வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி?

Go down

ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி? Empty ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி?

Post by தருண் Mon Oct 17, 2016 2:42 pm

ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி? P68a

ஒரு ஊரில் பிபிஎஃப் கணக்கைத் துவங்கினாலும், பிற்பாடு பணி நிமித்தம் காரணமாக மற்றொரு நகரத்துக்குப் செல்லவேண்டிய நிலை நம்மில் பலருக்கு ஏற்படத்தான் செய்கிறது. இப்படி வேறொரு நகரத்துக்குச் சென்றபின், பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சி அடையும் முன்பே, அதிலிருக்கும் பணத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ திரும்பப் பெறவேண்டும் எனில் அதற்கு பிபிஎஃப் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இன்றைய நிலையில், நீங்கள் பிபிஎஃப் அலுவலகத்துக்குச் செல்லாமலே, இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தபடி உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை திரும்பப் பெறுவதற்கான வழிகள் உருவாகிவிட்டன.

வேறு ஒரு நகரத்தில் இருந்தபடி...!

இதுவரை, எஸ்பிஐ அல்லது பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி போன்ற சில பொதுத் துறை வங்கிகளில் பிபிஎஃப் கணக்கை வைத்திருப்​பவர்கள் மட்டுமே வேறு ஒரு நகரத்தில் இருந்தாலும் பிபிஎஃப் பணத்தை அந்த அலுவலகத்துக்குச் செல்லாமலே பெறமுடியும் என்கிற நிலை இருந்தது. உங்கள் பிபிஎஃப் கணக்கு தபால் அலுவலகத்தில் இருந்தால், நீங்கள் வேறு ஒரு நகரத்தில் இருந்தபடி உங்களால் பணத்தை பெறமுடியாது. உங்கள் பிபிஎஃப் கணக்கை தபால் அலுவலகத்தில் இருந்து வங்கிக்கு மாற்றியபின் பின்வரும் ஸ்டெப்களின்படி நடந்தால், நீங்களும் பிபிஎஃப் பணத்தை எங்கு இருந்து வேண்டுமானாலும் எளிதாகப் பெறலாம்.

ஸ்டெப் 1 : உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களைத் தயார் செய்யுங்கள்!

உங்கள் பிபிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான படிவம் சி, உங்கள் பணம் எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ரத்து செய்யப்பட்ட காசோலை, உங்கள் அடையாள மற்றும் முகவரிச் சான்று, உங்கள் பிபிஎஃப் கணக்கு புத்தகம் (உங்களிடம் இருந்தால் மட்டும்) உள்ளிட்ட உங்கள் கேஒய்சி சார்ந்த ஆவணங்களை முதலில் ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆவணங்கள் எதிலும் நீங்கள் கையெழுத்திட வேண்டாம். ஏனெனில், வங்கி அதிகாரிகள் முன்னிலையில்தான் இந்த ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.

ஸ்டெப் 2: உள்ளூர் வங்கிக் கிளைக்கு செல்லுங்கள்!

அடுத்தபடியாக, நீங்கள் தற்போது எந்த ஊரில் வசித்து வருகிறீர்களோ, அந்த ஊரில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று, ‘என்னுடைய பிபிஎஃப் கணக்கு வேறு ஒரு ஊரில் உள்ளது; நான் என்னுடைய பிபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறவேண்டும்’ என அந்த வங்கி அதிகாரியிடம் சொல்லுங்கள். உங்களுடைய ஆவணங்களுக்கு சான்றளிக்குமாறு அவரிடம் கேளுங்கள்.

அவர் உங்களுடைய ஆவணங்களில் கையெழுத்​திடுமாறு கேட்பார். அதன்பின் வங்கியாளர்கள் ஆவணங்களில் கையொப்பம் அல்லது சான்றொப்பம் அளித்து, உங்கள் ஆவணம் சரியாக உள்ளது என்பதை தெரிவிப்பார்கள். இது மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கியாளர் உங்களுடைய ஆவணத்தில் அவருடைய பெயர் மற்றும் கையொப்பக் குறியீட்டைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நடந்தால்தான் உங்கள் சான்றொப்பம் முழுமை அடையும்.

ஊருவிட்டு ஊரு வந்தும்... பிபிஎஃப் பணத்தை பெறுவது எப்படி? P69a

ஸ்டெப் 3: உங்களுடைய ஆவணங்களை அதிவேக அல்லது பதிவுத் தபால் மூலமாக பிபிஎஃப் மையக் கிளைக்கு அனுப்பவும்!

வங்கி ஊழியர் உங்களுடைய ஆவணங்களைச் சரிபார்த்து, சான்றொப்பம் முடித்ததும், அதை அவர்களே வைத்துக்கொண்டு, பிபிஎஃப் மையக் கிளைக்கு உங்களுடைய ஆவணங்களை அனுப்பி வைப்பதாக சொல்வார்கள். அப்படி சொல்லும்போது அவர்களுடைய கையொப்பம் மற்றும் முத்திரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆவணங்களை தந்ததற்கான சான்று உங்களிடம் இருக்கும்.

இல்லையெனில், உங்கள் ஆவணங்களை அதிவேக அல்லது பதிவுத் தபால் மூலம் எங்கு பிபிஎஃப் கணக்கை முதலில் தொடங்கினீர்களோ, அங்கு அனுப்பவேண்டும். இதில் முக்கியமான விஷயம், நீங்கள் அதிவேக அல்லது பதிவுத் தபால் மூலமாகவே அனுப்பவேண்டும். அப்போதுதான் உங்கள் ஆவணங்கள் எப்போது போய் சேர்ந்தது என்ற விவரம் உங்களுக்குத் தெரியவரும். அது மட்டுமின்றி, தபால் அலுவலகம் வழியாக உங்கள் ஆவணங்களை அனுப்புவதால், ஏதாவது தவறு நேர்ந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தகவல் பெற முடியும்.

ஸ்டெப் 4: என்இஎஃப்டி / ஆர்.டி.ஜி.எஸ் மூலம் உங்கள் பிபிஎஃப் பணத்தை பெறுங்கள்!

உங்களுடைய உண்மையான ஆவணங்கள் பிபிஎஃப் அலுவலகத்துக்குக் கிடைத்தபிறகு, அதை அவர்கள் ஒருமுறை பரிசோதித்த பின்னர், உங்களுடைய பிபிஎஃப் முதிர்ச்சி அடைந்த பணம் என்இஎஃப்டி அல்லது ஆர்.டி.ஜி.எஸ் (NEFT OR RTGS) மூலம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். இதற்குமுன் வங்கிகள் பிபிஎஃப் பணத்தை வரைவோலையாக அளித்து வந்தனர். இப்போது மின்னணு முறையில் ஆர்டிஜிஎஸ் வசதி மூலம் பணம் அனுப்பப்படுகிறது.

இந்த வழிமுறைகளால் பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சி அடையும்போதுதான் என்றில்லை, இடையிலும் பணத்தை எடுக்கலாம்.

ஆனால், ஏழு ஆண்டுகள் முடிந்தபிறகே பிபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum