வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்?

Go down

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்? Empty ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்?

Post by தருண் Tue Jul 26, 2016 2:08 pm

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்? P19a

இத்தனை நாளும் நம்மவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டை நோக்கியே சென்று கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் பார்வை கடன் பத்திரங்கள் மீதும் திரும்பி இருக்கிறது. கடன் பத்திரங்கள் எல்லோருக்கும் ஏற்றதுதானா, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கும் கடன் பத்திரங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம், யாருக்கு எது பெஸ்ட் என்று பார்ப்போம். ஃபிக்ஸட் டெபாசிட் பற்றி நம்மில் பலருக்கும் நன்கு தெரியும் என்பதால், கடன் பத்திரங்களைப் பற்றி மட்டும் விரிவாகச் சொல்கிறேன்.

நிறுவனங்கள் தங்களது நிறுவன வளர்ச்சிக்காகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தேவைப்படும் நிதியை பொது மக்களிடமிருந்து பெறுவதற்குக் கடன் பத்திரங்களை வெளியிடு கின்றன. கடன் வாங்கும் நிறுவனத்துக்கும்/ அரசாங்கத்துக்கும் மற்றும் கடன் தரும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் உருவாகும் ஒப்பந்தத்தைத்தான் பாண்டு என்று குறிப்பிடுகிறோம்.

இதில் முதலீடு செய்பவர் களுக்கு அவர்கள் முதலீடு செய்த தொகைக்கான வட்டியை வழங்குவார்கள். முதலீட்டுக் காலம் முடிந்தபிறகு முதலீட்டாளருக்கு முதலீடு செய்த பணத்தைத் திரும்ப வழங்கிவிடுவார்கள்.

கடன் பத்திரங்களின் பல்வேறு வகைகள்!

கடன் பத்திரங்கள் பல வகைப் பட்டவை. ஒவ்வொன்றையும் சுருக்கமாக பார்ப்போம்.

1. கார்ப்பரேட் நிறுவனங்கள், நான்-கன்வெர்ட்டபிள் டிபஞ்சர் வடிவில் கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.

2. பொதுத்துறை நிறுவனங்கள் வரிச் சலுகை பாண்டுகளை (டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்) வெளியிடும். இதில் முதலீடு செய்யும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடை யாது. இவ்வகை வெளியீடுகளை பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிடுவதால், முதலீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

3.வெளிநாட்டு முதலீட்டாளர் கள் முதலீடு செய்வதற்காக வங்கிகள் மசாலா பாண்டுகளை வெளியிடுகின்றன. இந்த வகை பாண்டுகள் வெளிநாட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். இந்தியாவில் இருக்கும் நபர்கள் இதில் முதலீடு செய்ய முடியாது.

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்? P20a

4.டீப் டிஸ்கவுன்ட் பாண்டுகளை வங்கிகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்த வகை பான்டில் முகமதிப்பு, முதிர்வுத் தொகைக்கு இணையாக இருக்கும். இதில் முதலீடு செய்யும் தொகைக்கான வட்டியானது முதிர்வின்போது மட்டுமே திரும்பக் கிடைக்கும்.

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

1. கடன் பத்திரங்களில் வட்டி அதிகமாக கிடைக்கும். அதே சமயம், நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், முதலீடு செய்யும் முன் அந்த வெளியீட்டுக்கான தரக் குறியீடு என்ன என்பதை பார்க்க வேண்டும். ஏஏஏ சான்றிதழ் இருந்தால் அதிக பாதுகாப்பு. மைனஸ் தரக்குறியீடுள்ள பாண்டுகளில் முதலீடு செய்யக் கூடாது.

2. கடன் பத்திரங்களின் காலம் அதிகமாக இருப்பதால் (5 / 10 / 15 வருடம்) முதிர்வு காலத்துக்கு முன்பாக பாண்டுகளை திரும்ப பெற புட் ஆப்ஷன், நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப பெற கால் ஆப்ஷன் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

3. கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சலுகை கிடையாது. வரிச்சலுகை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதல்ல.

4. கடன் பத்திரங்களில் காலம் முடிவடைவதற்குள் பாண்டை பங்குச் சந்தை மூலம் விற்றால் அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். பாண்டில் முதலீடு செய்து மூன்று வருடங்களுக்கு விற்றால் கிடைக்கும் ஆதாயத்தை அவருடைய வருமானத்துடன் சேர்க்க வேண்டும். மூன்றாண் டுக்கு மேல் விற்றால் பண வீக்க சரிகட்டலுக்கு பிறகு 20% வரி செலுத்த வேண்டும்.

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்? P20b

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை போல நிலையான வருமானம் தரக் கூடிய முதலீடாக கடன் பத்திரங்கள் இருந்தாலும் இவ்விரண்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. (பார்க்க அட்டவணை)

யாருக்கு எந்த முதலீடு?

சற்று ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கும் மற்றும் தங்களுடைய போர்ட் ஃபோலியோவை பரவலாக்க விரும்பும் முதலீட்டா ளர்களுக்கும் கடன் பத்திரங்கள் ஏற்றது. அதே சமயம், குறைந்த வருமான வரி வரம்புக்குள் வரும் முதலீட்டாளர்களுக்கு வங்கி வைப்பு நிதியைவிட கடன் பத்திரங்களில் சற்று கூடுதல் வருமானம் கிடைப்பதால், அவர்களுக்கும் ஏற்ற முதலீடாக இது உள்ளது.

கடன் பத்திரங்களின் சிறப்பு அம்சங்கள்!

ஃபிக்ஸட் டெபாசிட் Vs கடன் பத்திரங்கள் - யாருக்கு எது பெஸ்ட்? P21a

வங்கி வைப்பு நிதியை விட வட்டி சற்று கூடுதலாக இருக்கும்.

5 வருடம், 10 வருடம் 15 வருடங்கள் என நீண்ட கால முதலீடுகளாக இருக்கும்.

நிலையான வருமானம் கிடைக்கும். முதலீடு செய்த தொகைக்கான வட்டியை காலாண்டு / அரையாண்டு / ஆண்டுக்கு ஒரு முறை என முதலீட்டாளரின் விருப்பத்துக்கேற்ப பெற முடியும்.

சில கடன் பத்திரங்கள் பட்டியல் இடப்படுவதால் அதன் முதிர்வு காலத்துக்கு முன்பே நம்மால் விற்க முடியும்.

கடன் பத்திரங்களை டீமேட் முறையிலும் வைத்துக் கொள்ளலாம்.

வழங்கப்படும் வட்டிக்கு வரி பிடித்தம் கிடையாது.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum