வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Go down

ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? Empty ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Post by தருண் Thu Aug 11, 2016 2:26 pm

ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? P25a

சமீபத்தில் சில நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்கிக் (பைபேக்) கொள்வதாக அறிவித்தன. இப்படி பங்குகளை திரும்ப வாங்குவதால், முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்ன லாபம், பைபேக்கின்போது முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்.எம்.ஆர் ஷேர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமனிடம் கேட்டபோது விரிவாக விளக்கினார்.

ஷேர் பைபேக் என்றால்...?

ஒரு நிறுவனம் அதனுடைய பங்குகளுக்கு தானே ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து, அதனிடம் இருக்கும் உபரிப் பணத்தைக் கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கினால் அதற்கு பெயர் ஷேர் பைபேக். இதற்கு முதலில் நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவின் ஒப்புதல் பெற்று, பின்னர் செபியிடமும், பங்குச் சந்தை களிடமும் அனுமதி வாங்க வேண்டும்.

எப்படி பைபேக் செய்யப்படும்?

பொதுவாக இரண்டு விதத்தில் பைபேக் செய்யப்படும். 1. முதலீட்டாளர்களிடம் நேரடியாக மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் பைபேக் அறிவிப்பை தெரிவித்து பங்குகளை வாங்குவது. 2 . பங்குச் சந்தையில் நேரடியாக வாங்குவது. இந்த இரண்டு முறைக்கும் பொது அறிவிப்பு செய்வார்கள். பைபேக்குக்கான விலையை நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கும். இப்படி பைபேக் அறிவிக்கப்படும் போது பங்குகளை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இனி நிறுவனங்கள் எப்போது எல்லாம் ஷேர் பைபேக் செய்யும் என்பதை பார்க்கலாம்.

அதிகப்படியான பணம்!

ஒரு நிறுவனத்திடம் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இல்லை என்றால், அனுபவம் இல்லாத துறைகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அந்த பணத்தினை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது நல்லது என்கிற அடிப்படையில் ஒரு நிறுவனம் பைபேக் செய்யும். பொதுவாக, இப்படி ஒரு நிறுவனம் அதனிடம் இருக்கும் தொகையை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பைபேக் அறிவிக்கிறது என்றால் அந்தப் பங்குகளை விற்றுவிடுவது நல்லது. பங்குகளை திரும்ப வாங்கும் நிறுவனங்களின் பேலன்ஸ் ஷீட்களை ஆராய்ந்து, அதில் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்டுக்கோ, புதிய தொழிற்சாலைகளை கட்டுவதற்கோ அல்லது விரிவாக்கத்துக்கோ பணம் ஒதுக்கவில்லை எனில், தாராளமாக பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாம்.

ஷேர் பைபேக்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? P26a

பங்கு விலையை நிலைப்படுத்த!

பங்கின் விலை பெரிய காரணங்கள் இல்லாமல் இறங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நிறுவனம் அதனுடைய பங்கின் விலை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்கை பைபேக் செய்யும். இதனால் அந்தப் பங்கின் விலை வீழ்ச்சி நின்று அன்றைய தேதியில் வெளிவரும் நிறுவனம் தொடர்பான செய்திகளால் பங்கின் விலையில் மாற்றம் நிகழத் தொடங்கும்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை, தொடர்ந்து இறங்கும் போது, நிறுவனம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு கீழ் வரும்போது அதன் நிறுவனப் பங்குகளை பைபேக் செய்யும். அப்படி செய்வதால், அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அந்த குறிப்பிட்ட விலைக்கு கீழே செல்வது பெரிய அளவில் குறையும். இப்படிப்பட்ட பைபேக்குகளின்போது அவசரப் பட்டு பங்குகளை விற்காமல் காத்திருந்தால் பங்குகளின் விலை மெதுவாக ஏற்றம் காணும்போது லாபம் பார்க்கலாம்.

இபிஎஸ் உயர்த்த!

நிறுவனத்தின் நிகர லாபத்தை, மொத்தமுள்ள பங்குகளால் வகுத்தால் கிடைப்பது இபிஎஸ். ஷேர் பைபேக் முறையில் எவ்வளவு பங்குகள் திரும்ப வாங்கப்படுகிறதோ, அந்த பங்குகள் நிறுவனத்தின் ஈக்விட்டி கேப்பிட்டல் தொகையிலிருந்து கழிக்கப்படும். எனவே, பங்கு களின் எண்ணிக்கை குறையும். அதனால் இபிஎஸ் (ஒரு பங்கு வருவாய்) தொகை உயரும். இதனால் பி/இ விகிதம் குறையும். அதனால், பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இது போன்ற பைபேக்குகளில், நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் மற்றும் கேஷ்ஃப்ளோ ஸ்டேட்மென்ட்களை பார்த்து முடிவு எடுக்கவும். முக்கியமாக, சந்தையில் அதே துறை சார்ந்த மற்ற நிறுவனங்களையும் ஆராய்ந்து முடிவு செய்யவும்.

பைபேக் நன்மைகள்!

ஒரு நிறுவனத்தின் பங்குகள் பை பேக் செய்யப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் டிவிடெண்ட் தொகை மற்றும் புத்தக மதிப்பு அதிகரிக்கும்.

புரமோட்டார்களின் கைவசத்தில் இருக்கும் பங்கு எண்ணிக்கை விகிதம் அதிகரிக்கும். இதனால் புரமோட்டார் களின் முடிவு எடுக்கும் பலம் அதிகரிக்கும். எனவே, மற்ற நிறுவனங் களிலிருந்து இருந்துவரும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (Merger and Acquisition) பிரச்னைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

பைபேக் தீமைகள்!

புரமோட்டாரிடமே பெரிய அளவில் முடிவு எடுக்கக்கூடிய பலம் இருப்பதால், ஒரு தவறான முடிவு, நிறுவனத்தின் பங்கு விலையை வீழ்த்தக் கூடியதாக அமையலாம். பைபேக் செய்வதால் நிறுவனத்திடம் இருக்கும் கையிருப்பு தொகை குறையும். எனவே, எதிர்காலத்தில் விரிவாக்கம், புதிய தொழில் நுட்பங்கள் போன்றவைகளை நிறுவனத்தில் கொண்டு வருவது, வளர்ச்சிப் பணிகளுக்கு தேவைப் படும் பணத்தை கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம்.

சுருக்கமாக!

கடன் அதிகமாக இருந்து, நிகர விற்பனையும் குறைவாக இருக்கும் நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை பைபேக் செய்கிறது எனில், உடனடியாக விற்று விடலாம். கடன் குறைவாக இருந்து, விற்பனை வளர்ச்சி விகிதம், அந்த நிறுவனத்தின் துறை சார்ந்த வளர்ச்சியை விட அதிகமாக இருந்தால் விற்கத் தேவையில்லை’’என்று முடித்தார்.

நிறுவனங்கள் இனி பைபேக் அறிவித்தால், நிதானமாக முடிவெடுப்பீர்கள்தானே!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum