வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது?

Go down

மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது? Empty மியூச்சுவல் ஃபண்ட்: டிவிடெண்ட், குரோத் ஆப்ஷன்! யாருக்கு எது சிறந்தது?

Post by தருண் Fri Nov 14, 2014 2:48 pm

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கடந்த ஒரு வருடமாக சந்தையின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருப்பதால் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானமும் மிக அதிகமாக உள்ளது. இதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தவிர, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விளம்பரங்கள், அதுகுறித்த விழிப்பு உணர்வு கூட்டம் என ஃபண்ட் நிறுவனங்கள்  பல்வேறு வழிகளில் முதலீட்டாளரின்  கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வரும் குழப்பம் இதுதான். அனைத்துஃபண்டுகளிலும் குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு பிரிவு இருக்கும். இதில் எந்த வகையைத் தேர்ந்தெடுப்பது, அது நமக்கு சரியான தேர்வாக இருக்குமா என்பது குறித்த குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். இந்தப் பிரிவுகள் யாருக்கு ஏற்றது என்பது குறித்து நிதி ஆலோசகர் வி.டி.அரசு விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.

''அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் டிவிடெண்ட், குரோத் என இரண்டு பிரிவுகள் இருக்கும். இதை  முதலீட்டாளரின் தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதாவது, டிவிடெண்ட் பிரிவை ஓய்வு பெற்றவர்களும், தொடர்ந்து பணம் தேவைப்படுபவர்களும், நிதி சார்ந்த ஒழுக்கம் உடையவர்களும் தேர்ந்தெடுக்கலாம்.

அதாவது, ஓய்வு பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பணம் தேவை என நினைப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். கிடைக்கும் டிவிடெண்ட் பணத்தை  சரியாக திட்டமிட்டு செலவு செய்வேன் என்பவர்களும் அந்தப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சியைப் பொறுத்து இந்த டிவிடெண்ட் சதவிகிதம் இருக்கும். இது ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் என்பது உறுதி கிடையாது. அதிகமான வளர்ச்சி இருக்கும்போது சில நிறுவனங்கள் வருடத்துக்கு இரண்டுமுறை  டிவிடெண்ட் வழங்கும்.  மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை.

இதில் டிவிடெண்டாகத் தரப்படும் மதிப்புக்கேற்ப யூனிட்களின் என்ஏவி குறையும் என்பதை முதலீட்டாளர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.  

அடுத்து, குரோத் ஃபண்ட். இந்தப் பிரிவில்  முதலீட்டுக் காலத்தில்  முதலீட்டாளருக்கு எந்தவிதமான வருமானமும் கிடைக்காது. ஆனால், முதலீடு செய்யும் ஃபண்ட் வளர்ச்சியில் இருக்கும். அதாவது, ஃபண்டின் வருமானத்தைப் பொறுத்து, என்ஏவியின் மதிப்பு  இருக்கும். நீண்ட கால தேவை இருப்பவர்கள் இந்தப் பிரிவு முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.

அதாவது, குழந்தையின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால தேவைகளுக்கு முதலீடு செய்பவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள் இந்தவகையான பிரிவை தேர்ந்தெடுக்கலாம்" என்றார்.

வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் ஆப்ஷன் சிறந்ததாக இருக்கும். இதிலும் டிவிடெண்ட் ஆப்ஷன் உள்ளது. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் திட்டத்தில் சிக்கல் இருக்கும். அதாவது, உங்கள் முதலீட்டுக்கு வழங்கப்படும் டிவிடெண்டானது மீண்டும் அதே ஃபண்டில் முதலீடு செய்யப்படும்.

இப்படி செய்யும்போது ஏற்கெனவே செய்த முதலீட்டுக்கு மூன்று வருடம் லாக் இன் பீரியட் இருக்கும். இந்த டிவிடெண்ட் ரீஇன்வெஸ்ட்மென்ட் திட்டத்தின்கீழ் முதலீடு செய்யும் முதலீட்டுக்கு மீண்டும் மூன்று வருடம் லாக் இன் பீரியட் இருக்கும். இதனால் அவசர தேவைகளுக்கு பணம் எடுப்பதில் சிக்கல் வரும்.

முதலீடு செய்யும்போது கவனக்குறைவு அல்லது பிரிவு குறித்து தெரியாமல், முதலீடு செய்திருந்தால் அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு உங்களுடைய விரும்பத்தை கடிதமாக எழுதிக்கொடுத்து மாற்ற முடியும்.

உங்களின் தேவையைப் பொறுத்து சரியான ஃபண்ட் ஆப்ஷன் புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்.
- முக நூல்
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum