச் சாதகமானதாக மாற்றிக் கொண்டு கொள்ளை அடித்து வருகின்றன சில கார்டு செக்யூரிட்டி நிறுவனங்கள்.
இதுபோன்ற கார்டு செக்யூரிட்டி நிறுவனத்திடம் மாட்டிக் கொண்ட அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பேசினார் மதுரையைச் சேர்ந்த தனியார் அலுவலக ஊழியர் ஒருவர். “சில மாதங்களுக்கு முன்பு ‘ஒன்அசிஸ்ட்’ என்கிற கம்பெனிக்காரங்க டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை இனிமேல் ரிஜிஸ்டர் பண்ணனும். இது பேங்கோட புது ரூல். எங்கள் நிறுவனத்துல நீங்க ரிஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்னு போன் பண்ணாங்க.
உங்க கார்டை யாரும் மிஸ்யூஸ் பண்ண முடியாது. தொலைஞ்சு போனால் உடனே வேறு கார்டு கிடைக்கும். இதுக்கு ரெண்டு வருடத்துக்கு ரொம்பக் குறைச்சலான சர்வீஸ் சார்ஜ்தான். அதுலயும் உங்களுக்கு ஆஃபர் வந்திருக்குன்னு என்னன்னவோ சொன்னாங்க. அவங்க சொன்னதை நம்பி நானும் சரின்னு சொல்லிட்டேன். அடுத்த நிமிடமே என்னோட கிரெடிட் கார்டு அக்கவுன்டுலருந்து 4,000 ரூபாயை எடுத்துட்டாங்க. என்கிட்ட கேக்காம பணத்தை எடுத்ததுக்காகக் கடுப்பாகி, நான் வங்கிக் கணக்கு வச்சிருக்கிற பேங்கோட கஸ்டமர் கேருக்கு போன் பண்ணிக் கேட்டேன். ‘‘ஒன் அசிஸ்ட்’ என்கிற நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்ல’’னு சொல்லிட்டாங்க. உடனே அந்த ‘ஒன் அசிஸ்ட்’ நிறுவனத்துக்கு போன் செய்து, ‘என் அனுமதி பெறாமல் எப்படிப் பணம் எடுத்தீர்கள்’ என்று கேட்டேன். ‘எல்லாம் உங்க நன்மைக்குத்தான் சார். உங்க ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு நம்பரைகூட நீங்க எங்ககிட்ட ரிஜிஸ்டர் பண்ணலாம். அது தொலைந்துபோனாலும் புது ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு தருவோம்’னு சொன்னாங்க. ‘முப்பது ரூவா கொடுத்தா நம்ம ஊர் இ-சேவாவுல புது கார்டு வாங்கலாம். இதுக்கு ஏன் இவ்வளவு செலவு பண்ணனும், எனக்கு உங்க செக்யூரிட்டி வேணாம். பணத்தைத் திரும்பத் தந்துடுங்க’ என்றேன். தரவில்லை. பிற்பாடு வழக்குப் போடுவேன் என்று சொன்னவுடன், ரெண்டு வருஷம்கிறதை குறைச்சு ஒரு வருடத்துக்கு ரெண்டாயிரம் எடுத்துக்கிட்டாங்க. இது மாதிரி எத்தனை பேர்கிட்டே பணம் பறிச்சாங்களோ! பல பேர் பணம் போனாலும் கூச்சப்பட்டுக்கிட்டு வெளிய சொல்றதே இல்லை’’ என்றார்.
இப்படி ஏமாற்றுக்காரர்களிடமிருந்து வங்கி வாடிக்கையாளர்களை ஆர்பிஐ-தான் காப்பாற்றவேண்டும்.
ந. விகடன் இதுபோன்ற கார்டு செக்யூரிட்டி நிறுவனத்திடம் மாட்டிக் கொண்ட அனுபவத்தைப் பற்றி நம்மிடம் பேசினார் மதுரையைச் சேர்ந்த தனியார் அலுவலக ஊழியர் ஒருவர். “சில மாதங்களுக்கு முன்பு ‘ஒன்அசிஸ்ட்’ என்கிற கம்பெனிக்காரங்க டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை இனிமேல் ரிஜிஸ்டர் பண்ணனும். இது பேங்கோட புது ரூல். எங்கள் நிறுவனத்துல நீங்க ரிஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்னு போன் பண்ணாங்க.
உங்க கார்டை யாரும் மிஸ்யூஸ் பண்ண முடியாது. தொலைஞ்சு போனால் உடனே வேறு கார்டு கிடைக்கும். இதுக்கு ரெண்டு வருடத்துக்கு ரொம்பக் குறைச்சலான சர்வீஸ் சார்ஜ்தான். அதுலயும் உங்களுக்கு ஆஃபர் வந்திருக்குன்னு என்னன்னவோ சொன்னாங்க. அவங்க சொன்னதை நம்பி நானும் சரின்னு சொல்லிட்டேன். அடுத்த நிமிடமே என்னோட கிரெடிட் கார்டு அக்கவுன்டுலருந்து 4,000 ரூபாயை எடுத்துட்டாங்க. என்கிட்ட கேக்காம பணத்தை எடுத்ததுக்காகக் கடுப்பாகி, நான் வங்கிக் கணக்கு வச்சிருக்கிற பேங்கோட கஸ்டமர் கேருக்கு போன் பண்ணிக் கேட்டேன். ‘‘ஒன் அசிஸ்ட்’ என்கிற நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்ல’’னு சொல்லிட்டாங்க. உடனே அந்த ‘ஒன் அசிஸ்ட்’ நிறுவனத்துக்கு போன் செய்து, ‘என் அனுமதி பெறாமல் எப்படிப் பணம் எடுத்தீர்கள்’ என்று கேட்டேன். ‘எல்லாம் உங்க நன்மைக்குத்தான் சார். உங்க ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு நம்பரைகூட நீங்க எங்ககிட்ட ரிஜிஸ்டர் பண்ணலாம். அது தொலைந்துபோனாலும் புது ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு தருவோம்’னு சொன்னாங்க. ‘முப்பது ரூவா கொடுத்தா நம்ம ஊர் இ-சேவாவுல புது கார்டு வாங்கலாம். இதுக்கு ஏன் இவ்வளவு செலவு பண்ணனும், எனக்கு உங்க செக்யூரிட்டி வேணாம். பணத்தைத் திரும்பத் தந்துடுங்க’ என்றேன். தரவில்லை. பிற்பாடு வழக்குப் போடுவேன் என்று சொன்னவுடன், ரெண்டு வருஷம்கிறதை குறைச்சு ஒரு வருடத்துக்கு ரெண்டாயிரம் எடுத்துக்கிட்டாங்க. இது மாதிரி எத்தனை பேர்கிட்டே பணம் பறிச்சாங்களோ! பல பேர் பணம் போனாலும் கூச்சப்பட்டுக்கிட்டு வெளிய சொல்றதே இல்லை’’ என்றார்.
இப்படி ஏமாற்றுக்காரர்களிடமிருந்து வங்கி வாடிக்கையாளர்களை ஆர்பிஐ-தான் காப்பாற்றவேண்டும்.
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
» கிரெடிட்/டெபிட் கார்டு அபாயம்... ஒரே நிமிடத்தில் குளோனிங்!
» டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!
» கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!
» இதுக்கெல்லாம் ரெடியா? அப்டின்னா கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க!
» கிரெடிட்/டெபிட் கார்டு அபாயம்... ஒரே நிமிடத்தில் குளோனிங்!
» டெபிட் கார்டு: பின் நம்பர் பத்திரம்!
» கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!
» இதுக்கெல்லாம் ரெடியா? அப்டின்னா கிரெடிட் கார்டு வாங்கிக்கோங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|