வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்...

Go down

ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்... Empty ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்...

Post by தருண் Wed Jan 25, 2017 10:45 am

ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்... 48p1

இந்தியா தொழில் வளர்ச்சிமிக்க நாடாக வளர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவாகவே இருக்கிறது. அதற்கு முதலில் தொழில்களும் தொழில் முனைவோர்களும் அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ உள்ளிட்ட பல திட்டங்களை அவர் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார்.

ஆனால், தொழில்முனைவோர்கள் தங்களது தொழில்களை அவ்வளவு எளிதில் தொடங்கிவிட முடிவதில்லை. காரணம், பெரும்பாலானவர்களுக்கு முதலீடு செய்ய பணம் இருப்பதில்லை. என்னதான் வங்கிகள் தொழில் செய்வதற்கு கடன் தரும் திட்டங்களை வைத்திருந்தாலும், புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. இந்த நிலையில், வெற்றி பெற வாய்ப்புள்ள நல்ல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணக்காரர்களுடன், பெரு நிறுவனங்களும் முதலீடு செய்ய முன்வந்தன. இதன்பிறகுதான் ஏஞ்சல் ஃபண்டிங், வென்சர் கேபிட்டல், பிரைவேட் ஈக்விட்டி போன்றவை உருவாகின.

இவர்கள் புதிய தொழில் முனைவோர்களையும், புதிய சிந்தனைகளையும் அடையாளம் கண்டு அவற்றில் முதலீடு செய்யத் தயாராக இருந்தனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை, சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி நிர்ணயித்து அதனைக் கண்காணித்தும் வருகிறது.

இவற்றில் ‘ஏஞ்சல் ஃபண்டிங்’ என்பது ஒரு ஸ்டார்ட் அப்-புக்கு தேவையான ஆரம்பக் கட்ட முதலீடு ஆகும். இதன் மூலம் தொழில் ஓரளவு வளர்ந்தவுடன் சில வருடங்களுக்குப் பிறகு செய்யப்படும் முதலீடு, வென்சர் கேபிட்டல் ஆகும். அதற்கும் மேலாக செய்யப்படும் பெரும் முதலீடு பிரைவேட் ஈக்விட்டி ஆகும்.

இவற்றில் ஆரம்பக் கட்ட முதலீடான ஏஞ்சல் ஃபண்டிங் முதலீட்டில், செபியினால் நிர்ணயிக்கப் பட்ட விதிமுறைகள் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக இல்லாத சூழலை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. இதனால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், தொழில்முனைவோர்களும் முதலீடு கிடைக்காமல் திண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் செபி, ‘இன்ஃபோசிஸ்’ என். ஆர். நாராயணமூர்த்தி தலைமையில் மாற்று முதலீட்டுக் கொள்கை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் ‘ஏஞ்சல் ஃபண்டிங்’ முதலீட்டுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்தப் புதிய விதிகள் இதோ:

* ஒரு ஸ்டார்ட் அப்-பில் முதலீடு செய்யும் ஏஞ்சல் முதலீட் டாளர்களின் எண்ணிக்கை 49-லிருந்து 200-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏஞ்சல் ஃபண்ட் முதலீடு என்பதன் விளக்கம், தொழில் துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஸ்டார்ட் அப் பாலிசியில் இருக்கும் விளக்கத்தை ஒத்திருக்கும்.

* வென்சர் கேபிட்டல் முதலீட்டின் கீழ் இருக்கும் ஒரு நிறுவனத்தில், ஏஞ்சல் முதலீட்டா ளர்கள் செய்யும் முதலீட்டை வைத்திருக்கும் குறைந்தபட்ச காலம், மூன்று ஆண்டுகளாக இருந்தது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ‘ஏஞ்சல் ஃபண்டிங்’ செய்யலாம் என்பது ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது.

* குறைந்தபட்ச முதலீடு என்பது ரூ.50 லட்சத்தி லிருந்து ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தங்களின் மொத்த முதலீட்டு தொகையில் 25% வரை முதலீடு செய்யலாம்.

ஏஞ்சல் ஃபண்டில் புதிய விதிமுறைகள்... 48p2

இந்தப் புதிய விதிமுறைகள் மூலம் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் புதிய தொழில்முனைவோர்களும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடு களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வென்சர் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் நடராஜனிடம் கேட்டோம்.

“இவற்றை புதிய விதிமுறைகள் என்று சொல்ல முடியாது. இவை ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைச் சற்றுத் தளர்த்தி ‘மேம்படுத்தப்பட்ட மாற்றங்களாக (Increment Changes)’ மட்டுமே உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்தப் புதிய மாற்றங்கள் நிச்சயம் பயனுள்ள தாகவே இருக்கும்.

ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளில் மாற்றம் செய்யாத நிலையில், இதுபோன்ற மாற்றங்களால் பெரிய வித்தியாசங்களைக் கொண்டு வந்துவிட முடியாது.

எந்தவொரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும், அதில் பங்குகளுக்கு எதிராக செய்யப்படும் முதலீடு என்பது அதன் அடக்க விலையில் இருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், அதைவிட அதிகமான விலையில் முதலீடு செய்யும்போது அந்த முதலீட்டுக்கு வரி பிடிக்கப்படும் என்று நிதிச் சட்டம் 2012-ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வரி 33 சதவிகிதமாக இருக்கும். அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தால், அதில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு.

ஆனால், பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு அங்கீகார சான்றிதழ் எளிதாகக் கிடைப்பதில்லை. அத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தாங்கள் பெறும் முதலீட்டுக்கு 33% வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. 2013, 2014-ம் வருடங்களைக் காட்டிலும் 2015-ம் ஆண்டில் அதிக அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீடு களைப் பெற்றுள்ளன. ஆனால், 2016-ல் 2015-ம் வருடத்தைக் காட்டிலும், 2016-ல் குறைவாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ‘பிசினஸ் டு பிசினஸ்’ நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், ‘பிசினஸ் டு கன்ஸ்யூமர்’ ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழிலில் நிலைத்து நிற்பதில் சற்று தடுமாறவே செய்கின்றன. ஆரம்பத்தில் இதுபோன்ற நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பின்பு, அவை சரியாக செயல்படவில்லை எனில், முதலீடு செய்வதை நிறுத்திவிடுகிறார்கள்.

தற்போது செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கணிசமான அளவில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என்றாலும், அடிப்படைப் பிரச்னைகளைக் களைவதிலும் கவனம் செலுத்தினால்தான் பல தொழில்முனைவோர்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பயனடையும்” என்றார். மத்திய அரசாங்கம் கவனிக்குமா?
- ந .விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum