வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை!

Go down

பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை! Empty பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை!

Post by தருண் Mon Oct 17, 2016 3:20 pm

பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை! P24a

சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார் இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு என்பது பெரிய அளவில் குறைந்து விடவில்லை. எனவே, அதிக விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

உள்ளபடி பார்த்தால், இப்படி ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக பணம் இருந்தாலோ அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி (PE - STP) என்னும் புதிய முதலீட்டு முறையின் மூலம் சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும்.

தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின் சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக உள்ளது.

சென்செக்ஸின் நெடுநாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும் (வருடம் 2000), குறைந்தபட்ச பிஇ 12 ஆகவும் (வருடம் 2008) இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்குத் தெளிவாகத் தெரிவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே. இந்த சமயத்தில் கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யாமல், மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவாகவும், குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு செய்யவேண்டும்.

ஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இந்த வேலையை நமக்காக டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.

இப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு வழிவகுக்கும் ஒரு புதிய முதலீட்டு முறையாக வந்திருக்கிறது பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டு முறை. ஐடிஎஃப்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த புதிய முதலீட்டுத் முறையிலான ஃபண்டில் நாம் முதலீடு செய்யும் தொகை முதலில் கடன் சார்ந்த திட்டங்களில் (Debt Fund) முதலீடு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டங்களுக்கு எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம் மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைவாக இருக்கும்போது அதிகமான தொகையும், தற்சமயம் இருப்பதுபோல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவான தொகையையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம் உருவாக்கிக்கொள்ளலாம்.

பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை! P25b

இந்த பிஇ - எஸ்டிபி என்பது எஸ்ஐபி மற்றும் எஸ்டிபி போன்ற ஒரு முதலீட்டு முறையே. டைனமிக் ஈக்விட்டி திட்டங்களும், பிஇ - எஸ்டிபிக்கும் உள்ள ஒரு முக்கியமான ஒற்றுமை, சந்தையின் பிஇ-யைப் பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகளில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்த பிஇ - எஸ்டிபி மூலம் பங்கு சார்ந்த எந்தவொரு திட்டத்திலும் நம் முதலீட்டை நம் முயற்சி ஏதுமின்றி தானாக (Automatic Transfer) மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த முதலீட்டு முறையின்படி, பிஇ 16-க்குக் கீழ் இருக்கும்போது கடன் சார்ந்த திட்டத்தில் இருந்து பங்கு சார்ந்த திட்டத்துக்கு மாறும் தொகை ஐந்து மடங்காகவும், பிஇ 16 முதல் 19-க்குள் இருக்கும்போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும், பிஇ 19-க்கு மேல் இருக்கும்போது மாறும் தொகை ஒரு மடங்காகவும் இருக்கும்.

பிஇ - எஸ்டிபி : அதிக லாபம் தரும் - புதிய முதலீட்டு முறை! P25c

சந்தை இறங்கி இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக முதலீடும், சந்தை ஏறி இருக்கும்போது குறைந்த முதலீடும் செய்கிறோம். சாதாரண எஸ்டிபி மூலம் இப்படி செய்வதைவிட, பிஇ - எஸ்டிபி மூலம் செய்யும்போது நமக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மேலும், நாம் வாங்கும் யூனிட்டுகளின் என்ஏவி பிஇ - எஸ்டிபி மூலம் வாங்கும்போது நார்மல் எஸ்டிபி-யைவிடக் குறைவாக இருக்கிறது. (பார்க்க அட்டவணை 1).

இந்த பிஇ - எஸ்டிபி வழிமுறைபடி கடந்த 10 வருடங்களில் முதலீடு செய்திருந்தால், வாங்கும் யூனிட் மதிப்பு எவ்வாறு சாதாரண எஸ்டிபி-யை விட குறைவாக உள்ளது என்பதை அட்டவணை 2-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். எனவே நார்மல் எஸ்டிபி-யைவிட பிஇ - எஸ்டிபி மூலம் கடன் திட்டங்களில் இருந்து பங்கு திட்டங்களுக்கு முதலீடு செய்வது அதிக லாபம் பெற ஏதுவாக இருக்கும்!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum