வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!

Go down

அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Empty அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு!

Post by தருண் Tue Oct 18, 2016 3:11 pm



தபால்களைக் கொண்டுவருவதும் கொண்டு செல்வதும்தான் அஞ்சல் அலுவலகங்களின் முக்கிய வேலை என்று நாம் நினைக்கிறோம். அஞ்சல் அலுவலகங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வழங்குவது பலருக்கும் தெரியாத உண்மை.

இன்று நேற்றல்ல,1884-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகின்றன அஞ்சல் அலுவலகங்கள். அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அதிக போனஸ் கிடைக்கும் என்பதால்தான் பலரும் இதில் சேர்ந்து பலனடைந்து வருகின்றனர். அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்து முழுமையாக  தெரிந்துகொள்ள, சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் இயக்குநர் ஏ.சரவணனை சந்தித்தோம். அதுபற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.  

“அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த ஆகும் செலவு குறைவு என்பதால், அந்தத் தொகை முழுவதும் பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழியாகச் சென்று சேர்கிறது.
தற்போது, அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமாகவும், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 20,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI). முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் நிறுவனங்களின் ஊழியர்களும், இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

பாலிசி வகைகள்!

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு என்கிற இரண்டு திட்டங்களில் முழு ஆயுள் காப்பீடு, மாற்றத்தக்க ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, குறித்த கால எதிர்பார்ப்பு காப்பீடு, கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு, குழந்தைகள் பாலிசி என 6 வகைகள் இருக்கின்றன.

சிறப்பம்சங்கள்!

மற்ற நிறுவனங்கள் அளிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைவிட அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் பல சிறப்பம்சங்கள் உண்டு.

* மற்ற இன்ஷூரன்ஸ் திட்டங்களைவிட குறைந்த பிரீமியம்.

* அதிக போனஸ் (ஒரு லட்சத்துக்கு, ஒரு வருடத்துக்கு சுமார் ரூ.1,500). கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. முதிர்வுத் தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.

* மூன்று ஆண்டுகளுக்குப் பின் சுலபமான கடன் வசதி; வாரிசு நியமனம்; தேவைப்பட்டால் வாரிசை மாற்றிக் கொள்ளும் வசதி.  பணியிலிருந்து விலகி விட்டாலும் பாலிசியைத் தொடரலாம்.

* குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.20,000. அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

* பிரிமீயத்தை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.  

அதிக போனஸ் தரும் அஞ்சல் ஆயுள் காப்பீடு! Paas273

கடன் வாங்கலாம்!

அஞ்சல் அலுவலகங்களில் எடுக்கப்படும் அனைத்து வகை பாலிசிகளையும் வங்கி, நிதி நிறுவனங்களில் பிணையமாக வைத்து கடன் பெறும் வசதி உள்ளது. காலவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். 36 மாதங்கள் வரை பிரிமீயம் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு, அதனுடைய முழுமையான காலத்துக்கும் பிரிமீயம் செலுத்தப்படாவிட்டாலும் பணம் கட்டப் பட்டுள்ள வருடத்தைப் பொறுத்து முதிர்வுத் தொகை போனஸுடன் வழங்கப்படும்.

பிரீமியம் செலுத்தும் முறை!

இந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் பிரீமியம் கட்டலாம். பிரீ மியத்தை முன்னதாகவே கட்டும்போது அரை சதவிகிதம் முதல் இரண்டு சதவிகிதம் வரை தள்ளுபடி உண்டு. காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பிரிமீய முறையில் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

விதிமுறைகள்!

இந்த பாலிசிகளைக் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 55 வயதுள்ளவர்கள் எடுக்கலாம். பிறப்புச் சான்று இல்லை என்றால் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட் டவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்க முடியும். பிறப்புச் சான்று இல்லாதவர்கள் மருத்துவர்களிடம் தோராயமான வயதுச் சான்றிதழை வாங்கித் தரலாம்.  அதில் உண்மைத்தன்மை இல்லை என்று நிரூபணமானால் பாலிசி ரத்தாகும்.

யாருக்குப் பயன்படும்?

முழு ஆயுள் காப்பீடு : அதிக ஆதாயம் எதிர்பார்க்கிறவர்களுக்கும், ஒவ்வொரு மாதம் கட்டும் தொகை குறைவாகவும், முடிவில் கிடைக்கும் தொகை அதிகமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இது உகந்தது.


குறித்த கால காப்பீடு : நிதித் திட்ட மிடலை அடிப்படை எண்ணமாக கொண்டவர்களுக்கும், குறுகிய கால சேமிப்பை போல் ஓர் ஆயுள் காப்பீட்டையும் பயன்படுத்த நினைப்பவர்களுக்கும், பணி ஓய்வுக்கு முன்பே பணப்பலன்களை மொத்தமாக அடையவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கும் பொருந்தும்.

எதிர்பார்ப்பு காப்பீடு : அஞ்சல் துறையில் இருந்து குறிப்பிட்ட கால அளவில் இடையிடையே பணம் வந்தால் வசதிப்படும் என நினைப்பவர்களுக்கும், 15/20 வருடங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என நினைப்பவர்களுக்கும் இது சரியாக இருக்கும்.

கணவன் மனைவி குறித்த கால ஆயுள் காப்பீடு!

கணவர் / மனைவி எவரேனும் ஒருவர் அரசு / அரசு சார்ந்த பணியில் இருந்தபோதும் இருவரையும் இணைக்கும் இன்ஷூரன்ஸ் பாலம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், ஒரு பிரீமியம் இரு காப்பீடு வேண்டும் என
கணக்கிடுபவர்களுக்கும், 5 ஆண்டில் தொடங்கி 20 ஆண்டுவரை எப்போது வேண்டுமானாலும் முதிர்வுத் தொகை வேண்டும் என திட்டமிடுபவர்களுக்கும் இது உகந்த திட்டமாக இருக்கும்.

தமிழகம் முதலிடம்!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை கடந்த 2000-01-ம் நிதி ஆண்டிலிருந்து, 2015-16-ம் நிதி ஆண்டு வரை, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பாலிசிகளின் எண்ணிக்கை, காப்பீட்டுத் தொகை மற்றும் முதன் முறையாக பாலிசி எடுப்பவர்கள்

செலுத்தும் பிரிமீயம் தொகை என மூன்று பிரிவுகள் அடிப்படையிலும் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது” என்று பெருமிதத்துடன் முடித்தார்.

இதுவரை ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்காதவர்கள் அஞ்சல் அலுவலகத்துக்குப் போகலாமே!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum